Monday, October 19, 2009

Bald and pitiful

Many people concede that there are standards of Beauty. One of the factors determining beauty and handsomeness is the amount of hair on your head, and not the amout of mass inside or the amount of work it does. Long hair is considered more beautiful for females and denser its spread, it is considered handsome for males. No religious text has prescribed or defined beauty, for no oracles referring to hair has been found. It is only the poets and lazy people who have defined beauty or handsomeness. It may be recalled that until sometime ago, males had grown long hair like females and in some communities they still consider it sacred for males to grow hair. It appears that god is already bald or he is growing bald for he has not passed any commandmens on this subject.

Hairlessness creates permanent scar not only on the head but also in the mind and heart of the males. It is a nightmare for a man of twenty to foresee a future without a strand of hair on his head. But there are others more fortunate who are bald before twenty five. Fortunate in that they can reconcile with their baldness with boldness in mind without waiting for the hairlessness to come at a later age.

One of my friend had tried the medicines prescribed in a television advertisement by a one- eyed Bengali doctor who talked of curing baldness thousands of times. As they say if you repeat something thousands of times, people tend to believe. My friend had spent thousands of nights worried about his bald head and its impact on his illicit love with another man’s wife and scores of girls with whom he had fallen in love. Except for the illicit love who cared for something more than the bald head, none of them were impressed either by his baldness or by the growth of hair on his head visible only to himself. Like god, it was visible to the blessed and invisible to the not so blessed. For these scores of girls were not blessed. Blessed not to marry him.

He had spent hundreds of rupees and many hundreds of hours before mirrors looking for any improvement in his lock of hair. After sometime he also tried to hide his baldness with the camouflage of long stretched hair from the back of his head, bringing it to cover the bald patch like a general bringing in additional troops to cover his fighting front. After 5 years of counting his hairstrands he left the habit only when there was none to count. All the girls he he tried to love also left him high and dry by that time. I narrated this only to show that girls do not love a man without a hair on his head but they may love a man who has nothing inside.

Life of a Bald headed man is not all that gloomy. There are some advantages of baldness. People, particularly the intellectual type, may think that you must be wise, for most of the wise men are bald. If you keep some books in your drawing room and pretend to read books by wisemen there are chances that you may be considered a wise man and people may flock to you for updating their knowledge. This may a diversionary tactic. They may not discuss about your glowing hair or shining forehead, but about something else. They may over rate your age but also your wisdom. Your wife may have lice but it will never stay in your head. When all your male collegues may scratch their head in office albeit for bringing out some idea, but actually for killing a louse that is irritataing at the wrong moment, you need not. It may show itself in your hairless head with distinction and others may wonder as to how is it possible for lice to stay on your slippery head.

Once when my friend, who had know me only as a hairless emperor, saw my photograph of a bygone era when I had curled, step-cut hair, he wondered that it was a museum piece. For he had not known the times when combs were useless to keep my hair in order. I forgave him.

When you have a fight with your wife, if you are bald, she may not be able to catch you by your hair. You may have the advantage of doing that. Some people ( particularly biologists) may say that the reason for their baldness is exactly that their wives had caught them by their hair and when it was repeated often, their genes had developed baldness in defence. Think of biology. Baldness is the result of evolution. When men lived in forest, they needed hair to protect their skull from the heat, rain cold and what not. Now, when most of the time, Man stays inside, there is no need for such a protection. He can run into an AC room to cool his head.
Increasing I notice that women (particularly working women and old women, who have neither time nor energy for looking after their locks of hair) also prefer shorter hair.

Oh, my bald headed brotheren, don’t be bald and pitiful. Think yourself bold and beautiful(even if others don't think so}.

Sunday, October 11, 2009

தேர்வு


அம்மா அருணுக்கு சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

”ஜகத்குரு சங்கரர்”

“ஜகத்குரு எப்படிம்மா ஆகமுடியும்?” ஏழாவது நூற்றாண்டில் நம்மால் அமெரிக்கா போயிருக்க முடியுமா? அப்ப அமெரிக்காவை கண்டே பிடிக்கலையே?” அருண் படிப்பைத் தொடங்கியதும் பிடித்துக் கொண்டான். அம்மா அமைதியானாள். என்ன பதில் சொல்லுவாள்?”

“சரி நீ இங்க கவனி. அஞ்சடிக்கப் போகுது மணி. இன்னும் ஒண்ணுமே படிக்கல”. அவள் அர்த்தம் சொன்னாள் “முப்பத்தி ரண்டு வயதில் ஆதி சங்கரர் பகவானுடன் கலந்தார்”.

“கலந்தார் அப்படின்னா?”

“அதாவது கலந்தார்னா இறந்தார்”

“அம்மா கலந்தார்ங்கறதுக்கும் இறந்தார்ங்கறதுக்கும் என்ன வித்யாசம்?”

“எல்லாம் ஒண்ணுதான். அதாவது கடவுளுடன் இணைந்தார்.”

“அம்மா நீங்க என்ன சொல்றீங்க? ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?”

“தவம் பண்ணிக்கிட்டே இருந்தா ஆகும்.”

“என்ன தவம் பண்ணாரா? சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டாரே? உடம்புல சத்தெல்லாம் தீந்துருக்கும். செத்துப் போனார். பாவம். பைத்தியக்கார்ர் தான் அவரும். வீணாச் செத்துப் போனார். இல்லாட்டி எழுவது வயது வரைக்கும் இருந்திருப்பார்”.

“மேலே சொல்ல விடுடா. லொட லொடன்னு பேச்சு. போதும். இது ஏன்? அது ஏன்? வாயப் பொத்திகிட்டு இருக்க முடியாது. நீயே இதப் படி. எல்லாப் பிள்ளைகளும் தானாப் படிக்கிறாங்க. நீயாப் படிச்சா அப்பத் தெரியும்.” அம்மா போய்விட்டாள்.

அருணுக்கு ஆண்டுத் தேர்வு தொடங்கப் போகிறது. அவனை விட அம்மாவுக்குத்தான் தேர்வு.

“அப்பா… எப்பவும் டெஸ்ட், எக்ஸாம். சரியா தீபாவளிக்கு முன்னால் எக்ஸாம். ஏன் வருது?. போன வருஷமும் இதே மாதிரித்தான“. தேர்வை விட தீபாவளிக்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். “இந்தத் தடவை அந்த லக்ஷ்மியை விடமாட்டேன். ரொம்ப வெடிகளை எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டிருந்தா. நான் வெடி நிறைய வச்சிருந்தா அவளுக்கென்ன? உஹும்னு அழ ஆரம்பிச்சிடுறா”

அருண் மெல்ல சத்தமில்லாமல் வந்தான். “அப்பா, ஒரு நிமிஷம் வா.”
“ஏன் சொல்லு”.
அவன் உதட்டை மூடி விரலால் பொத்தி அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினான். அப்பா அவன் பின்னால் சென்றார். எங்கே போகிறானென்று புரியவில்லை. ஜன்னல் பக்கம் விரலைக்காட்டி கிசுகிசுத்தான். “அங்கே பாரு”.
அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனே அப்பாவின் தலையை பிடித்து இப்படியும் அப்படியும் அசைத்துச் சொன்னான். “அங்க பாரு அதோ”.
“அங்க என்ன?”
-2-
“மெல்ல ஜன்னலுக்குப் பின்னால பாருன்னா”.
“அங்க என்ன சொல்லு”
“அணில் குட்டி. மூணு. எப்படித் தூங்குதுன்னு பாரு?
ஜன்னலுக்குப் பக்கத்தில் கொய்யா மரம் இருந்தது. பலதடவை எட்டிப் பார்த்த பின் அப்பா அதைக் கண்ட்தும் அவர் கண்களும் விரிந்தன. “என்ன அழகாத் தூங்குது பாரேன். நானே முதல் தடவையாப் பாக்கேன்”.
“குட்டி அணில்கள். ஜாலியா தூங்குது பாரேன். ஒண்ணோட வால் இன்னொண்ணோட மூஞ்சில விழுந்திருக்கு.”
அப்பத்பாத்து அப்பாவுக்கு தும்மல் வந்த்து.
“மெல்லப்பா. பாரு ஒண்ணு முழிச்சிருச்சு. ச்ச்ச. இப்ப மூணும் ஓடிப் போயிரும். உங்களுக்கு இப்பத்தான் தும்மல் வரும்”.
எதுவரைக்கும் பாடம் படிச்சேன்னு கேட்க விரும்பினார் அப்பா. அவன் கவனம் வேறு விஷயத்தில் இருப்பதைப் பார்த்து பேசத் தயங்கினார்.
அம்மா அருணைத் தேடிக்கொண்டிருந்தாள். “இங்க பாரு. இப்பத்தான் அவனை இங்க விட்டுட்டு அடுகளைக்கு போனேன். இந்தப் பய என்னதான் செய்யணும்னு நெனக்கான்? கொஞ்சமாவது இவனுக்கு படிப்பில கவனம் இருக்கா? “அரூரூண்…. “ அவள் குரல் ஒரு கிலோமீட்டருக்கு மேல் கேட்டிருக்கும். திரும்பி வந்து அப்பாவைப் பார்த்துக் கூச்சலிட்டாள். “நீங்க புத்தகத்துக்குள்ள பூந்துக்கோங்க. எங்க போனான்? சொல்லுங்க. நான் அவனுக்கு சமஸ்க்ருத்த்தை முடிக்கணும். அவனுக்கு ஒண்ணுமே தெரியல. உங்க்கிட்ட கேட்டுட்டுப் போனானா?”
“எங்கிட்ட கேட்டுட்டு யாரும் போறதில்ல. நீக் கேட்டுட்டுப் போறயா?”
“ஆமா. அதுக்கென்ன? இப்பக் கேக்கறேன். சொல்லுங்க. அட ராமா. நான் என்ன செய்வேன். நாளைக்கு டெஸ்ட்ல இவன் என்ன எழுதுவான்? இவனுக்கு ஒண்ணுமே தெரியலையே?”
“வந்து சேர்வான். காலைல இருந்து படிச்சிருக்கான். பத்து நிமிஷம் சும்மா இருக்க மாட்டயா? சின்னப் பையந்தான. கொஞ்சம் ஃப்ரீயா விடேன்”
“இவனுக்கு வரும்னா நான் ஏன் இவன் பின்னால அலைறேன்.சமஸ்க்ருத்தை சொல்றான். அதை ஏன் பாடமா வச்சாங்கங்றான். என்ன ஆவான் இவன். அல்ஜீப்ரா எதுக்கு? ஜியாகிரபி எதுக்கு? பேசாம இவன வீட்லயே உட்கார வச்சிர வேண்டியதுதான்”. அவள் அடுக்களைக்குள் போய்விட்டாள்.
“அம்மா..” அருணின் குரல் கேட்டது. “வந்திட்டியா? வாடா கண்ணு” அம்மா அடுக்களையை விட்டு வெளியில் வந்தாள். ஆனால் அருணை எங்கும் காணவில்லை. “வா..இங்க வா.. உன்ன வெளுக்கல எம் பேரு… இல்ல” அடுக்களைக்குத் திரும்பினாள்.
அருண் கட்டிலுக்குக் கீழே ஒளிந்திருந்தான். ரொம்பச் சின்ன இடம். இதுக்குள் அவன் இருப்பானென்று கற்பனை செய்திருக்க முடியாது. “என்னை யாருங் கண்டே பிடிக்க முடியலயே.. நீங்க பேசுனதெல்லாம் கேட்டனே. அப்பாகூட எப்படிச் சண்ட போட்டீங்க?...”

3
அவன் கண்கள் புத்தகத்தையே பார்துக் கொண்டிருந்தன. தன்னம்பிக்கையுடன் நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தான். “ அப்பா… குட்டி நாய் இருந்த்தில்ல அது செத்துப் போச்சு.” ஒரு நொடி தலையை உயர்த்திச் சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான். “பாவம்,.. பசுமாடு மாதிரிச் செத்துப் போச்சு”
இப்போது அப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. நாய் மாதிரிச் செத்தான் என்று கேள்விப்பட்ட்துண்டு. பசுமாதிரிச் செத்தது என்றால்..”எப்படி?”
“பசுமாடு செத்த்து மாதிரி செத்த்து. இழுத்து இழுத்து மூச்சுவிட்டு…” அருண் அதே மாதிரி மூச்சுவிட்டுக் காட்டினான்.
“மாடு சாகறத நீ எங்க பாத்த?”
“நிறைய தடவை பத்திருக்கேன். எங்க ஸ்கூலுக்குப் பின்னால் பெரிய இடங்கடக்குல்ல. அதுல. வாய்ல இருந்து நுரையா வரும். நானும் நாராயணனும் தினம் பாப்போம். எதைத்தின்னுட்டு அது சாகும்னு தெரியல. மாட்டு டாக்டரும் வருவார். அப்படியும் சாகும். அங்க நிறைய பட்டாம்பூச்சியும் செத்துக் கிடக்கும். சரி, இப்ப இது என்னன்னு சொல்லுங்கப்பா..” நோட்டின் கடைசிப் பக்கத்தில் ஏதோ பறவையின் கால் சுவடுகள் போல வரைந்திருந்தான். அதைக் காட்டிக் கேட்டான்.
அப்பாவுக்குப் புரியவில்லை. படித்துக் கொண்டிருக்கும் போது, நாய், பசுமாடு, பட்டாம்பூச்சி, பறவையின் கால்விரல்கள். இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
“மயிலின் காலுப்பா. மழையில மயிலின் கால்தடம் இப்படித்தான் இருக்கும். எங்க ஸ்கூலுக்குப் பின்னால் நிறைய மயிலும் இருக்கும்”.
அருண், என்ன வெட்டிப் பேச்சு பேசிக்கிட்ருக்க. எதெல்லாம் படிச்ச. என்ன ஆனாலும் சரி இன்னைக்கு உன்னை விளையாடப் போக விடமாட்டேன். இதுல அப்பாவும் உங்கூட சேந்து வெட்டிப் பேச்சுப் பேச ஆரம்பிச்சாச்சு”
அம்மா சொன்னதைக் கேட்டு, அப்பாவும் அருணும் உடனே நேராக உட்கார்ந்தனர்.
“அப்பா, ஃபோன்ல எல்லாரும் என்னை அக்கான்னு சொல்றாங்கப்பா” சிரித்துக் கொண்டு கேட்டான் ”சொல்லுங்கப்பா, ஏன்?”
அப்பாவுக்குப் புரியவில்லை. “சொல்லுடா.., ஏன் என்ன நடந்தது?
“இப்ப நான் ஃபோனை எடுத்தன்ல. அதுல பேசுனாங்க. அக்கா வணக்கம், மிஸ்ராஜி இருக்காங்களா? எல்லோரும் இப்படித்தான் சொல்ராங்க”.
“அக்காவாகுறது என்ன பிரச்சனை?
அவன் அண்ணன் பிரஷாந்த் காதிலும் அது விழுந்த்து. “முதல்ல எங்கிட்டயும் அதுமாதிரித்தான் கேப்பாங்க. பிறகு, நான் தொண்டைய கரகரப்பாக்கிட்டேன். இப்ப யாரும் கேக்றதில்ல”
“ஊம்.. எப்படி?”
பிரஷாந்த் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஓடிவிட்டான்.

