Friday, November 06, 2009

வில்லேருழவன் - 1
‘டெட்சுயா’

சிறுவன் அதிர்ச்சியில் அன்னியனைப் பார்த்தான்.

‘இந்த ஊரில் யாருமே டெட்சுயா வில்லேந்தி இருப்பதைப் பார்த்ததில்லையே. அவன் மர ஆசாரி என்றுதான் எல்லோருக்கும் தெரியும்.” அவன் பதிலளித்தான்.
‘அடியோடு விட்டிருக்கலாம், ஒருவேளை தைரியம் இழந்திருக்கலாம் ஆனால் அதனால் எனக்கொன்றுமில்லை. தன் கலையை அவன் கைவிட்டால் அவன் இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த வில்வீரன் என்று கருதமுடியாது. அவனுக்குச் சவால் விடவும், அவனுக்குத் தகுதியற்ற அவன் பெருமையை முடிவுக்குக் கொண்டுவரவும் நான் இத்தனை நாளாக பயணம் செய்து வந்திருக்கிறேன்.’
அவனுடன் பேசுவதில் பொருளில்லை என்று அந்தப் பையன் தெரிந்துகொண்டான். தன் தவறை உணரும்படி அவனை மரஆசாரியின் கடைக்கு கூட்டிச் செல்வது தான் நல்லது.

டெட்சுயா வீட்டுக்குப் பின்னாலிருந்த பட்டறையில் இருந்தான். யார் வந்திருக்கிறார் என்று பார்க்கத் திரும்பினான். வந்தவனுடைய கையிலிருந்த பெரிய மூட்டையைக் கண்ட்தும் அவன் புன்னகை உறைந்துவிட்ட்து. ‘நீ நினைப்பதுதான் இது’ புதிதாக வந்தவன் சொன்னான். பெரிய கதாநாயகனை அவமானப் படுத்தவோ, சண்டைக்கு இழுக்கவோ நான் இங்கே வரவில்லை. இத்தனை வருடப் பயிற்சிக்குப் பிறகு வில்வித்தையின் உச்சத்தை அடைந்துவிட்டேன் என்பதை நிரூபிக்கவே வந்தேன்.” டெட்சுயா கவனிக்காத்து போல் வேலையைத் தொடர்ந்தான். ஒரு மேஜைக்குக் கால் வைத்துக் கொண்டிருந்தான்.


ஒரு தலைமுறைக்கு உதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று உன்னைப் போல் மறைந்துவிடக்கூடாது. நான் உங்களுடைய உபதேசங்களைப் பின்பற்றினேன். வில்வித்த்தையை மதித்தேன் நான் அம்புவிடுவதை நீ பார்க்கும் அளவுக்கு எனக்குத் தகுதி உண்டு. நீங்கள் அதைச் செய்தால், இப்படியே திரும்பிவிடுவேன். வில்வித்தையில் மிகப் பெரிய குருவை எங்கே காணலாம் என்பதை யாருக்கும் சொல்ல மாட்டேன். புதியவன் தன் மூட்டையிலிருந்து நீண்ட பளபளக்கும் அம்பு ஒன்றை அதன் நடுப்பகுதிக்கும் சற்றுக் கீழே பிடித்து உருவினான்.

டெட்சுயாவைப் பணிந்து வணங்கினான். தோட்ட்த்துக்குள் சென்று ஒரு இட்த்தைப் பார்த்து மீண்டும் வணங்கினான். பிறகு, பின்புறம் புறா இறகு வைக்கப்பட்ட அம்பு ஒன்றை வெளியில் எடுத்தான். அம்பு விடுவதற்கேற்ற மாதிரி உறுதியுடன் அசையாமல் நின்றான். ஒருகையால் வில்லை முகத்துக்கு நேராகப் பிடித்து இன்னொரு கையால் அம்பை சரியான் இடத்தில் பொறுத்தினான். சிறுவன் உள்ளுர மகிழ்ச்சியுடன் வியப்புடன் பார்த்தான். டெட்சுயா வேலை செய்வதை நிறுத்திவிட்டு புதியவனை ஆர்வத்துடன் கவனித்தான்.

