Sunday, April 16, 2017

வார்த்தைகள்
இறுகிப்போன
செங்கற்களாகிவிட்டன

ஏற்கனவே
உங்கள் தொழிற்சாலைகளில்
சட்டங்களில்
அச்செடுக்கப்பட்டவை

நான்
கட்டவேண்டியது
மிகப்பெரிய மாளிகையல்ல
குருவியிருக்கும் சிறுகுடில்

அதற்கு என்ன வேண்டுமானாலும்
பெயரிடுங்கள்
கவிதை என்று மட்டும்
சொல்லாதீர்கள்

உருவகத்தை
உவமைகளை
மறைபொருள்களை
உங்கள் ’ஆகா ஓகோ’க்களை
வாங்கும்
எதுவும் இல்லை

அதில் என்
இதயத்தின் குரல்
பதிந்திருக்கலாம்

No comments:

Post a Comment