4
”அடுத்த வருஷம், எனக்கும் டீன் ஏஜ் ஆகிவிடும். அப்பறம் யாரும் அக்கான்னு சொல்ல மாட்டாங்க”
“இப்பப் படிக்கிறயா?. எழுதப் படிக்க வருதோ இல்லையோ, டீன் ஏஜ் வந்துரும்”. அம்மா இரைந்தாள்.
“உங்களுக்குத் திட்றதத் தவிர என்ன தெரியும்? எப்பப் பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க.”
அடுத்த நாள் வரலாறு-புவியியல் தேர்வு. அம்மா சரித்திரத்தில் வீக். அவனிடமே விட்டுவிட்டாள். அப்பாவையும் அவனையும் திட்டிக்கொண்டே “இவன்ட்ட கேள்வி கேட்டுப் பாருங்க. பெரிய சரித்திரப் பேரறிஞர்கள்” கோபமும் சிரிப்பும் லாவா மாதிரிப் பொங்கி வரும்போது நமது பதிலுக்குக் காத்திருப்பதில்லை. பதில் பேச நம்மாலும் முடிவதில்லை. அருணுக்கு இது தெரியும். சொன்னதால் எந்தப் பயனும் இல்லையென்று அவன் முகம் காட்டியது. அப்பா மீதும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவனுக்குத் தெரியும்.
அவன் அப்பா பக்கத்தில் உட்கார்ந்து, சரித்திரப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அப்பா பலமுறை எச்சரித்தும் முதல் பாடத்தில் இரண்டாவது வரியிலேயே படிப்பது நின்று விட்ட்து.
“அப்பா, சொக்குத் தாத்தா நம்ம வீட்டுக்கு ஏன் வர்றதில்ல? கேட்டுவிட்டு அப்பாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். “அவரு பேசறதக் கூட நான் பார்த்த்தில்லை. சொல்லுங்களேன். ஏன் வர்றதில்லை?
முதல் சுதந்திரப் போரின் தோல்விகளைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்த போது இதைக் கேட்டான்.
“அப்பறமா சொல்றேன்.”
“முதல்ல சொல்லு. எப்பவும் இப்படித்தான். அப்புறம் சொல்றேன்னு சொல்லவே மாட்டீங்க.”
“சரித்திரத் தேர்வுக்கப்புறம் நிச்சயமாச் சொல்லுவேன்”. அப்பா பக்கத்தில் வந்த்தும், இந்த மனப்பாடம் செய்ற படிப்பு நின்றுவிடும். அருணின் பூகோளப் புத்தகம் காணாமல் போய்விட்ட்து. இது முதல் தடவை அல்ல. மாசத் தேர்வென்றாலும், வருடத் தேர்வென்றாலும் ஏதாவதொரு பாடப் புத்தகம் தொலைந்துவிடும்.
ரொம்ப நேரமாக எந்தச் சத்தமும் இல்லையென்று அம்மாவுக்குப் பதற்றம். “அருண் இவ்வளவு கவனத்துடன் படிக்க மாட்டானே?”
அருண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். “அம்மா, புத்தகம் கிடைக்கல”
“அதான பாத்தேன். அதைத்தான் சத்தமில்லாம தேடுறியா? ரொம்பக் கவனமாப் படிச்சிக்கிட்டு இருக்கான்னு நான் நினச்சுக்கிட்ருக்கேன். அருண் நீ ஒவ்வொரு தடவையும் இதைத்தான் செய்ற. அண்ணன் புத்தகம் எப்படித் தொலையாம இருக்கு. இப்ப புத்தகம் கிடைக்கல உன்னைத் தொலச்சிட்டேன், கொன்னுபோட்ருவேன். தேடு நல்லாத் தேடு.”


அம்மாவின் கூப்பாடு, அவனுக்கு பறந்துவரும் கத்தி மாதிரி. உடனே ஓடிப்போய்த் தேட ஆரம்பித்தான். கட்டிலுக்குக் கீழே, சோஃபாவின் மெத்தையின் கீழே, பழைய பத்திரிக்கைகளுக்குப் பின்னால், அவன் புத்தகங்கள் இருக்கும் இடங்கள் இவைதான். சந்து பொந்துகளில் அறிந்தும் வைப்பான் அறியாமலும் வைப்பான். அப்பா சரித்திரப் பாடத்தில் டெஸ்ட் வைக்கும் நாளில் சரியாக, சரித்திரப் புத்தகம் காணாமல் போய்விடும். டெஸ்டு முகூர்த்தம் முடிந்த்த்டும் கிடைத்துவிடும். புவியியல் புத்தகம் காணாமல் போய்விடும். தீப்பெட்டி அட்டை, பழைய பேட்டரி செல், சாக்பீஸ், ஸ்டிக்கர், டபிள்யூ.டபிள்யூ.ஈ. அட்டைகள், சாக்லெட் தாள்கள், சச்சின் டெண்டுல்கர் படம் நாய்களின் கழுத்தில் கட்டும் மணி இதெல்லாம் ஒருபோதும் காணாமல் போனதில்லை.
“அருண், தண்ணீர் டாங்கி வழியாப் போகாதெ. அங்க ஒரு கடி நாய் இருக்கு. ராமச்சந்திரன் மகளைக் கடிச்சிருச்சு”.
“அம்மா, அது எந்தக் கலர் நாய்?”
“கறுப்பு மூஞ்சி செவலை உடம்பு”
“அதுக்கு என்னைப் பிடிக்கும்மா. எஞ்சத்தம் கேட்ட்தும் ஓடி வந்திரும். அதுக்கு நானும் எட்வர்ட்டும் ரொட்டி கொடுப்போம்.” அம்மா பையன் இருவரும் புத்தகம் டெஸ்ட், மிரட்டல் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.
“நான் சொல்றேன். நீ அங்க போகாதே. கடிச்சிட்டாப் பதினாலு ஊசி இவ்ள இவ்ள பெருசாப் போடுவாங்க. வயித்தில. புரியுதா?”. அருண் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. தன் நாயின் மீது அவ்வளவு நம்பிக்கை. “அம்மா, அது ஒண்ணும் ரொம்பப் பெரிசு இல்லையே. நேத்துக் கூட அது கூட வெளையாண்ட்டோம். ரொம்ப ஜாலியா இருந்த்து. மணின்னு கூப்பிட்டேன். இன்னொரு பையனைப் பார்த்துச் சாடை காட்டினேன். அவனத் துரத்தி விரட்டுச்சு. அவன் ஓடியே போய் வீட்டுக்குள்ள புகுந்துக்கிட்டான். இப்படி சேட்டைகளை விபரிக்கும் போது அவன் முகம் காலைச் சூரியன் போல் ஜொலிக்கும்.
அன்று அம்மா ஒரு திருமணத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவளுக்கு எல்லாவற்றிலும் பதட்டம். அவனையும் கூட்டிப் போக வேண்டுமென்று நினைத்தாள். பிள்ளைகளோடு விளையாடுவான். ஏதாவது சாப்பிட்டுக் கொள்வான். நாளக்கிப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொள்ளலாம். “எல்லா ஹோம் ஒர்க்கும் முடிச்சால்தான் கூட்டிப் போவேன்” அவள் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொண்ட்தாகவே தெரியவில்லை. அமைதியாக இருந்தான்.
“காதில விழுதா? டெஸ்ட் முடிக்கலன்னா கூட்டிப் போக மாட்டேன்”
அவன் சொன்னான் “நான் வரலே. யார் போவா அங்க. ஒரே போரடிக்கும்”. அப்பாவும் அவனை வருமாறு அழைத்தார். “நான் படிக்கப் போறேன்”
இப்போது என்ன செய்வது? அம்மாவின் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. அவள் கிளம்பிக் கொண்டிருந்தாள். தலைசீவிக் கொள்வதும், முகத்தைத் துடைத்துக் கொள்வதும், நடு நடுவில் அவன் படிக்கிறானா என்று எட்டிப் பார்த்துக் கொள்வதுமாக இருந்தாள். இப்படி அவனை விட்டுச் சென்றால் கவலை நான்கு மடங்காகிவிடும். இந்த ஜன்மம் முழுவதுக்கும் சேர்த்து உபதேசம் செய்வாள். இதைச் செய் அதைச்செய் என்று கட்டளைகள் இடுவாள். அருண் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பான். அம்மா இந்தப் பக்கம் வெளியே போனதும் அவனும் வெளியே பறந்துவிடுவான். மணி ஆறாகிவிட்டாலும் அம்மா இன்னும் கிளம்பவில்லை. அருண் அம்மாவின் முன்னால் நின்றான்.
“அம்மா என்ன செய்ற. கெட்ட நாத்தம் வருது”
6
அதற்கு அம்மா என்ன பதில் சொல்லுவாள்?. அவன் தொடர்ந்தான் “அம்மா இங்கிலிஷ் டீச்சர்ட்டப் போனா கெட்ட நாத்தத்தில மூக்கே வெடிச்சிரும். என்னத்தையோ போட்டுக்கிட்டு வர்றா. ஒரு நாள் எங்கிட்ட எம் மேஜையில ஒரு புத்தகம் இருக்கு எடுத்திட்டு வான்னு சொன்னாங்க. கேளேன்…. அம்மா… அதுல ஃபேர் அண்ட் லவ்லி, பவுடர், லிப்ஸ்டிக் இன்னும் என்னென்னமோ இருந்த்து. இதெல்லாம் ஏம்மா ஸ்கூல்ல வச்சிருக்காங்க.”
அம்மா கன்னத்தில் எதையோ வைத்துக் தேய்த்துக் கொண்டிருந்தாள். “என்னை ரெடியாக விடுவியா இல்லயா? படிச்சு முடிச்சிட்டயா?”
“இப்ப முடிச்சிருவேன்ல். நான் சொல்லிட்டேன்ல. அம்மா சொல்லு இதெல்லாம் எதுக்கு வச்சிருக்காங்க. ஸ்கூல்ல”.
“அதெல்லாம் உனக்குப் பிடிக்காதா?”
அருண் அமைதியாக இருந்தான். என்ன பதில் சொல்ல.
“உன் பொண்டாட்டி போடுவாள்ள…. அப்ப..?
“எனக்கு கவிதா மேம் தான் பிடிக்கும் அவங்க கிட்ட எந்த வாசனையும் வராது”.
அம்மா நினைத்துக் கொண்டாள் “படிக்கிறத்த் தவிர எல்லா வேலையும் பிடிக்கும்”
அம்மா, எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கும் பொறந்தநாள் பதினைஞ்சு மார்ச் என்னை மாதிரி. நான் பன்னிரண்டு மணிக்குத் தான பிறந்தேன். அவ பன்னிரண்டரைக்குப் பொறந்தாளாம்”
“நீ பன்னிரண்டே காலுக்குப் பொறந்தெ”
“அப்படின்னாலும், அவளைவிட பதினைந்து நிமிஷம் பெரியவந்தான.”
இந்தக் கணக்கெல்லாம் அவனுக்குத் தப்பாமல் வரும். பள்ளிக்கூடக் கணக்குத்தான் தகராறு. அடுத்தநாள் கேட்டுக் கொண்டிருந்தான். “அப்பா. ஏம்ப்பா அல்ஜீப்ரா படிக்கிறாங்க.. அதில என்ன இருக்கு” அவன் கேள்விகள் கேட்கும் மனநிலையில் இருந்தான். அப்பாவும் தான்.
“எல்லாத்துக்கும் ஏதாவது பலன் உண்டு. சிலதுக்கு இப்பவே இருக்கும் சிலதுக்கு நாளைக்கு”
“அது எப்படி?”
லாப நஷ்டக் கணக்கு, சதவீதம் படிக்கிறீல்ல. கடைக்குப் போனாப் புரிஞ்சுக்கலாம். எதுல கமிஷன் கிடைக்கும்? எது விலை மலிவு. எந்த பேங்கில வட்டி அதிகம் அதுமாதிரி. அல்ஜீப்ரா பெரிய பெரிய கணக்குப் போடும்போது தேவைப் படும். நிலாவுக்கு எவ்வளவு தூரம்? ஒலியின் வேகம் ஐன்ஸ்டீன் த்த்துவம் அது மாதிரி.”
அவனுக்கு முதலில் சொன்னது மட்டும் புரிந்த்து. அமைதியாகப் படிப்பதில் ஈடுபட்டான். ரொம்பக் கேள்வி கேட்டால் அப்பாவும் அம்மாவும், கூப்பாடு போட்டு திட்டித் தீர்த்து வாயை மூடி விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து அமைதியைக் கலைத்தான்.
“அப்பா இதெல்லாம் ஒருத்தனுக்குப் பிடிக்கலைன்ன்னா? என்ன ஆகும் அதுனால?”
அப்பாவிடம் அதற்குப் பதில் கிடையாது. “நீ முதல்ல ஹோம் ஒர்க்க முடி..”
7

