Friday, December 18, 2009

அத்தியாயம் 5

மூணாந் தெருவில் பரமசிவ நாடார் எழுவது வயதில் கல்யாணம் முடித்துக் கொண்டார் என்று அவர் காதில் விழுந்தாலும் பெரிதாகத் தோன்றவில்லை. பரமசிவ நாடார் என்றதும் அவருக்கு நினைவுக்கு வருவது அவர் அந்தக் காலத்தில் பனைமரக்காட்டில் நிலத்தில் குழிதோண்டி பணத்தை புதைத்து வைத்துப் பாதுகாத்த்துதான். பேச்சுவாக்கில் சொன்னார். இப்படி ஒரு வழி இருக்குமென்று பிள்ளைக்குத் தோன்றியதில்லை. அதனால் தான் ஞாபகம் இருந்த்து. “ரெண்டு பொண்டாட்டி கட்டாதவன் எவன் இருக்கான் ? எனக்கென்னவோ நல்ல நேரம். இதுமாதிரி ஒண்ணும் இல்ல.”
ஒருநாள் அந்தப் பெண் இட்லி வாங்க வந்த போது பார்த்தார். அவள் தூரத்தில் வரும்போதே ஜாடை காட்டி முனகிவிட்டான் முருகன். இதுமாதிரி குசும்புகளில் எல்லாப் பயகளும் வெவரமாத்தான் இருக்கானுக. ரொம்பச் சின்னப் பிள்ளை. இருபது வயசு கூட இருக்காது. நல்ல கிண்ணென்ற உடற்கட்டு. இட்லி சாம்பார் சட்னியைக் கொடுத்து அனுப்பும் போதே ஆளைக் கணித்தார்.
பரமசிவ நாடார் காம்பவுண்டில் குடியிருக்கும் பெருமாள் டீக் குடிக்க வந்த போது சொன்னான் “அதுவா ஏங்கேக்கிறீங்க, உங்களுக்கெதுக்குங்க…என்று சொன்னாலும், தொடர்ந்தான். “அது தட்டழிஞ்ச கழுத. … புருஷன் கைவிட்டானாம். பலவட்ற….தாய் தகப்பன் இல்லை. பாவந்தான். அங்கயும் இங்கயுமாத் திரியுது. அவனவன் பூந்து விளையாடுதான்”
“அதாங் கிழவன் துள்ளி விளையாடுதானா?”
“சத்த்த்தைக் குறைத்துக் கொண்டு சொன்னாள்” கிழவன் எங்க விளையாடுதான். பக்கத்துவீட்டு செல்லப்பாண்டியன் தான் விளையாடுதான்.
என்னடா கரும்ம். எழவெடுத்த பயபுள்ளிக. சடையப்ப பிள்ளை அமைதியானார். அவர் மன உறுத்தல் ஆறவில்லை. காலையில கண்மாய்க்குப் போறவழியில செல்லப் பாண்டியனைப் பார்த்தார். “ஏய் என்ன உங்காம்புவுண்ட்ல கிழவன் கல்யாணமாம்ல”
‘உங்களுக்கு என்ன சாமி? அந்தப் பெருமாளு அடிக்க கூத்து தாங்கல. கிழவனுக்கு வேலைபாக்க வந்துருக்கா. அவருக்கும் அவரு பொண்ட்டாட்டிக்கும் சமைக்க அந்தக் கஞ்சக்கூதி மகன் சோறு போடமாட்டக்கானாம். அந்தப் பிச்சக்காரத் தேவடியா, ஏம் பொண்டாட்டிட்ட நெதம் கஞ்சி வாங்கிட்டு போறா அவ”கோபத்தில் கிழவனைத் திட்டிக் கொண்டே போனான்.
