Thursday, March 09, 2017

பூக்களின் கதை

குழல்விளக்குகள் ஒளி பொழிய
குளிரறையில்
ஒப்பனை மிகுந்த
பீங்கான் குடுவையில்
பச்சை ஒளிரும் இலைகளினுடே
கொத்தாக 
மிளிர்கின்றன
சிவப்பு
ஊதா
மஞ்சள்
வெண்மை 
வண்ணப்பூக்கள்

அடுக்கிய மனிதனின் 
மனவண்ணங்கள்
அதன் விளிம்புகளில் 
ஒட்டியிருக்கின்றன
தெளிக்கப்பட்ட வாசனைகளுடன்

அவன்
அவைகளைக் கொய்த
செடிகளில் விட்டுவைத்த
வண்ணப் பூக்களை
இயல்பாக
தழுவிக் கொள்ளும்
இருளும் ஒளியும்
இதமும் குளிரும்
வீசும் தென்றலும்

வீழ்ந்தன என்ற போதும்...


No comments:

Post a Comment