அம்பைப் பொருத்தி, வில்லை நெஞ்சுக்கு நேராக உயர்த்தினான். தலைக்குமேல உயர்த்தினான். மெல்ல கீழிறக்கும்போது நாணைப் பின்னிழுத்தான். அம்பு முகத்துக்கு நேராக வரும்போது, வில் முழுமையாக இழுக்கப்பட்டிருந்தது. அப்படியே நின்றுவிட்டது போலிருந்தது. அவனும், வில்லும் அசையாமல் இருந்தனர். சிறுவன் அம்பு குறிவைத்திருக்கும் இடத்தைப் பார்த்தான். அவனுக்கு அங்கு ஒன்றும் தெரியவில்லை.

திடீரென்று நாணில் இருந்த கை விரிந்தது. பின்னால் சென்றது இன்னொரு கையிலிருந்த வில் வளைந்து நின்றது. அம்பு மறைந்து தூரத்தில் மீண்டும் தெரிந்தது. ‘போ, எடுத்து வா என்றான் டெட்சுயா. சிறுவன் அம்பை எடுத்து வந்தான். அது நாற்பது மீட்டருக்கு அப்பால் ஒரு செர்ரிப் பழத்தைத் துளைத்திருந்தது.

டெட்சுயா புதியவனை குனிந்து வணங்கிவிட்டு பட்டறையின் ஒரு மூலைக்குச் சென்றான். நீண்ட தோல் பையில் இருந்த மெல்லிய அழகாகச் செதுக்கப்பட்ட மரத்துண்டை எடுத்தான். தோல் பையை பிரித்து அதிலிருந்த வில் ஒன்றை எடுத்தான். அது புதியவனிடமிருந்த்து மாதிரிதான் இருந்த்து. ஆனால் பலமுறை உபயோகிக்கப்பட்டது. என்னிடம் அம்பு கிடையாது. உன்னிடம் உள்ளதைத்தான் உபயோகிப்பேன். நீ கேட்டுக் கொண்ட்து மாதிரி செய்வேன். ஆனால் நீ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். நானிருக்கும் ஊரை யாருக்கும் எப்போதும் சொல்லக் கூடாது. யாராவது கேட்டால், நான் அவனைக் கண்டுபிடிக்க உலகத்தின் கோடிக்கே சென்றேன் ஆனால் பின்னால் தெரிந்த்து பாம்புகடித்து அவன் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டான்’ என்று சொல்லிவிடு’ புதியவன் தலையாட்டிவிட்டு தன்னுடைய அம்பு ஒன்றைக் கொடுத்தான்.

நீண்ட மூங்கில் வில்லின் ஒரு முனையை சுவரில் வைத்து அழுத்தி டெட்சுயா வில்லைக் கட்டினான். ஒன்’றும் சொல்லாமல் மலைகளைப் பார்த்துச் செல்ல ஆரம்பித்தான். புதியவனும் சிறுவனும் அவனுடன்சென்றனர். ஒருமணி நேரம் நடந்து இரண்டு மலைகளுக்கிடையில் பெரும் பள்ளம் இருந்த இடத்தை அடைந்தனர். பள்ளத்தில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்த்து. இடைவெளிப் பள்ளத்திக் கடக்க கயிற்றுப் பாலம். அது எந்த நேரத்திலும் அற்று விழுந்துவிடும் நிலையில் இருந்தது.