அல்ஜீப்ராவில் பாக்கியிருந்த்து. முதல் கேள்வியிலேயே வண்டி நின்று விட்ட்து.
“உனக்குத் தெரியலைன்னா கேட்டா என்ன? எனக்குப் பரிச்சயா உனக்கா?” திடீரேன கோபத்தில் இரண்டு மூன்று அடிவிட்டார். முடியைப் பிடித்து உலுக்கினார். “இப்பக் கணக்குப் போட்டு முடியறவரைக்கும் இங்கிருந்து எந்திருச்ச தொலச்சிட்டேன். குறுக்குக் கேள்வி மட்டும் கேட்க மட்டும் எப்படித் தெரியுது? மூச்சு விட்ட நொறுக்கிட்டன் நொறுக்கி..”
கொஞ்ச நேரம் கழிந்து மொட்டை மாடியில் தவறு செய்துவிட்ட உணர்வுடன் உலவிக் கொண்டிருந்தார் அப்பா. “எதுக்கு அடிச்சேன்? அடிச்சாப் படிப்பு வந்திருமா? தப்பில்லையா? கண்ணுல எங்காவது பட்டிருந்தா? அவன் சீக்கிரம் அழமாட்டானே? இன்னைக்கு குலுங்கிக் குலுங்கி அழுதுக்கிட்டு இருக்கான்”
“கணக்கு, கணக்கு கணக்கு.. சாகவா? சாயந்தரம் அஞ்சு மணியில இருந்து எட்டு மணிவரைக்கும் படிக்கிறனா இல்லையா? கிரிக்கட் வேண்டான்னீங்க போகலை. கம்ப்யூட்டர் வேண்டாம் அங்கயும் போகலை. உலகத்ல எல்லாப் பிள்ளையும் ஒரே மாதிரியா இருக்கு. உங்களுக்குந்தான் படிப்பு வரலை. அடிங்க அடிங்க நல்லா அடிச்சுக் கொல்லுங்க…”
மீண்டும் மீண்டும் கண்ணீர் வழியும் அவன் முகம் மனக்கண்ணில் வந்துசென்றது. பயந்து போயிருந்தான். சீக்கிரம் எழுந்து படிக்கத் தொடங்கினான். அலாரம் வைத்துவிட்டுத் தூங்கினான்.
விடிந்தும் விடியாத காலையில் வரண்டாவிலிருந்து கூப்பிட்டான் “அப்பா அப்பா..நிலாவைப் பாருங்க.. எவ்வளவு அழகா இருக்கு மரத்துக்கு நடுவில். சீனரி நல்லா இருக்கில்ல. பரிட்சை முடிஞ்சதும் இதைப் படமா வரைவேன்”
நேற்று அந்த அடி வாங்கினான் என்றோ, இன்று அவனுக்குப் பரிட்சை என்றோ யாரும் சொல்ல முடியாது.

ஹிந்தி மூலம் : பிரேம் பால் ஷர்மா.
தமிழில் : வே ராஜகோபால்.

Thursday, October 08, 2009


முதற்காதல்

வீடு வெறிச்சென்றிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்து அருகிலிருந்த கேஸ்கட்டுகளை சுந்தர்ராமன் பார்த்தார். சற்றுத் தூரத்தில் கண்ணாடி அலமாறிக்குள் இருந்த காலாவதியான வழக்குகளின் கட்டுகளும் பல வருடங்களாக வாய்தாவில் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் வழக்குகளும் மருத்துவமனையின் சவ அறையில் அடுக்கி வைக்கப்பட்ட பிணங்களைப் போல் தெரிந்தன. கட்டுக்களைத் தொட்டவுடன் பைல்களின் காகிதங்கள் பிரிந்து மின்விசிறியில் காற்றில் படபடத்து பிணங்களின் வாய்கள் போல் திறந்தன. ஒவ்வொரு கட்டுக்குள்ளிருந்தும் பல முகங்கள் எட்டிக் குதித்தோடின.

மச்சானை வெட்டிய முத்துச்சாமி, அண்ணனுடன் நிலத்தகறாறில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே வயதாகி இறந்து போன கணபதிதேவர் இன்னும் எத்தனையோ அலைந்த ஊர்களும், வாதாடிய சப்-கோர்ட்டுகளும் செஷன்ஸ் கோர்ட்டுகளும் நீதிபதிகளும் அலையலையாய் நினைவில் நகர்ந்தனர்.

வழக்குகளின் விவரங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்ட வழக்குகளின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், வாதமும், வெற்றியும் தோல்வியும் அவருக்கு ஞாபகம் உண்டு. பழைய புகைப்படங்களைப் பார்த்து நினைவுகளில் மூழ்கி அசைபோடும் எழுவத்தி ஆறு வயதாகிவிட்டது அவருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது பிரச்சனையுடன் யாராவது வரக்கூடும். அதுவரை இது தொடரும். களைத்தது போலிருந்ததும் நாற்காலியில் உட்கார்ந்தார்.

குமாஸ்தா வருவதற்கு நேரமாகிவிடுகிறது. பத்துமணிக்குக் கோர்ட்டுக்குப் போகவேண்டும். ஒன்பதே முக்காலுக்குத்தான் வருவான். வேலையில் இருந்த பிடிப்பும் உழைப்பும் இப்போது வரும் குமாஸ்தாக்களுக்கு இல்லை. வக்கீல்களுக்கே கேஸ்காரன் மீது கருணையும் தொழில்மீது பிடிப்பும் இருப்பதில்லை.

மீண்டும் எழுந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு பழைய வழக்குகள் வைத்த அலமாரியைத் திறந்தார். ஒவ்வொரு கட்டாக, நூலகத்தில் புத்தகம் தேடுவதுபோல இலக்கின்றி தேடிப்பார்த்தார். கண்ணன் வாதி பிரதிவாதி முனிசிபாலிடி, கருப்பசாமி-பெரியசாமி (அவன் அண்ணன்) வெள்ளைப் பாண்டி- -- முனியம்மா(புருஷன் பொண்டாட்டி), ராமமூர்த்தி—காமாட்சி,.. அதைத்தான் கையில் எடுத்தார்.
அந்தப் பெண்ணை நன்றாக இருந்தது. தபாலாபிஸில் டைப்பிஸ்ட்டாக வேலைபார்த்தாள். கணவன் இறந்ததிலிருந்து கருணை அடிப்படையில் வேலைக்கு ஆணை வாங்கும் வரை அலைந்த அலைச்சல். வேறு வழக்குகளிலும் இதே உறுதி இருந்தாலும், தீவிரத்துடன் உழைத்தாலும், இந்த வழக்கில் வெற்றி பெற்று உயர்நீதி மன்றத்தில் ஆணை வாங்கியபோது அடைந்த மகிழ்ச்சி தனி. பாவப்பட்ட பெண், வேலைக்குப் போட்டியாக கணவனின் தம்பி, அவனுக்கு உதவிய அலுவலகத் தொடர்புகள். அவளுக்கு அண்ணனுடன் திருமணமாகவில்லை என்று மனதார பொய் சொல்லிய தம்பி. எல்லாம் சேர்ந்து அவள் வாழ்க்கை பாழாகியிருக்கக் கூடும்.

அதற்குள் தினமலரும் எக்ஸ்ப்ரஸ்ஸூம் வந்து தொப்பென்று விழுந்தன. இரண்டையும் படித்து முடிக்க அரைமணி நேரம் ஆனது. முடித்ததும் சலிப்புதான் எஞ்சியது. “என்னத்தையெல்லாம் போடறானுக” சுவாரஸியம் இல்லாமல் மாடியை விட்டுக் கீழே வந்தார். படிகளில் இறங்குவது சிரமமாகத்தான் இருந்தது. எழுவத்தி ஆறாம் வயதில் மாடிப்படி ஏற முடிவதே பெரிய விஷயம். அரிதரிது.

கீழே முன்னறையில் அவர் மகன் சிவசு உட்கார்ந்திருந்தான். அவனுடன் ராஜன். அவரைக் கண்டதும் இருவரும் நேராக உட்காருவதுபோல் அசைந்து மீண்டும் முன்னர் இருந்த மாதிரியே இருந்தனர். “இவனுக்கு என்னைக்கு புத்தி வருமோ? கண்ட பயலுக கூடச்சேர்ந்து சுத்த வேண்டியது. வக்கீல் தொழிலுக்கு வேண்டாத சகவாசம் வைச்சிருக்கான்”. யோசித்துக் கொண்டே தோளிலிருந்த துண்டை உதறி மீண்டும் போட்டுக் கொண்டு உள்ளறைக்குச் சென்றார்.
அடுக்களையில் மருமகள் மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தாள். வேறு எதுவும் சத்தமில்லை. ஒரு காலத்தில் பத்து பதினைந்து பேர் இருந்த வீடு. சந்தக்கடை மாதிரி என்று இளைய மகள் சலித்துக் கொள்வாள். பாத்ரூம் படியில் நின்று விறகடுப்பில இருந்த வென்னீர்ப் பானையைப் பார்த்தார். முப்பது நாற்பது வருட்ங்களாக புகையடித்துப் போன அடுப்பும் பானையும் கோபத்தில் தள்ளி உட்கார்ந்திருக்கும் பெண்ணைப் போலிருந்தன. அதில் தான் செண்பகம் எத்தனையோ வருடங்களாய் புகையில் இருமிக் கண்கலங்கி, கசங்கி ஆஸ்மாவுடனும் அவருடனும் எட்டுக் குழந்தைகளுடனும் கொஞ்சிக் குலவி, கூப்பாடு போட்டு, கடைசிவரை நோயுடன் போராடி. சடக்கென்று போய்விட்டாள்.

குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் சாமி படங்கள் வைத்திருக்கும் அறைக்கு வந்தார். ஊதுபத்தியை எடுத்துக் கொளுத்தி சாமிகளுக்கெல்லாம் காட்டும் போது புதியதாகச் சேர்ந்திருக்கும் செண்பகத்தின் படத்தைப் பார்த்தார். இரண்டு மாதத்திற்கு மேலாகி விட்டது. வேட்டியைக் கட்டிக் கொண்டு அதே அறையில் சாப்பிட உட்காரும் போது குமாஸ்தா வந்தான்.
“இன்னைக்கு சீக்கிரம் கட்டுகளை எடுத்திட்டுப் போய்ரு. நம்ம கேஸ் முதல்ல வந்திரும் ”அவர் பேசுவது குமாஸ்தா மணிக்கும் வெளியறையில் இருந்த ஜூனியர் சங்கருக்கும் கேட்டது. மருமகள் இட்லித்தட்டுடன் வந்தாள். முதுகுக்குப் பின் செண்பகம் “தண்ணி வைம்மா” என்றாள். அவர் எப்போதும் போல திரும்பாமலே இருந்தார். சாப்பிட்டு எழும் போது கட்டில் வழக்கத்துக்கு மாறாக காலியாக் இருந்தது.
துண்டைத் தேடினார். அவராகச் சென்று உள்ளறையில் தேடி எடுக்க வேண்டியிருந்தது. யாரோ பின்னால் வருவது போலிருந்தது. ‘என்ன’ என்று கேட்டுக் கொண்டே திரும்பினார்.

செண்பகம் இந்த நேரத்தில்தான் சண்டைக்கார முதலாளியிடம் வேலைக்காரன் கேட்பதுபோல் “முன்னூறு ரூபா கொடுங்க” என்று கேட்பாள்.
“அன்னைக்குத்தான் எண்ணுறு ரூபாய் வாங்குன” பதில் தெரிந்திருந்தாலும் எப்பவும் இந்தக் கேள்வி வரும். நேரே பார்க்காமல் இருவரும் முனகிக் கொள்வார்கள்.
“சாமான் வாங்க வேண்டாம். வண்ணாத்திக்கு துணிபோடவேண்டாம். தூரவா போடுதேன்” கோபத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர எத்தனிப்பாள். “இந்தா இந்தா பைசா என்ன மரத்திலயா காய்க்கு..உழைச்ச காசு” என்ன பேசினாலும் கொடுக்காமல் விடமாட்டாள். “நாங்க மட்டும் உழக்கலையாக்கும் இவுக தான் உழக்காக” வக்கணையாக சொல்லிவிட்டுப் போய்விடுவாள். மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவரும் கோர்ட்டுக்குக் கிளம்பிவிடுவாள். கோர்ட்டில் நேரம் போவது தெரியாது.

