Monday, July 06, 2009

thiruvilaiyadal

முதுகின்மேல்
கனத்த மூடை
சரித்திரமென்று

மூளையில்
அழுத்திக்கொண்டிருக்கிறது
பெருத்தபாரம்
கலாச்சாரம் என்று

செங்கல் குவியல்கள்
புதைத்திருக்கின்றன
என் குரலை

கண்களில் ஊசியேற்றி
நிரப்பப்பட்டிருக்கிறது
இரசாயனத்திரவம்
கனவுகள் என்று
நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இத்திருவிளையாடலை

No comments:

Post a Comment