Sunday, April 30, 2017

பிரபஞ்சன் எழுதிய ‘பெண்’

                 இந்த நூல் பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியது. அந்த ஒரு காரணத்தினாலேயே மிக எளிமையான நடையில், எல்லோருக்கும் புரியும்படி எழுதப்பட்டிருக்கிறது.

            புராணக் கதைகளில் சொல்லப்பட்ட பெண்கள், இதிகாசங்களில் சொல்லப்பட்ட பெண்கள், காவியங்களில் சொல்லப்பட்ட பெண்களின் கதைகள் என்று தொடங்கி, நவீன காலத்தில் சாதனைகள், போராட்டங்களில் ஈடுபட்ட பெண்களின் வரலாறுகள் வரை எழுதிச் சென்றிருக்கிறார். 

            பெண்ணிய நோக்கில் பெண்களின் வரலாறு பேசும் இந்நூலை பிரபஞ்சன் என்ற ஆண் எழுதியிருப்பது இதன் சிறப்பு.  அதை ரொம்பவும் வற்புறுத்திச் சொல்ல வேண்டியதில்லை.  அவர் ஏற்கனவே பெண் விடுதலைக்கான குரல் கொடுத்த, கொடுக்கிறவர் என்பது அவரது கதைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும்.  பெண் விடுதலை என்பது அனைவரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்ற புரிதலும் உடையவர்.

            பெண்கள் பொதுவாக இளவயதுச் சிறுமிகள் முதல் இளம் பெண்கள் படிக்க வேண்டிய நூல். 


            பெண் பாத்திரங்கள் இத்தனை பேர் நமது வரலாற்றின் பக்கங்களில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக அனைவரும் படிக்கலாம். 

No comments:

Post a Comment