சாயங்காலம் வீடு திரும்பும் போது அவர் மனதில் எதொ அழுத்தியது. வாசலில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. சிவசு எங்காவது கிளம்பிவிட்டானோ? அவன் கேஸ்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்ததான். “யாருக்கு ஆட்டோ? குறை சொல்லும் தொனியில் ஆனிடம் கேட்டுக் கொண்டே உள்ளே போனார். மூங்கில் சோபாவில் நிரம்பி வழியும் ஒரு சாக்குப்பை இருந்தது.
உள்ளே நின்ற மருமகள் கண்களில் தயக்கத்துடன் சொன்னாள் “அம்மாவுக்கு ரொம்பக் காய்ச்சல் அடிக்காம் அதாம் பாக்கப் போறோம்”
“சரி போ”

உடைகளை மற்றிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஆட்டோ கிளம்பிப் போய்விட்டது. வீட்டில் ஆள்ரவமில்லை. அவர் காலடிந் சத்தம் அவருக்கே வேறு யாருடையது போலவோ கேட்டது. உள்ளே நுழையும் போது செண்பகம் கட்டிலில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பாள்.
“எப்பப் பார்த்தாலும் டி.வி தானா? கொஞ்ச நேரம் சத்தமில்லாமல் இருக்காதா?”
அதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப் படுவதில்லை. மகன் இருந்தால் அவனிடம் சொல்லுவாள் “வீட்டுக்குள்ளயே இருந்து என்ன செய்ய? செத்த நேரம் உக்காந்தா?” அதற்குள் டி.வி. சிரியல் அவளை மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும்.
சிவசு என்ன செய்கிறான்? அடுக்களையில் ஏதோ உருளுவது கேட்டது. பக்கத்து வீட்டில் சுவரை இடித்துக் கொண்டிருந்தான். சாமி படங்களைப் பார்த்தார். தி.மு.க.வில் இருந்தாலும் கோயில்களுக்குத் தினமும் போகாவிட்டாலும் வீட்டில் குளித்துவிட்டு திருநீறு பூசி, சாமி படங்களுக்கு பத்தியைக் கொளுத்திவைத்து சுற்றிக் காட்டிவிட்டுச் சாப்பிடுவார். செண்பகத்தின் படத்தில் மல்லிகைச் சரம் தொங்கியது. கொஞ்ச நேரம் முன் மருமகள் தலையில் அதைப் பார்த்த ஞாபகம் வந்தது. முன்னறையில் சிவசுவைக் காணவில்லை. எங்கே போனான்? மாடி ஏற நினைத்தவர் தயங்கி நின்றார். இவ்வளவு பெரிய வீட்டைத் திறந்து வைத்துவிட்டு ….அங்கிருந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டார்.

எல்லாப் பிள்ளைகளும் வெளியூரில் இருந்தாலும் கடிதம் எழுதுகிற வழக்கமில்லை.. இப்போது யாருமே கடிதங்கள் எழுதுவதில்லை. எல்லாம் போனில் பேசிவிடுகிறார்கள். அவருடன் யாரும் ரொம்ப பேசுவதில்லை. சின்ன வயசிலிருந்தே அப்படித்தான் வழக்கம்.

பக்கத்து வீட்டு முத்தையாபிள்ளை நடக்க முடியாமல் பேரனின் கைத்தாங்கலுடன் போய்க்கொண்டிருந்தார். நல்ல வேளை அவரால் நடக்கமுடிகிறது. பேரன்கள் வெவ்வேறு ஊர்களில் வேலைக்கும், மற்றதற்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

மாத்திரை சாப்பிட வேண்டும். அதைத்தேடக் கண்ணாடி வேண்டும். ‘ஏ இந்தக் கண்ணாடி” பாதியிலேயே குரல் நின்றுவிட்டது. இந்த வீட்டில் இப்போது யாருமில்லை. அப்புறமாக மாத்திரை சாப்பிட்டுக் கொள்ளலாம். மாத்திரை தேடக் கண்ணாடி தேடி, தண்ணி எடுத்து, .. நினைக்கவே களைப்பாக இருந்தது. யாராவது வேண்டும். செண்பகம், பேத்தி பேரன். சிவசுவின் மனைவி இருந்தால் சிடு மூஞ்சியுடனாவது எடுத்துத் தருவாள். இப்போதுதான் யாரும் இல்லையே. வயசான காலத்தில் முடியாத நேரத்தில் ..

“இஞ்சி பூண்டு தினம் சாப்பிட்டால் போதாது. இந்த மூன்று மாத்திரைகளையும் கண்டிப்பாகச் சாப்பிடவேண்டும்” என்று டாக்டர் பாண்டியன் சொன்னது ஞாபகம் வந்தது. எழ மனமில்லை. வியாதி என்ன செய்யும்? இப்ப இருக்கும் டாக்டர்கள் விலை கூடுன ஊசி மருந்து மாத்திரைன்னு எழுதிக் கொடுத்திர்ரானுக. இஞ்சி பூண்டு வேப்பந்தழை தெனமும் சவைச்சாலே ஒரு வியாதியும் வராது. மகள் டாக்டராக இருந்தாலும் அல்லோபதி மீது கொஞ்சம் வெறுப்பும் பயமும் உண்டு. எல்லோரையும் போல.

மறுநாள் சாயங்காலம் திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கியதும் வீடு ரொம்பத்தூரம் போல் தோன்றியது. கார் வாங்கியதிலிருந்து வெளியூர் கேஸ்களுக்கு அதில் போவது வழக்கமாகிவிட்டது. சிவசு காரை எடுத்துக் கொண்டு மதுரை போயிருந்தான். வீட்டில் மருமகள் இருந்தாள். வாசல் விளக்கு ஏனோ எரியவில்லை. செண்பகம் இருந்தால் பளிச்சென்று வெளிச்சமாக இருக்கும். அவள் உயிரோடிருக்கும் போது ஒருமுறை கூட ‘நீ இருந்தால் வீடு வெளிச்சமாக இருக்கிறதெ’ன்று அவளிடம் சொன்னதில்லை. சொல்லத் தோன்றியது கூட இல்லை.

வீட்டில் கால் வைத்ததும் மனதுக்கு இதமாக இருந்தது. செல்லம்மாவும் சிவசுவும் ராத்திரி வரலாம். வந்தால் தேவலை. ஏதாவது பேசலாம். பிள்ளைகளிடமும் பணம் படிப்பு கல்யாணம் தவிர அதிகம் பேசியது கிடையாது. பம்பாயிலிருந்து வரும் லக்ஷ்மி ஒருமுறை கேட்டாள் “அப்பா நான் எப்படி இருக்கேன். என்ன நினைப்பேன். என்னெல்லாம் கஷ்டப்படுவேன் இப்படியெல்லாம் யோசிப்பீங்களாப்பா. .பேசணும்னு தோணுமா? பாபு வீட்ல பேரன் தாத்தா மேல ஏறி விளையாடுதான். நீங்க பேசவே யோசிக்கிறீங்க..” அவருக்கு அப்படித் தோன்றியதே இல்லை. அவருடைய அப்பாவும் இப்படிக் கேட்டதில்லை. “எப்படித் தெரியும் எனக்கு?” அந்தச் சமயத்தில் கேட்டிருக்கலாம். இப்போது தோன்றியது. போன் பேசலாம். ஆனாலும் ஒரு தயக்கம் தடுத்தது.
“மருமகள் வந்து கேட்டாள்” சாப்பிடுறீங்களாப்பா..? அவரு மதுரையிலைருந்து வர லேட்டாகும்ல. “
உம்.. வை. என்னது சாப்பிட?”
“இட்லி”
அவருக்குச் சுவராஸ்யமாக இல்லை. விஸ்கி ஏதாவது அடிக்கலாம் என்றால், துணைக்கு ஆள் வேண்டும். யாராவது எல்லாவற்றையும் தயார் பண்ணி வைத்தால், குடிக்கலாம். தொட்டுக்க கறி மீன் ஏதாவது வைத்துக் கொள்ளலாம். எல்லாவேலைக்கும் ஆள் வைத்தே பழகிவிட்டது. இப்போது அவரே எல்லா வேலையையும் செய்ய முடியாது. ஒரு தயக்கம்.

தூங்கும் முன் அடுத்தநாளுக்கான கேஸ் கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது “வணக்கம் சார்” என்று பெண்குரல் கேட்டது. கேட்ட குரலாக இருக்கிறதே என்று நிமிர்ந்தார். புரிந்து விட்டது. “வாங்க..வாங்க. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முந்தினநாள் காலையில் பார்த்த கேஸ்கட்டில் எழுத்தாக இருந்த பெயர், இப்போது அவரெதிரில். காமாட்சி.
“நீங்க எப்ப வந்தீங்க? உக்காருங்க..
இந்த ஊருக்கு மாத்திட்டாங்க. சார். அதான் பாத்திட்டுப் போகலாம்னு வந்தேன். சீக்கிரம் வந்தா இருக்க மாட்டிங்கன்னு நேரங்கழிச்சு வர்றேன்”.
“பரவாயில்லை. சும்மாதான் இருக்கேன்’.
“அம்மா இறந்த அண்ணைக்கு வந்தேன்…” கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்.
ரொம்ப நல்லவங்க.. எப்ப வந்தாலும் விசாரிப்பாங்க.. பொதுவா எல்லார்ட்டயுமெ நல்லா பேசுவாங்க.. அதெப்படி சார் திடீர்ன்னு சுகர் குறஞ்சு போச்சு.”
ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனாள் காமாட்சி. மணி பத்துக்கு மேலாகிவிட்டது. அதற்குள் பலதடவை மருமகள் மாடியில் லைட் எரிகிறதா என்று பார்த்துவிட்டுப் போயிருந்தாள். சிவசுவும் செல்லம்மாவும் வர ராத்திரி பன்னிரண்டாகிவிட்டது.

சுந்தர்ராமன் கண்கள் நிலைகுத்தியிருக்க எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். காமாட்சிக்கு நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். நாட்டுக் கட்டை உடம்பு. ”ஒரு பொண்ணு இருக்கா சார். காலேஜ் படிக்கா. உங்க புண்ணியத்தில நல்லாயிருக்கேன். அவள் மேல படிக்க வைக்கணும்”. அவள் போய்விட்டாலும் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. எட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைத்தது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இப்போது பெரிதாகத் தெரிந்தது. அவர்கள் என்ன படித்தார்கள் எப்போது முடித்தார்கள் அதெல்லாம் மீண்டும் ஞாபகப் படுத்திப் பார்த்தார். மங்கலாக ஞாபகம் இருந்தது.

யாருடனும் மனம் விட்டுப் பேசி நாளாகிறது. அண்ணன் தம்பி எல்லாம் மேலே போய்விட்டார்கள். அடுக்களையில் ஏதோ பாத்திரம் உருண்ட சத்தம் கேட்டது. அங்கு யாரும் இல்லை. முன்பு கலகலத்திருந்த வீடு. சாப்பாடு பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.

செண்பகம் இருந்தவரை சாப்பாடு பற்றி ரொம்ப யோசித்ததில்லை. “உப்பு சரியில்லை. ருசியா இல்லை. சகுந்தலா ஓட்டல்ல இதைவிட நல்லாயிருக்கும்” என்று எதையாவது சொல்லிக் கொண்டுதான் சாப்பிடுவார். அவளோ பிள்ளைகளோ அந்த நேரம் எதுவும் பேசாது. கோபம் வந்துவிடும்.
கடைசியாக செண்பகத்துடன்……….எப்போது என்று யோசித்துப் பார்த்தார்… வருடங்கள் சரியாக ஞாபகமில்லை. முப்பது-நாற்பது வருடங்கள் இருக்கும். அவளுக்கு இளைப்பும், சர்க்கரை நோயும் வந்து பாடாய்ப் படுத்தியது. அதில் தான் போய்ச்சேர்ந்தாள். நடுநடுவில் வெளியூர்களில் பல இடங்களில் … கழித்ததுண்டு. பின்னர் யோசித்தால் அது ஒன்றுமில்லை போலிருக்கும். திருப்தி இல்லை. ஒரு மனச்சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். சிலநேரம் தண்ணீர் குடித்தால் தாகம் அடங்கிவிடும்.

இருட்டில் ஒளிரும் அவரது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. இப்போதெல்லாம் தூக்கம் வர நேரமாகிறது. இரண்டு வருடங்களாகத்தான் இந்தப் பிரச்சனை. வர வர அதிகமாகிவிட்டது. காமாட்சி மனதில் நிழலாடிக் கொண்டிருந்தாள். எவ்வளவு நன்றி விசுவாசம் அவளுக்கு. இந்தக் காலத்தில் பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையைப்பற்றி யோசிப்பதில்லை. அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுகிறார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பின் அவரைப் பார்க்க வந்திருக்கிறாள். மூத்த மகளைப் போல என்று சொல்லிக் கொள்ளலாமா? அவரால் முடியவில்லை. என்ன சமூகம் இது? மனைவியைத் தவிர வேறு பெண்ணாக இருந்தால் அக்காவாக அம்மாவாக மகளாகத்தான் ஒரு மனிதன் வரித்துக் கொள்ளவேண்டும். அவளோ நாய்க்கமாரு. நிறம் கொஞ்சம் சிவப்பு. இப்படி நாற்பத்தைந்து வயதில் உருண்டுழலும் அவள் பேசிக் குழைந்ததும் அவளை நினைத்தாலே ஜிவ்வென்றேரும் உணர்ச்சி.
அவளும் சொன்னாள் “ எனக்கு யார் சார் இருக்கா? பதினெட்டு வருஷமாச்சு அவரு போயி. ஒரு நாதி கிடையாது. தலைஎழுத்து. எத்தனை பிரச்சனைகள்?. மக மட்டும் இல்லைன்னா…. எப்பவோ போய்ச்சேந்திருப்பேன்” அவள் கண் கலங்கியதில் அவருக்கும் என்னவோ செய்தது. செண்பகம் போனவருஷம் தான் போனாள். ஆனால், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவளை நெருங்கி. காமாட்சியின் வேதனைகளும் அவள் பிரச்சனைகளும் அவருக்குப் புரிந்தன.
அவள் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.” நீங்க மட்டும் அந்த வேலையை வாங்கிக் கொடுக்கலைன்னா…” அவளால் பேச முடியவில்லை விம்மினாள். அவள் துயரம் அது மட்டுமில்லை என்று அவருக்குத் தோன்றவில்லை. கைகள் மெத்து மெத்தென்றிருந்தன. இத்தனை வருடம் யாரும் தொடாத கைகள். அப்படித்தானிருக்கும். இருக்கவேண்டும். அவருடைய கைகளும் தான். அவள் தோளைத் தட்டிக் கொடுத்து “கவலைப் படாதேம்மா.. எல்லாம் நல்ல படியா நடக்கும்”
“ நீங்கதான் சார்……” அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. அவருக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. அவளும் அதைப் பார்த்தாள்.
“நான் இருக்கேம்மா பயப்படாதே”. எத்தனை பேருக்கு மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணிடம் இப்படிச் சொல்ல வாய்ப்புக் கிடைக்கும். நினைத்தாலும் சொல்ல முடியாது. மனிதர்கள் எல்லோரும் கருணைமனம் படைத்தவர்கள். குறிப்பாக பெண்களிடம்.
“ஒரு மக இருக்கா. அவ படிச்சு மேல வரணும். உங்களை மாதிரி வக்கீல் ஆக்கணும்”
“அதுக்கென்ன, அவ படிச்சு வக்கீல் ஆகிருவா” அவர் முடித்ததும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அவருக்கும் மனதுக்கு இதமாக இருந்தது. யாருக்காவது ஆறுதல் சொன்னால் ஒரு அமைதி கிடைக்குமே அது. யாரிடமாவது இது மாதிரிப் பேசியிருக்கேனா என்று அவருக்குள் கேட்டுக் கொண்டார். எந்தப் பெண்ணும் அவரிடம் பேசியதில்லை. எத்தனையோ பெண்களுக்காக வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார். இவள் மட்டும் ஏதோ தனி. வீட்டில் யாரும் துணைக்கு இல்லாமல் தான் இப்படித் தோன்றுகிறதோ என்றும் நினைத்தார். ஆனால் இந்த உணர்ச்சி நிஜமானது. இல்லையென்றால் காலையில் கேஸ் கட்டுக்குள் பெயராக இருந்த ஒருத்தி மாலைக்குள் குழைந்து உருகும் மனமாக திரண்ட உடலாக வருவாளா? பாவம் இந்தப் பெண்ணுக்கு முடிந்தவரை உதவ வேண்டும்.

