Monday, April 24, 2017

கடைசிக்கு முந்தைய ஆசை

நரகத்திலிருந்து
விடுபட்டபோதிருந்த மகிழ்ச்சி
இப்போது இல்லை

சுவர்க்கம் என்றே
சொல்லுகிறார்கள் இதை

சோறும் தண்ணீரும்
சொகுசும் பன்னீரும்

எல்லாம் கிடைத்தால்
அதற்கு என்ன பெயர்?

எதையாவது நோக்கித்
தவமிருந்தால்
அது கிடைக்கும் போது இன்பம்

கிடைத்தபின்
இன்னொன்றை வேண்டித்
தவம்

கட்டக் கடேசி சொர்க்கம்
அப் பேரின்பம் கிடைத்தபின்
எதற்குத் தவம்?

மீண்டும் நரகத்துக்கே சென்று
தவமிருப்பான் மானிடன்

மலைஉச்சியை அடைந்துவிட்ட
நார்ஸிஸஸ் போல....

No comments:

Post a Comment