பிள்ளைக்கு மத்தியானத் தூக்க்ம் இல்லை. எந்தப் பயலும் உண்மையச் சொல்ல மாட்டுக்கானுக. அவனவன் வசதிக்கேப்ப கதைய மாத்தறானுக. இவனுகளும் அரைத் தூக்கத்திலயும், மயக்கத்திலயும் பேசுதானுக போல. உண்மையத் தெரிஞ்சும் என்ன பிரயோசனம்? கண்டுபிடிச்சா என்ன பரிசா கிடைக்கப் போகுது? ஒண்ணுமே மாறப் போறதில்ல. நம்ம நம்ம சோலியப் பாக்கவேண்டியதுதான். நினைத்தாரே தவிர, முடியவில்லை. பிள்ளைக்கு இளகிய மனசு. யார் கஷ்டப் பட்டாலும், அவருக்குத் தாங்காது. கோமதியம்மா கிண்டல் பண்ணுவா. “ பெரிய மஹாத்மா காந்தி”. ஒன்றிரண்டு நாட்கள் இட்லி வடை ஏதாவது வாங்க வந்தாள். அவள் ஊர்க்காரன் மாடன் சொன்னான்” இது எத்திக்கிட்டு திரியிர கழுத. இதுக்குப் பேரு கல்யாணமா? எனக்குத் தெரிஞ்சு பரமசிவ நாடார் எழாவது ஆளு. பேரு பொன்னாத்தா. கண்ணும் காலும் ஒரு இட்த்ல நிற்காது”.
அவருக்கு என்னமோ அவளைப் பார்க்கப் பாவமாக இருந்த்து. இவர்கள் சொல்வது போல் மினுக்கலும் சிலுப்பும் இல்லை. இந்தப் பயகள்ட்ட ஏதவது சொல்லப் போனா தனக்குக் குழந்தை இல்லை என்பதால் சபலம் அது இது என்று சொல்லுவாங்க. குத்திக் காட்றது மாதிரி இருக்கும். முதுகுக்குப் பின்னால் எதுவானாலும் பேசுவார்கள்.
ஒருநாள் மூக்கைச் சிந்திக் கொண்டே வந்தாள். கையில் ஒரு துணிமூட்டை.. கண்கள் சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்த்து. கடையிலிருந்த பெஞ்சில் உட்காராமல் தரையில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டாள்.
ஒரு டீயும் வடையும் கொடுங்க” கடையில மந்தமான நேரம். முருகன் பலசரக்குக் கடைக்குப் போயிருந்தான். பிள்ளைக்குக் குறுகுறுப்பு.. என்ன ஆச்சு?
ஒண்ணுக்கு ரெண்டாய்க் கொடுத்தார். “ஒரு வடை போதும்”
“சும்மா சாப்பிடு”..என்னம்மா ஊருக்கா?.
.மூணு மணிக்குத்தான் மேட்வீல் வரும். தூத்துக்குடிக்கு. அவரிடம் சொன்னால் என்ன கிழிக்கப் போறாரு.
டீயைக் குடித்துவிட்டுச் சொன்னாள். “நாடார் துரத்திவிட்டாரு. ..” அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. “எங்க போகன்னே தெரியல.” கொஞ்சநேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியானார். இப்படியெல்லாம் நடக்குமா? முறித்துக் கொள்வது அவ்வளவு எளிதா? இரண்டு நாள் முன்னால் செல்லப் பாண்டியனும் பெருமாளும் அவளைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள்.
“கடையில வேலைக்கு வச்சுக்குங்க சாமி. புண்ணியமாப் போவும்.” கையெடுத்து கும்பிட்டாள். அவர் மனதில் ஏதோ அழுத்தியது. “கொடுக்கதக் கொடுங்க.. ஒரு வேளைச் சோறு போதும். நல்லா வேலை செய்வேன்” கண்ணிலிருந்து ஒன்றிரண்டு திவலைகள் விழுந்தன. ஒருவேளைச் சோத்துக்கு இந்தப் பாடா?
“எங்கிட்ட ஆளு இருக்காம்மா. ரொம்ப ஒண்ணும் ஓட்டங்கிடையாது”
“ஒண்ணும் தரவேண்டாம். ஒரு வெளச்சோறு….”