காலையில் ஐந்து மணிக்கு வழக்கம்போல் வேப்பங்குச்சியில் பல்தேய்த்துக் கொண்டே ‘வாக்கிங்’ போனார். வர ஆறு மணியாகிவிட்ட்து. அன்றைக்கான கேஸ் கட்டுகளைப் பார்க்க அலமாரியைத் திறந்தார். நேற்றுப் பார்த்த கேஸ்கட்டு கையில் அகப்பட்ட்து. முடிந்துபோன கேஸ்தான். ஆனால் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். காமாட்சி நேற்றிரவு பேசிக் கொண்டிருக்கும்போது ஆறுதலாக அவள் கையைப் பிடித்த போது சரிந்துவிழுந்த முந்தானையும், உருண்டு திரண்டு நிற்கும் உடலும் ஞாபகம் வந்த்து. இன்றைக்கும் வருவாளா? வரவேண்டும். அவர் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த்து. இப்படியெல்லாம் நினைக்கக் கூடாதோ மகனும், மருமகளும் வீட்டில் இருக்கிறார்கள் மகள்கள்… அதற்கு மேல் யோசிக்க வேண்டாம் என்று நிறுத்தினார். ஆனாலும் காமாட்சி மீண்டும் நினைவில் வந்தாள். பஸ்ஸில் போகும்போதும், கோர்ட்டில் பேசும் போதும். எழுபதிலும் ஆசை அடங்குவதில்லை. அவளும் பாவம் தான். இருபது வருடங்களுக்கு மேலாக அவள் கணவன் இல்லாமல் தனியாக இருக்கிறாள். தன்னால் இரண்டு வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. சண்பகம் இறந்தது சமீபத்தில் தான் என்றாலும், அவளுக்கும் அவருக்கும் இருபது வருடங்களுக்கு மேலாகவே தனியாகத்தான் படுக்கை.

செண்பகம் இருக்கும் போது சண்டை போடவாவது பேச்சுக் கொடுப்பாள். இப்போது தனிமையும் அமைதியும் தான். குடும்பத்தில் பிள்ளைகள் மனைவி என்று கூட்டத்துடன் இருக்கும் போது அமைதி வேண்டும் என்று மனம் அல்லாடுகிறது. தனிமைதான் இனிமை என்று கனவு காண்கிறது. முதுமையில் தனிமையும், அமைதியும் வரும்போது அதுவே வதையாகிவிடுகிறது.

நாற்பது வருடங்களுக்கு மேலாக நோயுடன் போராடினாள். சொன்னதையெல்லாம் செய்தாள். இப்போது கூப்பிடக் கூட ஆள் இல்லை. ஆண்கள் பெண்கள் மீது சார்ந்து வாழ்ந்து வாழ்ந்து தனியாய் நிற்கும் வலுவிழந்து விடுகிறார்கள். மீண்டும் காமாட்சி நினைவில் வந்தாள். அவளுடன் வாழ முடிந்தால்.. அவளை வீட்டுக்குள் விட முடியுமா? சொந்த பந்தங்கள் கொத்திப் புடுங்கிவிடும்.

செண்பகத்தின் ஸ்பரிசம் பட்டு முப்பத்தைந்து வருடங்களிருக்கும். ரொம்ப வருஷங்களுக்கு முன் வெளியூர் போய்விட்டு வரும் நாட்களில் சாப்பிடாமல் காத்திருப்பாள். அப்புறம் சர்க்கரைவியாதி வந்த்திலிருந்து தான் சாப்பிட்டுவிட்டுக் காத்திருப்பாள். பிறகு சர்க்கரையுடன் மூச்சிறைப்பும் சேர்ந்து கொண்டது. இப்போது வெளியூர் போனால், சாப்பிட்டு விட்டுத்தான் ஊருக்குப் பஸ் ஏறுவார். ஹோட்டல் சாப்பாடு பிடித்துவிட்ட்து. வேறு வழியில்லை என்றால் தான் உள்ளூர்ச் சாப்பாடு. வாய் ருசி கேட்கிறது. மறந்து போன ருசிகள் மீண்டும் ஞாபகம் வருகின்றன. தொந்தரவு செய்கின்றன.

காமாட்சி எட்டு மணிக்கு வர ஆரம்பித்தாள். பத்துப் பதினொன்று வரை மாடியில் அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனாள். சிவசுவும், மருமகளும் தினமும் பார்த்துப் பார்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்கள்.
இன்றும் வந்திருந்தாள். சிவசு மாடியில் என்ன பேசிக் கிழிக்கிறார்கள் என்பதை மாடிப் படிகளில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“நாற்பது வருஷமாச்சு. தனியாத்தான் போராடிக்கிட்ருக்கேன்” அவள் சொன்னதற்கு பல அர்த்தங்கள். மூவருக்கும் புரிந்தது. அவளுக்குத் துணை தேவைப்படுகிறது என்பதையும், அதற்கு நீங்கள் தகுதியானவர் என்பதையும் அவள் உணர்த்தினாள் என்று சுந்தர்ராமன் அர்த்தப் படுத்திக் கொண்டார். “இந்தப் பொம்பளை அப்பாவை எப்படி வசப்படுத்த முனைகிறாள். அம்மா இறந்து போய் ஒருவருடம் முடிவதற்குள்… ச்ச்ச என்ன மனுஷன்யா’ என்று சிவசு கோபப்பட்டான். காமட்சிக்கு ஏதோ தினமும் நம்முடன் பேசிக் கொண்டிருக்க ஆள் கிடைத்ததே. எதுவரை போகுதென்று பார்க்கலாம். உதவிக்கு இந்த ஊரில் ஆள் வேண்டும். கொஞ்சம் ஆள் அதிகாரம் பலமுள்ள ஆளிருந்தால் தான் சமாளிக்க முடியும். ஒத்தப் பொம்பளை என்ன செய்யமுடியும். அவனவன் போய் நின்னாலே வழியுரானுக. ஒரு ஆள் துணையிருந்தா மத்த கழுதைகளாவது தொந்தரவு செய்யாமலிருக்கும்”
அவர் சொன்னார் “நானே ரொம்ப வருஷமாத் தனியாத்தான்.” பல வேளைகளில் சொற்களுக்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை. சூழ்நிலை அர்த்தம் தந்துவிடுகிறது. முப்பது வருடங்களுக்கு மேல் நோயாளி மனைவி. அவருக்கே மலைப்பாக இருந்தது. “நான் தான் பேசுகிறேனா? எனக்குள் இருக்கும் ஏதாவது பேசுகிறதா”
“எங்க வீட்டுக்கார்ர் போயி இருவது வருஷமாச்சு. என்னாலயே தனியா சமாளிக்க முடியல. ஆம்பள, அதுவும் எல்லாரிடம்மும் பழகிறவங்க இத்தனை வருஷமா எப்படி இருக்கிறீங்க. வாய்க்கு ருசியா சாப்பிட்டுப் பழகியிருப்பீங்க. இப்ப என்ன செய்வீங்க.”
“ஆமா மருமக சாப்பாடு காரசாரமில்ல. பத்தியச் சாப்பாடு மாதிரியிருக்கு. நல்லாச் சாப்பிட்டுப் பல நாள் ஆச்சு.”
“நான் நல்லாச் சமைப்பேன் சார். கொண்டு வாரேன். என் சாப்பாடு சாப்பிட்டுப் பாருங்க..இன்னைக்குக் கூடப் பாருங்க சார். சட்டியில இருந்து எண்ணை தெறிச்சி” சொல்லிக் கொண்டே வலக்கையை நீட்டி எண்ணை பட்டுப் புண்ணான கழுத்தையும் கழுத்துக்குகீழேயும் காட்டினாள். நல்ல வேளை சார். சேலையில் பட்டும் இந்த இடத்தில ஜாக்கெட்டில படல.” அவள் காட்டிய இடங்களில் கொப்புளங்கள் தெரிந்தன.
அதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, “களிம்பு வேணுமா” என்றார்
“இருந்தா குடுங்க. தடவிக்கிறேன்”

சிவசுவுக்கு அதற்கு மேல ஒன்றும் கேட்கவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது. என்னென்னவோ அர்த்தப் படுத்திக் கொண்டான். அப்பாவைப் பற்றி அப்படி நினைக்க அவனுக்கே வருத்தமாகத்தான் இருந்த்து. ஆனாலும், இந்த வயசுல இப்படி பண்வாகளா?” என்று வருத்தப் பட்டான். இன்னொரு பயம் வேறு தொத்திக் கொண்டது. ஏதாவது ஏடா கூடமா பண்ணிருவாரோ? கல்யாணம் தொடுப்புன்னு வச்சுக் கிட்டா, சொத்து என்னாவது. இந்தக் காலத்துப் பொம்பளைகள், அதுலயும் இவ… ரொம்ப மோசம்னு எல்லாரும் பேசிக்கிடுராங்க. என்ன செய்ய? அம்மா இன்னுங் கொஞ்ச நாள் கழித்துச் செத்திருக்கக் கூடாதா? பெருமூச்சு விட்டுக் கொண்டே படுக்கப் போனான்.
“அவுக என்ன இப்படிப் பேசிக்கிட்ருக்காக” மனைவி கேட்ட்தும் கோபத்தில் ஜிவ்வென்று முகம் சிவந்தது. “ஊரெல்லாம் வக்கீலய்யா எங்கையிலன்னு பேசிக்கிட்ருக்கா? அந்த தேவடியாள அடிச்சுத்தான் வெரட்டணும். இல்லாட்டி இவுகளை வீட்ல தனியா விட்டுப் பிரித்திரணும் அப்பந்தான் தெரியும்”. திட்டிக் கொண்டே மனைவியுடன் படுக்கையில் சாய்ந்தான். மனைவியில்லாமல் அவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரவில் மணி என்னவென்று தெரியவில்லை. தூக்கம் கலைந்துவிட்ட்து. விலகிக்கிடந்த வேட்டியை கட்டிக்கொண்டே மனைவியைப் பார்த்தான். கையையும் காலையும் எப்படியோ வைத்துக் கொண்டு, அசையாமல் கிடந்தாள். அப்பா ஞாபகம் வந்தது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா தனியாகத்தான் படுத்திருக்கிறார். அவருக்கு தேவையாக்க் கூட இருக்கலாம்.
இன்னொரு நாள் அமுக்கி வைத்த கோபம் வெளிப்பட்டுவிட்டது.
“யார் சொன்னா?”
“யார் சொல்லணும். அவ தான் ஊரெல்லாம் சொல்லிட்டுத் திரியறா. கோர்ட்ல ஒவ்வொருத்தனும் என்னப்பா இதெல்லாம். இவள அடி பின்னிருவமானு கேக்கறான்.’ சட்டென்று நிறுத்திவிட்டான். அப்பாவிடம் இப்படிப் பேசிப் பழக்கமில்லை.
“ஊர்ல இருக்கிறவன் என்னென்னமோ பேசுவான். அதுக்காக….அந்தம்மா ஏதோ பேசிக்கிட்ருக்க வருது. தொழில விட்டுட்டா அது கிட்டப் பேசிக்கிட்ருக்கேன். உன்னமாதிரி. கண்டவங்கிட்டயும் பிரயோசனமில்லாம. புள்ளை குட்டியிருக்கா.. மனுஷன் என்னதான் செய்யணுங்க” வெடித்துச் சீறிவிட்டார். பேசியதில் அவருக்கே பாதி நம்பிக்கையில்லை. அவனுக்கும் தான். நடுவில் குழந்தைகள் இல்லை என்பதை குத்திக் காட்டி விட்டார். “‘குழந்தைகள் இருந்தால் மட்டும் கொஞ்சிக் கிழிச்சிருவாக. எங்களுக்குத் தெரியாது. நாங்களும் இங்கதான இருந்தோம். வயசான காலத்தில இதெல்லாம் தேவையா? கேஸப் பாத்தமா, சாப்டமா தூங்னமான்னு இருக்க வேண்டியது தான“” அவன் முனகியது அடுத்த அறையிலிருக்கும் அவருக்கும் கேட்ட்து.
அவர் பதிலுக்கு அங்கிருந்தபடியே மருமகளுக்கும் கேட்கட்டும் என்று சத்தமாகச் சொன்னார் “எனக்குத் தெரியாததால? எழுவத்தைந்து வயசுல எத்தனை பேரைப் பாத்திருப்பேன். பேசுனாக்கில. என்ன? மனுஷன் யார்ட்டயும் பேசக்கூடாதா? எனக்கு புத்தி சொல்லுதீகளோ?”
அவர் சொல்லிக் கொண்டே இருந்தாலும் மனதில் இன்னொரு விதமாக யோசித்துக் கொண்டிருந்தார். ”மனுஷன் என்ன இன்னும் அஞ்சு வருஷமோ? பத்து வருஷமோ? வயசுக்கொத்த துணை வேண்டாம்னு எப்படிச் சொல்ல முடியும். பொண்டாட்டி செத்ததும் எல்லாத்தையும் உடனே மறந்திரணுமா? மிஷினா? சுட்ச ஆஃப் பண்ண? அதுக்கு முன்னாலயுந்தான் என்ன?”

