Wednesday, April 05, 2017

கேள்வி கேட்பேன்

எனக்குச் சொல்லப்படும்
நீதிகள் மீது
எனக்குச் சந்தேகம்
எழுகிறது

வார்த்தைகளின் இடையில்
மறைந்திருக்கும்
வன்முறையை பிடித்து
ஒதுக்க விரும்புகிறேன்

பிரதிவாதி பயங்கரம்
என்றாள் அம்மா
விதண்டா வாதம்
என்றவரும் உண்டு
எல்லோரையும் திட்டுவதேன்
என்றாள் இல்லாள்
விதிகளுக்குள் புதைக்கப்பட்ட
மனித எலும்புகளை
எண்ணியதில்லை அவர்கள்

எல்லா விசாரணைகளையும்
வரவேற்கிறேன்
இன்னொரு மனிதனைக்
கட்டுப்படுத்த நினைக்கும்
எதனையும்
குறுக்கு விசாரணை செய்ய
விரும்புகிறேன்

நானொன்றும் கடவுள் அல்ல
மனிதன் என்பதனாலேயே
கேள்விகளை எழுப்புகிறேன்


No comments:

Post a Comment