ஏற்கனவே இவளைப் பத்தி ஊர்ல நல்ல பேரு இல்ல. அவளை வேலைக்கு வைத்துக் கொள்வதை நினைத்துப் பார்க்க்க்கூட முடியாது. கோமதி, முருகன், ஊரு. கொஞ்ச நேரம் அமைதியானார். அவளும் தலைமுடியையும் துணி மூட்டையும் இறுக்கிக் கொண்டாள். அவருக்கும் புரிந்த்து.
“எந்த ஊரு’
‘முடிமனுக்கு அந்தப் பக்கம் கருமாப்பட்டி’
அம்மா அப்பா இருக்காகளா?
‘யாரும் இல்ல’
அண்ணந் தம்பி கூடப் பிறந்தவுக.
‘யாரும் இல்ல’ குரல் சலித்திருந்த்து. எத்த்னையோ தடவைகள் இதே பதில்களைச் சொல்லியிருந்தாள்.
யாரும் இல்லைன்னா எப்படி?
‘அதான எனக்கும் தெரியல. முந்தானை மூடிக்கொண்டு லேசாக்க் குலுங்கினாள் “சொல்லி அழக்கூட ஆளில்ல”
“இப்ப எந்த ஊருக்கு கிளம்பிட்டுரிக்க”
நாடாரு இரண்டு ரூபாய் கொடுத்தாரு. தூத்துக்குடி போறேன்”
“அங்க போயி?”
எங்கயாவது வேலை பாக்கணும். பிழைக்கணும்ல”
கொஞ்ச நேரத்தில் பஸ் ஏறிப் போய்விட்டாள். சடையப்ப பிள்ளைக்குத் தூக்கமில்லை. அன்று முருகனுக்குப் புரியவில்லை. பிள்ளை ஏன் சிடுசிடுப்பாக இருக்கிறார்?”
பரமசிவ நாடாரே ஒருநாள் மாட்டிக்கொண்டார். “பலவட்றக் கழுத. இதுக்கு முன்னால ஆறேழு பேரு கூட இருந்திருக்கா. வீட்டுக்காரிக்கு வேல செய்ய முடியல. எனக்கும் எழுவது வயசாச்சு. பாவப்பட்ட புள்ள சோத்தப் போட்டு ஏதாவது கொடுப்போம்னு பாத்தா. துப்புக் கெட்ட தேவடியா.. இங்கயும் வந்து என் சட்டைப் பைல கைய வக்கா. அவ பெட்டியில நோண்டுறா. ஊர் மேயறா. கொஞ்சம் சோறு தின்னதும் கொழுப்பு ஏறிறுது. துரத்திவிட்டேன்” பெருமித்த்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
பரமசிவ நாடார் மொதப் பொண்டாட்டி நாண்டுக் கிட்டுச் செத்தா. இரண்டாவது கூலிக்காரப் பய கூட ஓடிப்போனா. மூணாங்காரி இவர் குடுமிய புடிச்சிக்கிட்ருக்கா.
முடிமன்ல இருந்து வந்த பால் கார்ர் சொன்னார். “அந்தக் கழுதையா..எட்டு வயசில இருந்தே இப்படித்தான் அலையுதா. எங்க வீட்ல கூட வேல பாத்தா. வீட்டுக்காரிக்கும் அவளுக்கும் ஆகல. கொஞ்சம் நிறுத்திக் கொண்டார்.
அவர் எதையோ சொல்லாமல் விடுவது போலிருந்த்து. வெளியூருக்கு வேலைக்குப் போனாலும் கொஞ்சநாளைக்கு பிறகு ஓடி வந்திருவா. கூலிக்காரன் கல்யாணம் பண்ணான் நகை வேணும்னு துரத்திவிட்டான். அவ எங்க போவா நகைக்கு…
‘நல்ல வாட்டசாட்டமானவ” ரசித்துச் சொல்வது போலிருந்த்து.
சின்ன வயசு அதனால கண் டவனும் சேத்துக்கிடுதான். அவளும் சோத்துக்கு என்ன செய்வா. பிள்ளையும் கதை கேட்டுவிட்டுச் சும்மா இருக்க வேண்டியதுதான்.
* * * * * * * * *

No comments:

Post a Comment