செவ்வாய்க் கிழமை காலையில் கமட்சியம்மா மகளுடன் வந்து பெஞ்சில் உட்கார்ந்தாள். சிவசுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன புதுசு? என்று கோர்ட்டில் கேஸ் இல்லையே.
அப்பாவிடம் கேட்டான் “எங்க வெளியூர் எங்கயும் போறீகளா?”
“திருநெல்வேலிக்கு. கரிவலங் கேஸ் இருக்கு.”
“அந்தம்மா வந்திருக்கு. பிள்ளையோட.”
“அதுக்குந் திருநெல்வேலி போணுமாம் அதான் என்கூட வாங்கண்ணேன். வண்டியில போயிரலாம்ல”
“நான் தெங்காசி, சிவகிரி போவேண்டியிருக்கு. நீங்க பஸ்ல போகலாம்ல. ஒரு ஆளு தான” அவர் மட்டும் போனால் என்ன என்ற கேள்வி அதிலிருந்தது. ரொம்பத்தான் பெருசாகுது… என்று நினைத்துக் கொண்டான். .
“நான் சொல்லிவிட்ருந்தேன் அவங்களும் வந்துட்டாங்க. முதல்லயே சொல்ல வேண்டியது தான” என்று சிவசுவிடம் சொல்லிவிட்டு. டிரைவரிடம் “வண்டிய எடுங்க” சொல்லிவிட்டு காரில் ஏறினார்.. அவருடன் காமாட்சியும் அவள் மகளும்.

இந்த டிரைவரும் சொல்லியிருக்கலாம்ல. அவனும் கூட்டு” முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போனான். வாடகைக் கார் பிடித்துப் போக வேண்டும். அதைவிட இவர்கள் மூவரும் காரில் போவதை ஊர்க்கார்ர்கள் பார்த்து…” நினைக்கவே கசந்தது. பதில் சொல்லி முடியாது.
sunthar ராமனுக்குத் தெரியும். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். சின்ன வயதிலிருந்தே. தேவையிருந்தால் யாரோ மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் அப்பாவிடம் பேசிப் பழக்கம். செண்பகம் மட்டும் தான் எதிர்த்துக் கேட்பாள். இத்தனை வருஷங்களாக குடும்பத்துக்கு உழைத்துப் போட்டேன். எல்லாச் சுகத்தையும் பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுத்தேன். இப்ப யாரும் பாக்க நாதியில்ல. மருமக ஏதோ வித்தியாசமாப் பாக்கா. அவுக வீட்டுக்கே சொத்தேல்லாம் கொண்டுபோகணும்னு நினைக்கா. இவன் என்னடான்னா அவளுக்காக எங்கிட்ட எதுத்துப் பேசுறான். சும்மா தொணைக்கு ஒர் ஆள்ட்ட பேசினா, உடனே ஓன்னு கூப்பாடு. இத்தனை வருடம் எப்படி இருந்தேன்.. காமாட்சியம்மா பாவம். பிள்ளைய படிக்கவைக்க்க் கஷ்டப்படுது. அவளுக்கு உதவி செய்யலாம்ன்னா?”
காமாட்சியின் குரல் சிந்தனையைக்கலைத்த்து. “என்ன சார் பலமா யோசிக்கிறீங்க”.
“ஒண்ணும் இல்லம்மா”
“ஏதாவது பிரச்சனையா? எங்களாலயா?” அவள் புரிந்து கொண்ட்து ஆச்சரியமாக இருந்த்து.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பிள்ளைகளுக்கு எவ்வளவு செஞ்சிருக்கேன். எதாவது ஞாபகம் வருதா? உங்களைக் திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போறேன்னா கோப பொத்துக்கிட்டு வருது. எல்லாம் பிள்ளைகளையும் செட்டில் பண்ணியாச்சு. இனிமே எனக்கென்ன ? இவகளுக்கு அடிமையா?”
“கோப்ப்படாதீங்க சார். பிள்ளைகள் எவ்வளவு செஞ்சாலும் இப்படித்தான் பேசும். எங்களால உங்களுக்குத்தான் சார் கஷ்டம். இப்படித் தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்” பொய்யாகச் சடைத்துக் கொள்வது போல் அவருக்குப் பட்டாலும், கூட்டி வந்தபின் ஆறுதல் சொல்லவேண்டியிருக்கிறது. இது மாதிரி பெண்களுடன் அவர் ஆறுதலாகப் பேசியதில்லை. வயசானால் பக்குவம் வந்து விடுகிறது போலும். ஆனால் மனைவியிடம் இப்படிப் பேசியதில்லை. அது அவள் கடமை. அவளை, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது அவர் கடமை. செண்பகம் என்னைச் சரியாகத்தான் கவனித்துக் கொண்டாள். நான் அவளை நன்றாகத் தான் வைத்திருந்தேன். சண்டைகள் போடுவது மாதிரி, ஏதோ மூன்றாவது ஆடகள் மாதிரி, மற்றவர்கள் முன்னால் செண்பகமும் நானும் பேசிக் கொண்டாலும் கெடுதல் எதுவும் செய்து கொண்ட்தில்லை. ஆனால் காமாட்சி வேறு. பொழுதுபோகாமல் சினிமா பார்க்கிறது மாதிரி. ஒரே வித்தியாசம். சினிமாவில் வரும் வசனம் நானும் காமாட்சியும் பேசுகிறோம். இது எனக்குப் புதுசு. காமாட்சிக்கும் புதுசாக இருக்கலாம்.
மீண்டும் ஒருமுறை காமாட்சி சொன்னாள் “எங்களால உங்களுக்குக் கஷ்டம்”
“அதெல்லாம் இல்ல. எவன் என்ன கேப்பான்? என் இஷ்டம். நா என்ன கெட்ட்தா செய்யறேன் ஒளிச்சு ஒளிச்சு.. சின்னக் கழுதைகளுக் கென்ன? உங்க மகளைப் படிக்க வக்கது என் பொறுப்பு”
கோபத்தில் கேட்காத உறுதிமொழியை கொடுத்துவிட்டேனோ? என்று அவர் நினைத்தாலும், காமாட்சிக்கு அது ரொம்ப ஆறுதலாக இருந்த்து அவள் முகத்தில் தெரிந்த்து. அவள் மகளும் திருப்தியாக நன்றியுடன் பார்த்தாள்.
“பிள்ளைகளுக்கெல்லாம் நல்லாத்தான செஞ்சிருக்கீங்க. நல்லாப் படிச்சிருக்காங்க. நல்ல இட்த்துல கல்யாணம் முடிச்சிருக்காங்க. ஒரு குறை வக்கல்ல”.அந்தக் கேள்விகளில் வேறு ஏதோ தொனித்தது.
“ஆமா பெறகென்ன யாருக்காவது உதவி செய்யணும்ணாக்கூட பிள்ளைகள்ட்ட் கேட்கணுமா? என்னாலதான் இவுகல்லாம் முன்னுக்கு வந்தாங்க. அவங்களால நான் முன்னேறல இவுகளுக்கு நான் அடிமையா இருக்க.
அன்றிரவு வெளியூரில் சாப்பிட்டுவிட்டு, மூவரும் வந்திரங்கும் போது மணி பன்னீரண்டாகி விட்டது. சிவசு தூங்கவில்லை. அந்தப் பொம்பளை “போய்ட்டு வர்ரேன்”னு சொல்லும் போது அப்பா முகத்தில், குரலில் அமைதி தெரிந்தது.
சிவசு அம்மாவின் படத்தை வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான். எப்போதோ எடுத்த பட்த்தி மீண்டும் ப்ரிண்ட்போட்டு பிரேம் போட்டு சாமி படங்களின் நடுவில் மாட்டியிருந்தது. வரிசை வரிசையாக சுவரில் ஆணியடித்து மாட்டப்பட்ட படங்கள். செந்தூர் முருகன், பழனி முருகன், வில்லிபுத்தூர் ஆண்டாள், கோமதி அம்பாள், அப்பாவின் அப்பா, மதுரை மீனாட்சி, நெல்லை காந்திமதி.. இன்னும் பல.
அம்மாவுக்கு முதல் வருடத் திதி. அப்பாவும் பின்னால் உட்கார்ந்து இருந்தார். முகத்தில் களை இல்லை. அம்மாவின் நினைவில் இருக்க்க்கூடும். சிவசுவுக்கு காமாட்சி ஞாபகம் வந்தது. இவரா அப்படி? அம்மா இறந்த பின்னால் மனம் துணை தேடியிருக்கும். அது ஒன்றும் தப்பில்லை போலத் தோன்றினாலும், மனம் ஒப்பவில்லை. பெயர் கெட்டுவிடும். அப்பாவுக்கென்ன? பெயர் கெட்டால் என்ன குறைந்துவிடும்? ப்ராக்டீஸ இப்பவா தொடங்கிறாங்க? நல்லா சம்பாதிச்சாச்சு. ஆனால், ஊர் ஒன்று இருக்கிறதே. சொத்து போய்விடும் என்று பயம். திதி முடிந்து எல்லோரும் பேச விரும்பியதைப் பேசமுடியவில்லை. அப்பாவிடம் பேசிப் பழக்கமில்லை. அதுவும் இந்த மாதிரி விஷயம். அவர்களுக்குள்ளேயே குசுகுசுத்துக் கொண்டு கலைந்து போய்விட்டனர். போனில் விவாதங்கள் தொடர்ந்தன. அவளை அடித்து விரட்டலாமா? அவரைக் கட்டி வைத்து உதைக்கவா? ஊர் என்ன நினைக்கும்? ரகஸியமா கல்யாணம் முடிச்சுக்கிட்டா? சொத்துக் கேப்பாள்ள?
கொஞ்ச நாளில் அந்தப் பெண் வருவதை நிறுத்திவிட்டாள்.
சுந்தர்ராமன், அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்றுவிட்டு, இரவு வெகுநேரம் கழித்தே வருகிறார். அடிக்கடி இப்போது வெளியூர் செல்கிறார். காமாட்சியைப் பார்க்கப் போவதில்லை, அவளும் வருவதில்லை, என்று பிள்ளைகளும் மருமக்களும் திருப்திப்பட்டுக் கொண்டனர். புதுசு புதுசாய்ப் பெண்களைப் பார்ப்பதில் ஒன்றுமில்லை. அவர்களுக்குத் தெரியும். அவருக்கும் புரியும் யாராவது ஒருத்தியைக் காதலித்தால், அது தான் ஆபத்து. அதுவும் எல்லோருக்கும் தெரியும்படி.