டெட்சுயா மௌனமாக கயிற்றுப் பாலத்தின் மையப் பகுதிக்குச் சென்றான். அது மிக பயங்கரமாக ஆடியது. மறுபுறத்திலிருந்த எதையோ பார்த்துக் குனிந்து வணங்கிவிட்டு, அம்பை நாணேற்றி, தூக்கிப்பிடித்து நெஞ்சுக்கு நேர் வைத்து விட்டான். இருபது மீட்டருக்கு அப்பால் ஒரு பீச் பழத்தை அம்பு துளைத்திருந்த்தை சிறுவனும் புதியவனும் பார்த்தனர்.
‘நீ செர்ரிப் பழத்தில் நான் பீச் பழத்தில் அம்பை விட்டோம்’ டெட்சுயா கரைக்குத் திரும்பிக்கொண்டே சொன்னான். .

‘செர்ரி சின்னது. நாற்பது மீட்டர் தொலைவிலிருந்து அதைத் துளைத்தாய். நான் இருபது மீட்டரிலிருந்து. அதனால் நான் இப்போது செய்த்தை நீயும் செய்யவேண்டும். இந்தப் பாலத்தின் நடுவில் நின்று நான் செய்த மாதிரிச் செய்’
புதியவன் பயந்துநடுங்கி லொடலொடக்குப் பாலத்தின் நடுவில் சென்றான். கீழெ பள்ளத்தைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றான். டெட்சுயா செய்தமாதிரியே அவனும் செய்தான். பீச் மரத்தில் அம்பைவிட்டான் ஆனால் அம்பு விலகிப் போய்விட்டது.

கரைக்குத் திரும்பியபோது பயத்தில் அவன் முகம் வெளுத்திருந்தது. ‘உன்னிடம் திறமையும் கண்ணியமும், சரியாக நிற்பதும் இருக்கிறது. வில்லின் நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கிறாய் ஆனால் உன் மனதை வெற்றி கொள்ளவில்லை. எல்லா சூழ்நிலைகளும் உனக்குச் சாதகமாக இருக்கும்போது நன்றாக அம்புவிடுகிறாய். ஆனால் ஆபத்தான சூழலில் இலக்கை உன் அம்பு எட்டவில்லை. வில்வீரன் போர்க்களத்தை தானாகத் தேர்ந்தெடுக்க முடியாது. மீண்டும் பயிற்சியைத் தொடங்கு.சாதகமில்லாத் சூழலில் போரிடப் பழகு. வில்லின் வழியில் செல். அது வாழ்க்கைப் பயணம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள் நல்ல குறிதவறாமல் எய்வதும் மனதில் அமைதியுடன் எய்வதும் வேறுவேறு.

புதியவன் மீண்டும் நன்றாகக் குனிந்து வணங்கிவிட்டு, வில்லையும் அம்பையும் தோளில் சுமந்த நீண்ட பைக்குள் வைத்து அவ்விடத்தை விட்டு நீங்கினான். திரும்பி வரும்போது சிறுவன் மகிழ்ச்சியில் குதித்தான். ‘டெட்சுயா நீங்க காட்டிட்டீங்க.. நீங்க தான் உண்மையிலேயே பெரிய வீரன்’
முதலில் நாம் மற்றவர்களிடமிருந்து கேட்கவும், மரியாதை செய்யவும் கற்றுக் கொள்ளாமல் அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. புதிதாக வந்தவன் ரொம்ப நல்லவன். வெளியில் அப்படித் தெரிந்தாலும், அவன் என்னை அவமானப் படுத்தவில்லை. என்னைவிடப் திறமைசாலிஎன்று காட்டவும் முயலவில்லை. பார்ப்பதற்கு ஏதோ அவன் எனக்குச் சவால் விடுவது போல் இருந்தாலும்
அவன் தன் திறமையைப் பெருமைக்குக் காட்டவிரும்பினான். நாம் ஒத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினான். எதிர்பாராத சூழலில் மாட்டிக் கொள்வது வில்வீர்ர்களுக்கு நடப்பது தான். அவனும் அதைத்தான் இன்று என்னை செய்து காட்டவைத்தான்.

-------will continue------


english "The Way of the Bow" - A novel by Paulo Coelho
Tamil V.Rajagopal

No comments:

Post a Comment