Friday, August 07, 2009

ஒரு சந்தேகம்

தத்தி நடந்துவரும்
தமிழ்க்குழந்தை நானென்று
புத்தியில் படுகிறது
போதாதென்று தெரிகிறது
பித்தேறிக் கிழமாகி
பீற்றிக் கொண்டிருத்தல்
எத்தனைதான் நன்றாக
இருந்தாலும் மோசந்தான்

நிலவை பாடுவதா?
நீளுலகைப் பாடுவதா?
கலவியில் தூங்கும்
காதலரைப் பாடுவதா?
புலவனென்று காட்ட
புற்றீசல் போலப்
பொலபொல வென்று
புறப்பட்ட எழுத்தாளர்
உலகினிலே சண்டையிட்டு
ஒருகவிஞன் ஆவதா?

வே. ராஜகோபால்

No comments:

Post a Comment