Tuesday, October 06, 2009

இந்தக் காலத்தில்

மழையில்லாமல் வெக்கையுடன் திங்கட்கிழமை விடிந்த்து. காலையிலேயெ எழுந்துவிடும் பழக்கமுள்ள, பட்டம் பெறாத பல் மருத்துவர் அரிலோ எஸ்கவர், ஆறுமணிக்கு தன் கிளினிக்கைத் திறந்தார். கண்ணாடிக் கூடுகளில் பிளாஸ்டர் அச்சுக்களில் வைத்திருந்த பொய்ப்பற்களை, தொழிலுக்குண்டான சிறு கருவிகளை மேஜை மீது வரிசையாக காட்சிக்கு அடுக்கி வைத்தார். காலர் இல்லாமல் கழுத்தை மூடிய கோடுபோட்ட சட்டையும், தோள் பட்டைகள் வைத்த பேண்ட்டும் போட்டிருந்தார். மெலிந்த நெட்டையான உருவம். காது கேட்காதவர்களைப்போல் நிலைமைக்குப் பொருத்தமில்லாதபடி பார்வை.
மேஜையில் பொருட்களை அடுக்கிய பிறகு, டிரில்லரை நாற்காலியின் பக்கம் இழுத்தார். பொய்ப்பற்களுக்கு பாலிஷ் போட ஆரம்பித்தார். என்ன செய்கிறாம் என்று யோசிக்காமலே தொடர்ந்தார். தேவையில்லாத போதும் அடிக்கடி துணியை இழுத்துவிட்டுக்கொண்டார். எட்டு மணிக்கு ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்க வேலையை நிறுத்தினார். அடுத்த வீட்டின் கம்பிகள் மீது அமைதியாக இரண்டு கழுகுகள் வெய்யிலில் ஈரம் காய்ந்து கொண்டிருந்த்தைப் பார்த்தார். மத்தியானச் சாப்பாட்டுக்கு முன் மழை பெய்துவிடும் என்ற நினைப்பில் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவருடைய பதினொரு வயது மகனுடைய கீச்சுக் குரல் அவருடைய கவனத்தை குலைத்தது. “அப்பா”
“என்ன”
“மேயர் தன் பல்லைப் புடுங்கி விடுவீர்களா என்று கேட்கிறார்”
“நான் இங்கே இல்லைன்னு சொல்”
அவர் ஒரு தங்கப் பல்லை பாலிஷ் செய்து கொண்டிருந்தார். கை நீளத்தில் அதைப் பிடித்துக் கொண்டு ஒண்ணரைக்கண்ணால் பார்த்தார். அவர் மகன் மீண்டும் சிறிய முன்னறையிலிருந்து கத்தினான்.
“நீ பேசறதை அவர் கேட்கமுடியும் அதான் சொல்றார் நீ இருக்கயாம்”
அவர் பல்லைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வேலையை முடித்துவிட்டு மேஜையில் வைத்தபின்னால் சொன்னார் “அதான” டிரில்லரை மீண்டும் ஓட்டினார். கார்டுபோர்ட் பெட்டியிலிருந்த்து இன்னும் செய்ய வேண்டிய வேலைகளுக்கான பல பொருட்களை வெளியில் வைத்து தங்கப்பல்லுக்கு பாலிஷ் போட ஆரம்பித்தார்.
“அப்பா”
“என்ன?”
முகபாவம் மாறவே இல்லை.
“அவர் பல்லைப் புடுங்கவில்லையென்றால் உன்னைச் சுட்டுவிடுவாராம்”


அவசரமில்லாமல் அமைதியாக டிரில்லரை நிறுத்தி, நாற்காலியை விட்டுப் பின்னால் தள்ளிவிட்டு மேஜையின் டிராயரைத் முழுதாக வெளியே இழுத்த்தார். அங்கே கைத்துப்பாக்கி இருந்த்து. “சரி வந்து என்னைச் சுடும்படி அவனிடம் சொல்”
நாற்காலியைப் எதிப்புறமிருந்த கதவுப் பக்கம் தள்ளினார். அவருடைய கை டிராயரின் முனையில் இருந்த்து. மேயர் கதவுப் பக்கம் வந்தார். வலியினால் முகத்தில் இடது பக்கம் மழித்திருந்தார். வலது பக்கம் வீங்கியிருந்த்து. ஐந்து நாள் தாடி இருந்தது. பல இரவுகளின் துயரம் அவன் களைத்த கண்களில் தெரிந்த்து. விரல் நுனிகளால் மேஜை டிராயரை முடிவிட்டுச் மெதுவாகச் சொன்னார்:
“உட்கார்”
“காலை வணக்கம்” என்றார் மேயர்.
“காலை வணக்கம்” பதிலுக்குச் சொன்னார்
கருவிகள் கொதித்துக் கொண்டிருந்த போது, மேயர் மண்டையை நாற்காலியில் சாய்த்துக் கொண்டார். இதமாக இருந்த்து. மூச்சுவிடக் கஷ்டமாக இருந்த்து. அது பாடாவது க்ளினிக். பழைய நாற்காலி, காலால் இயங்கு டிரில்லர், களிமண் குடுவைகள் வைத்திருந்த கண்ணாடி அலமாரி. நாற்காலிக்கு எதிர்ப்புறம் தோள் உயரத்துக்கு திரையால் மூடிய ஜன்னல். பல்டாக்டர் தன் பக்கத்தில் வந்ததும் வாயைத்திறந்தார்.
அரிலியொ அவன் தலையை வெளிச்சத்துக்குத் திருப்பினார். கெட்டுப்போன பல்லைப் பார்த்துவிட்டு, மேயரின் தாடையை ஜாக்கிரதையாக அழுத்தி மூடினார்.
“மயக்க மருந்து இல்லாமல் தான் எடுக்கணும்”
“ஏன்?”
“சலம் வைத்த கட்டி இருக்கிறது”

மேயர் அவர் கண்ணில் நேராகப் பார்த்தார். “சரி” சொல்லிவிட்டு சிரிக்க முயன்றார். அரெலியொ பதிலுக்குச் சிரிக்கவில்லை. கருவிகளை கொதிக்க வைத்த பேசினை எடுத்துக் கொண்டு மேஜைக்கு வந்தார். இடுக்கிகளால் வென்னீரிலிருந்து கருவிகளை எடுத்தார். துப்புவதற்கான கோப்பையைக் ஷூ அணிந்த கால்களால் தள்ளிவிட்டு, வாஷ் பேஸினில் கைகளைக் கழுவச் சென்றார். மேயரைப் பார்க்காமலேதான் இதையெல்லாம் செய்தார். இவரை விட்டு மேயரின் கண்கள் அகலவேயில்லை.
அறிவுப் பல் தான் கெட்டுப் போயிருந்த்து. அரெலியொ கால்களை அகற்றி இடுக்கியால் பல்லை இறுக்கிப் பிடித்தார். மேயர் நாற்காலியைப் பிடித்து இறுக்கிக் கொண்டார் கால்களை வசதியாகத் தளர்த்திக் கொண்டார். விதைக்கொட்டையில் ஜில்லேன்று ஏறுவதை உணர்ந்தார் ஆனால் ஒரு சத்தமும் போடவில்லை. பல்டாக்டர் தன் மணிக்கட்டை மட்டும் அசைத்தார். எரிச்சலைக் காட்டாமல், ஆனால் மெதுவாக்க் கசப்புடன் சொன்னார் “இருபது பேர் செத்தார்களே அதுக்கு இப்ப பதில் கிடைக்கும்”
மேயர் தாடை எலும்புகள் நொறுங்குவதை உணர்ந்தார். கண்களில் நீர் நிரம்பியது. பற்கள் வெளிவருவதை உணரும் வரை அவர் மூச்சுவிடவில்லை. பின் கண்ணீருக்கிடையில் அதைப் பார்த்தார். அவருடைய வலிக்கும் அதற்கு சம்பந்தமே இல்லாதது போலிருந்தது. முந்தைய ஐந்து இரவுகளின் கொடுமையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
வேர்த்து, விறுவிறுத்து, துப்ப வைத்திருந்த கோப்பைக்குக் குனிந்தார். மேல் கோட்டின் பட்டன்களைத் திறந்தார். பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்தார். பல் டாக்டர் சுத்தமான துணியொன்றை நீட்டினார்.


“கண்ணீரைத் துடைத்துக் கொள்”
மேயர் துடைத்துக் கொண்டார். அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். பல் டாக்டர் கைகளைக் கழுவும் போது, உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்த கூரையை, தூசி படிந்த எட்டுக்கால் பூச்சி வலையில் இருந்த அதன் முட்டைகளை, அதில் சிக்கியிருந்த செத்த பூச்சிகளைப் பார்த்தார். கைகளைத் துடைத்துவிட்டு பல் டாக்டர் திரும்பிவந்தார். “வாயை உப்புத்தண்ணீரில் கொப்பளித்துவிட்டுப் படு”.
மேயர் எழுந்து நின்று, ராணுவ பாணியில் சல்யூட் அடித்து குட் பை சொன்னார். கால்களை சரிசெய்து கொண்டு, பட்டனைப் போடாமல் வாசலை நோக்கி நடந்தார்.
“பில்லை அனுப்பிவிடு” என்றார்
“உனக்கு அனுப்பவா? அல்லது ஆபீஸுக்கா?
மேயர் அவரைப் பார்க்கவில்லை. கதவைமூடிக்கொண்டே சொன்னார் “எல்லாம் ஒண்ணுதான்"

------------------------------------------------------------------------------------------------
Gabriel Garcia Marquez-
மொழிபெயர்ப்பு

India as a superpower

There are a lot of people in India who belive that India has the power to be a superpower and that it will be a superpower if only this or that is done. While the desire to be more powerful than others in a given community is an animal desire that refuses to be civilized in human species, there are others more egalitarian in thought who desire that societies should be structured in such a way so as to ensure justice to all. Those who want India to be powerful fall into the former category. May be this has something to do with our own history of colonialism. Since we have suffered at the hands of imperialist power, we tend to absorb their policies and inflict the same kind of imperialism on others.
Even if India becomes a superpower what has that to do with the welfare of our population. Does not poor people living in the recognized superpowers suffer equally, if not more than the poor people, living in countries that are not superpowers?
For people who are really concerned about India, it is the lives of ordinary people that is most important point of referece for measuring the progress of the country. It does not matter whether India is a super power or not,but it does matter whether whole population of India is well fed, well read or not. Towers of excellence can be built on the sands of ignorance. But towers will not have the logivity. They are bound to fall because the foundations are not strong. Everyone knows this. Then, why the leaders make efforts to build those towers ?
IT is for enjoying the privileges without sharing the prosperity. Equality and fraternity are good slogans. These have to be repeated often for the sake of deceiving the public, for adhering to the political correcness in making these statements and for hiding their real intentions. In a society as structured as India, inequality is built into the system and everyone is contributing for its continuance. Communities change, areas of affluence change but the structure remains the same.
Obverse side of the dream of making India a superpower is that we are preparing for suppressing the rights of others. We want to plunder other countries economically. People will say that we have good intentions and after becoming superpower we will behave in a philanthropically. That is not realistic. Nations are populated by people who have different views on everything. As Thorou had said there is always need to protect the people from the state. In the name of becoming a superpower, people within the country will also be subjected to the atrocities by those who are in power. Like Hitler’s period in Germany. In the name of patriotism, independence of thought, action will be taken away. These will be subordinated to the single goal of becoming a superpower at whatever the cost. Like Srilanka in the recent times. In the name of taming the tigers, Sinhala population has been militarised , their independence taken away, rights suppressed. Therefore the dream of becoming a superpower is misplaced and dangerous. This is not to say that we should abandon our military. This is another extreme. This will be misinterpreted as if the intention is to abandon our defence capabilities..etc. But it will be a tactic for confusing the ordinary people. India should not be a superpower, it does not need to be a superpower. It should be a nation equal among other nations. Not more than equal.
Some people may say that this is pacifism in the hard fighting real world. If India tries to be a super power it will also end up like germany after the world war. It is better to be a normal country than to be a superpower.

Monday, October 05, 2009

ஆ.மாதவையா

மிகுந்த தயக்கத்துடன் மாதவையாவின் சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இன்னும் பத்மாவதி சரித்திரம் படிக்கவில்லை. பழைய பாடாவதி என்று ஒவ்வொருமுறை அதை எடுத்துவிட்டு மீண்டும் நூலகத்தின் அதன் இடத்தில் வைத்துவிடுவேன். ஆனால் சிறுகதைகளில் களைப்பு ஏற்படும் முன்னர் முடித்துவிடலாமென்று இந்தப் புத்தகத்தை எடுத்தேன். ஆச்சரியம்.
“ஏணியேற்ற நிலையம்” என்ற தலைப்பில் இருந்த கிண்டல்தான் என்னை அவரிடம் இழுத்தது. (நான் எடுத்த புத்தகத்தில் இந்தக் கதையில்லை.)
அவரது கதைகளில் அவர் எடுத்துக் கொண்ட விஷயங்கள் அனைத்தும், அவரது கூரிய விமரிசனப் பார்வையிலிருந்து தப்பவில்லை. பெண்களின் நிலையை அவர் அக்காலத்திலேயே இக்காலத்தைய நோக்கில் கண்டது முக்கிய, ஆச்சரியமான விஷயம். பிராமணராக இருந்தும் அந்தச் சாதிக்காரர்களிடம் நிலவும் மோசமான பழக்க வழக்கங்களை மிக வேகமாகச் சாடும் அவரது தைரியம், ஜெயகாந்தனை நினைவுபடுத்துகிறது.
இன்று சமூக வழக்கங்களைச் சாடுவது பழைய விஷயமாகி விட்டது. யாரும் யாரையும் சாடவிரும்புவதில்லை. சுரணையற்ற மனிதர்களின் புகலிடமாகிவிட்டது இலக்கியம். புதிய விஷயங்கள் பற்றி பேசவேண்டும் என்பது ஒரு தேவையாக, நிர்ப்பந்தமாக, சொல்லப்படுகிறது. புதிய விஷய்ங்கள் இல்லையெனில் புதிய வடிவங்கள் வேண்டும். காலந்தோரும், புதிய வடிவங்கள், புதிய கதைகள் வந்தாலும், மனிதனின் மேன்மையும், கயமைத்தனமும் எப்போதும் போலவே தொடர்கின்றன. மனிதன் மாறும் வரை அவை மனிதனின் கதைப் பொருளாக வடிவெடுக்கத்தானே செய்யும். மாதவையாவை ஆங்கிலக் கல்வி பெற்ற மனிதராகப் பார்க்கப் போனால், அவர் சமூகத்தைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமலே போயிருக்கலாம்.
வரதட்சணை, மாமியார், மாமனார், மாப்பிள்ளை கொடுமைகளை, நமது கலாச்சாரம் என்று சொல்லுகிறோமெ அதில் உள்ள வேடிக்கைகளை, கயமையை, பொய்கலாச்சாரத்தை அவருடைய கதைகளில் காணலாம். காலம் மாறும் போது, நேற்றுத் தீண்டத் தகாதவனாக இருந்தவன் இன்று ராஜ மரியாதை பெறுவதை சகிக்க முடியாமல், ஆனாலும் எதிர்க்க முடியாமல் வயிறெரியும் பிராமணர்களை இந்தக் கதைகளில் காணலாம். மாதவையாவுக்கு பிராமணர்கள் பரிச்சயம் என்பதால் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். மற்றப்படி வேறு தனிக்காரணம் இல்லை. மேல் ஜாதிக்கார விதவைகளைப் பற்றியும் மிக அனுதாபத்துடன் எழுதியிருக்கிறார். இன்றுகூடச் சிலர் உடன்கட்டை பற்றி சிலாகித்துப் பேசும் நிலையில் காலத்துக்கு முன்னரே மாதவையா சிந்தித்தது அதிசயம்தான்.
இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்வதை எண்ணிப்பார்த்தால், நம் சமூகம் உளவியல் ரீதியாக முன்னேறி இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. சுலபமாக பணக்காரனாக எளிய வழியாக திருமணத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். திருமணம் மட்டுமல்ல. கலாச்சாரம் என்னும் வட்டத்துக்குள் வருகிற அனைத்தும் வியாபாரமாகிவிட்டன. எப்படி சீக்கிரம் பணத்தைப் பெறுவது என்பதே முதல் கேள்வி. தேவைக்கான பணத்தை அல்ல. தேவைக்குப் பலமடங்கு அதிகமான பணத்தை. எத்தனையோ வாழ்க்கைகளும், நாவல்களும் வெறும் பணத்தைக் குவிப்பதால் மகிழ்ச்சி கிடைக்கப்போவதில்லை என்று காட்டிய போதும், மீண்டும் மீண்டும் மனிதன் பணத்திலே உழல நினைக்கிறான். மனிதன் மாறுவானா? கதைகளின் உள்ளடக்கம் அப்போதுதான் மாற முடியும்.

காலத்தை மீறி யோசித்த எழுத்தாளர் ஆ.மாதவையா.

தமிழ்நாட்டு இசை

தமிழ் இசை என்றால் எதைக் குறிக்கிறது?. தமிழ் நாட்டில் பயிலப்படுவதால் அது தமிழ் இசையா? தமிழ் மொழியில் பாடல்கள் பாடுவதால் தமிழ் இசையா? தமிழர்களால் பாடப்படுவதால் தமிழ் இசையா? கருநாடக இசை தான் தமிழ் இசையா?
தமிழ்நாட்டில் இசைக்கப்படும் இசைதான் கேரளாவிலும் இசைக்கப் படுகிறது. ஆந்திராவிலும், கர்னாடகாவிலும் பல பகுதிகளில் இதே இசை ரசிக்கப்படுகிறது, பயிலப்படுகிறது.
சாதாரண மனிதன், இசையை முறையாகக் கல்லாதவன், இசையைக் கேட்கும்போது ரசிக்க முடிகிறது. தமிழ்நாட்டு இசையோ, வடநாட்டு இசையோ அல்லது மேல்நாட்டு இசையோ எதுவானாலும் காதுக்கு இனிமையாக இருந்தால், இசையைக் கேட்டும் காதுகள் இருந்தால், கேட்டு ரசிக்கலாம். எந்த இசையையும்.
இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டின் இசையின் வெளிப்பாட்டுக்குத் தனித்துவம் உண்டு என்று ஒப்புக்கொண்டாலும், அது ஏழு சுரங்களை அடுக்கும் வகையில் தான் இருக்கிறதே தவிர, கருநாடக இசை எழுப்பும் உணர்வுகளை, உணர்ச்சிகளை வேறு எந்த இசையும் எழுப்பும் வல்லமை கொண்டது என்றே கருதுகிறேன். ஒவ்வொரு இசைமுறைக்கும் அதனதன் வெளிப்பாடுகளில் தனித்தன்மைகள் இருக்கலாம். ஆனால் மனதை உருக வைப்பதில், மகிழ்ச்சியை கொந்தளிக்கவிடுவதில் எந்த வகையான இசையும் குறைந்ததல்ல.
கருநாடக இசையை பக்தி என்னும் சிமிழுக்குள் அடைத்துவிட்டார்கள். அது தங்கச் சிமிழே ஆன போதிலும், இசையின் பாடுபொருள் அல்லது களம் இன்னும் விரிவடைய வேண்டும். மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான பாடல்கள் பாடப்படுகின்றன. அல்லது கருவி இசையாக இசைக்கப்படுகின்றன. இதற்கு மேல் இல்லை என்ற பாவனையை இவை தோற்றுவிக்கின்றன. ஆனால் எதுவும் ஒரு குறிப்பிட்ட நிலையில், மேலே செல்லாமல் நின்றால் அது குறைந்தபட்சம், உள்ளடக்கத்திலேனும் மரணமடைந்துவிடுகிறது. மெல்லத்தமிழினிச் சாகும் என்றது கருநாடக இசைக்கும் பொருந்தும்.
கருநாடக இசை எங்கே தோல்வி அடைகிறதோ அங்கே மெல்லிசையும், திரையிசையும் வெற்றி பெறுகின்றன. இறைவனை இறைஞ்சுவதோடு கருநாடக இசை பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட, திரையிசை, புதிய களங்களைச் சந்தித்து வந்தது. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அது இசையின் உள்ளடக்கமாக்கியதால் மனிதனின் ஒவ்வொரு உணர்வையும் பதிவு செய்ததால் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடலின் அடையாளமின்றித் திரையிசையை தனித்துக் கேட்க முடியாது. இப்போது அதுவும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறது. இசையின் ஒலியளவு பாடல்களில் அதிகரித்து விட்டது. குரல்களில் தனித்தன்மை, அல்லது இசையில் தனித்தன்மை குறைந்து வருகிறது. இசை தமிழ்நாட்டுக்கானதாக இல்லை. உலக இசையாகிறது என்று சொல்லி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், உலகில் பல்வேறு பகுதிகளில் வழங்கிவரும் இசை, தமிழ் வார்த்தைகளின் மாலை போட்டு வலம் வருகிறது. இதிலெல்லாம், தமிழ்நாடோ, தமிழ் இசையோ இல்லை.
இந்த இடத்தில் கருநாடக இசை மீண்டும் தன் அடையாளங்களுடன் ஒரு மரபாக நிலைத்து நிற்கிறது. அதில் தமிழ் வாசனை யில்லையென்றாலும், தென்னிந்திய வாசனை வருகிறது. பலபொருள்களை, வாழ்வின் பல சிக்கல்களைப் பற்றிய உணர்வற்று தன்னேரில்லாத் தலைவனான
இறைவனை விட்டு வெளிவரத் தயங்குகிறது.
இசையின் அளவற்ற, சாத்தியங்களை எட்ட முயலாமல், ஒரேவகையில் மாட்டிக் கொண்டு பிதுங்கிக் கொண்டிருக்கிறது. விடிவு விரைவில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

Friday, October 02, 2009

மத்திய காலத் தென்னிந்தியாவில் நில உடைமையும் சமூகப் பிரிவினைகளும்

மத்தியகாலத் தென்னிந்தியாவில் சமூகம் முரண்பாடுகள் இல்லாமல், சுமூகமான உறவுகள் உள்ள சமூகமாக இருந்ததாக பழைய சரித்திர ஆசிரியர்கள் கருதி வந்துள்ளனர். சமத்துவத்தை விட வர்க்கங்களின் ஒத்திசைவை முன்வைத்து அரசியல் உணர்வுகள் அக்காலத்தில் இருந்ததாகவும், ஒரு வர்க்கத்தின்மீது இன்னொரு வர்க்கத்தின் கொடுமையான் அடக்குமுறை இருந்ததில்லை என்றும் அச்சமூகத்தை நீல கண்ட சாஸ்திரி பெருமைப்படுத்துகிறார். இதுபோன்று சொல்வதற்கும், மறுபுறம், தன் எழுத்துக்களில் அவர் திரட்டிய வர்க்க வேறுபாடுகள் குறித்த தகவல்களுக்கும் உள்ள முரண்பாடுகளை பல நேரங்களில் அவர் புரிந்து கொள்ளவில்லை. அப்பாத்துரை, மீனாட்சி, மகாலிங்கம் போன்றோரின் ஆய்வுகளிலும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை. கி.பி. 1000 லிருந்து 1500 வரையிலான காலத்தின் தென்னிந்தியாவின் பொருளாதார நிலையை ஆய்ந்த அப்பாத்துரையின் நூல்களிலும் வர்க்கப் பிரிவினைகள் குறித்து ஏதாவது இருக்கும் என்ற இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது.

நீலகண்ட சாஸ்திரி போன்றோரால் செய்யப்பப்ட்ட வரலாற்றாய்வுகளில் இருந்த தவறுகளைச் சீர்படுத்தும் நோக்கத்துடன் சமீபத்தில் வந்த அமெரிக்க ஆய்வாளர்களாலும் நிலைமை மாறவில்லை. பல்லவர் காலத்திலும் அதைத்தொடர்ந்த சோழர்காலத்திலும் சமூகம் ஏராளமான வேளாண் குடியிருப்புகளாக இருந்ததாக மத்திய காலத் தென்னிந்தியாவில் அரசுகளை சமூகத்தை ஆய்ந்த பர்ட்டன் ஸ்டெயின் குறிப்பிடுகிறார். நீலகண்ட சாஸ்திரியின், அவரது சீடர்களின் வரலாற்றாய்வியலின் மீது தொடுத்த கருத்துத் தாக்குதலின் நிறைவாகவும், தொடர்ச்சியாகவும் செய்யப்பட்ட இவ்வாய்வுகளிலும் வளர்ந்த வேளாண் சமூகத்தில் முறைப்படுத்தப்பட்ட சமூக உறவுகள் குறித்த விபரங்களை எதிர்பார்ப்போம். ஆனால் பண்ணையார்கள் இல்லாத உழவுக்குடிகள் பற்றித்தான் இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது. ஸ்டேயின் குறிப்பிட்டதுபோல கருத்து ரீதியாகவும் வரலாற்று ரீதியிலும் இந்நூல் குறையுள்ளது. ‘பண்ணையார் இல்லாத குடிகள்’ பற்றிய தன் கருத்தை அடைய, வேளாண் குடிகளிடம் காணப்பட்ட உயர்வு தாழ்வுகள் பற்றி தனக்குக் கிடைத்த பல தகவல்களை, ஸ்டெயின், வெட்கமில்லாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பிராமணர்களுக்கும் விவசாயக்குடிகளுக்கும் இருந்த உறவுகளைச் சித்தரிக்கும்போது பெருவாரியான குடிகள் பற்றிய விபரங்களை மறைத்துவிடுகிறார். சமூகத்தில் வேறுபாடுகள் இல்லை என்ற கருத்து, கோணலான கொள்கையிலிருந்தும், கிடைக்கும் தகவல்களை கண்டுகொள்ளாமல் விடுவதிலிருந்தும் எழுகிறது.

ஆனால், நொபொரு கராஷிமொ, எம்.ஜி.எஸ் நாராயணன், ஒய். சுப்பராயலு, டி.என். ஜா, ஆர். சம்பகலக்ஷ்மி, ராஜன் குருக்கள் போன்றோரின் மூலம் சமீப காலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரே பார்வையைக் கொண்டவர்கள் என்றோ, ஒரே கருத்துக்கள் கொண்டவர்கள் என்றோ சொல்லவில்லை. மாறாக, இவர்கள் ஒவ்வொருவரது கொள்கைகளும் ஆய்வு முறைகளும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரும் அடிப்படைத் தகவுகளை அறிந்தவர்கள். வரலாற்றிப்பற்றிய தனித் தத்துவப்பார்வை கொண்டவர்கள். இது தென்னிந்திய இந்திய வரலாற்றியலில் மகிழ்ச்சிதரும் விஷயமாகும்.



பல்லவர், பாண்டியர் காலத்து தாமிரப் பட்டயங்களில் பலவிதமான உரிமைகள் பற்றி பதிவுகள் உள்ளன. சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினருக்கும் குறிப்பிட்ட நிலத்தின் மீது கிடைக்கும் உரிமைக்கு ஏற்றாற் போல் சமூகத்தில் அவர்களது இடம் இருந்தது. பிராமணர்களுக்கு நிலம் தான்மளிக்கப்பட்டதையே பல்லவ காலத்தின் தாமிர பட்டயங்கள் பதிவு செய்கின்றன. நிலத்தின் மீது கூடுதல் உரிமையை கொடுப்பதும் அதைப் பெயர்மாற்றம் செய்வதும் பற்றியதாக இருந்தன. இது சில பல்லவர் பட்டயங்களில் ‘குடி நீக்கி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இருந்த குடிகளை நீக்குவது என்பது தான் இதன் பொருள். இதே கருத்து, சில பல்லவகாலப் பதிவுகளில் ‘முன் பெற்றாரை நீக்கி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நிலத்தைத் தானம் பெற்றவர்கள் முன்னால் இருந்தவர்களை நீக்கிவிட்டு தங்களுக்குப் பிடித்த புதியவர்களை குடியமர்த்தும் சுதந்திரம் இருந்ததைக் குறிப்பிடுகின்றன. இந்தப் பதப் பிரயோகங்கள் பழைய குடிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப் பட்டதைக் குறிப்பிடவில்லை என்று ஆர். திருமலை எழுதுகிறார். ஏற்கனவே இருந்த நிலத்தின் மீதான் உரிமையை இழப்பதை இது குறிக்கலாம் என்கிறார் அவர். எல்.பி. அலயேவ், குடிநீக்கி என்பதை, நிலம் கைமாறும் போது, குடிகள் அத்துடன் சேர்ந்து மாற்றிக் கொள்வது கிடையாது என்பதை குறிக்கிறது என்பார். விரல்விட்டு எண்ணக் கூடிய பதிவுகளே முன்னர் இருந்த குடிகள் பற்றிப் பேசுகின்றன. பெரும் பான்மையான பல்லவர்காலப் பதிவுகள் முன்னரிருந்த குடிகள் பற்றிப் பேசுவதே இல்லை. அவர்கள் இடத்தை விட்டுத் துரத்தப் பட்டனரா அல்லது உரிமைகள் மட்டும் பறிக்கப் பட்டனவா அல்லது அவர்களை இந்த (உரிமை மாற்றம்) தொடவில்லையா என்பது தனி விஷயம்.

kesavan veluthat

மொழிபெயர்ப்பு.வே.ராஜகோபால்