Wednesday, August 12, 2009

நாறிக்கிடக்கும் தமிழ்நாடு

நாறிக்கிடக்கும் தமிழ்நாடு
கூவம் நதியின் குமட்டும்பீ நாற்றத்தில் எத்தனையொ ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் தானைத் தலைவர்களின் கூட்டத்தில் கொஞ்சநாள் முன் தான் சேர்ந்தேன். மொகஞ்சோதாராவிலேயே கழிவுநீர் சாக்கடைகள் கட்டிய திராவிட இனம் அத/ற்கப்புறம் இன்னும் சாக்கடையைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. பரியை நரியாக்கி நரியைப் பரியாக்கியவர் பரம்பரையில் நதியைப் சாக்கடையாக்கிய திருவிளையாடல் நடத்தியவர்கள் தமிழர் தலைவர்கள். இதைப்பற்றி எதாவது தலைவரோ தொண்டரோ மூச்சு விடுவது கூடக் கிடையாது. பன்றிக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விளம்பரப்படம் எடுத்துப் போட நேரமுண்டு.
ரேஷன் கார்டு வாங்க அப்ளிகேஷன் கொடுத்ததிலிருந்து ஒருவருடம் வரை காத்திருக்க வைப்பதுதான் அரசு அதன் இணைய தளத்தில் கொடுத்திருக்கும் வாக்குறுதி. ஒரு குடிமகன் நான் இந்த முகவரியில் குடியிருக்கிறேன் என்று விண்ணப்பித்தால் அதை வந்து பார்த்தோ பார்க்காமலோ சரியென்று சொல்லி ரேஷன் கார்டு கொடுக்க ஏன் இத்தனை காலம் ஆகவேண்டும்? ஒரே நாளில் முகவரியை சரிபார்த்து தொலைபேசி இணைப்புக் கொடுக்கும் தொலைபேசிக் கம்பெனிகள் தமிழ்நாட்டில் உண்டு. அது போன்று ரேஷன் கார்டு கொடுக்க முடியுமே. ஆனால் கொடுக்க முடியாது என்கிறது தமிழக அரசின் இணையதளம். ஆனால் ஒரே மாதத்தில் பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை தொடங்கிவிடலாம். பாவம் அரசுக்கு எத்தனையோ வேலைகள். அத்தனை அரசு ஊழியர் சங்கங்களையும் பிடித்திருப்பது தி.மு.க. அல்லது இடதுசாரித் தொழிற்சங்கங்கள். ஒரு அலுவலகத்திலாவது கையூட்டின்றி எந்த வேலையும் நடவாதென்பது எல்லோரும் அறிந்திருக்கின்றனர்.
சினிமாக்காரர்களுக்கு எல்லா வசதியும் செய்துதர எப்போதும் தயாராக இருக்கும் அரசு, எப்போதும் கூட்டமாக இருக்கும் பஸ்கள், அரசு ஆஸ்பத்திரிகள், கூவம் பற்றி சிந்திப்பதே இல்லை. அரசு விழாக்களுக்கென்று கோடிக்கணக்கில் பணம் விரையமாகிறது. அதைக் கேட்பவர் கிடையாது. திருவள்ளுவருக்கு சிலைசெய்ய நேரமுண்டு. தமிழைக் கொலை செய்ய பள்ளிகளுண்டு.
கூகுளில் இருக்கும் சாட்டிலைட் மேப்பில்(Map) சென்னையைப் பார்த்தால் எதோ அங்கங்கே தண்ணீருக்கு நடுவில் இருக்கும் ஊராக இருக்கிறது. அத்தனையும் தண்ணீர் தேக்கங்களாக இருந்திருக்க வேண்டும். இப்போது அனேகமாக, விதிவிலக்கின்றி, சாக்கடைத் தேக்கங்கள்தான்.
பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சியோ சினிமாவோ மக்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசுவது கிடையாது. சினிமாக்காரி என்ன ஜட்டி போட்டிருந்தாள் என்பது தான் மக்களுக்கு விருப்பமானது. உப்புக்குச் சப்பில்லாத நடவடிக்கைகளை, பக்கம் பக்கமாக நிரப்பி, உண்மையான பிரச்சனைகளை ஒதுக்க நல்லவழி.
பெரிய பெரிய கட்டடங்கள், கொஞ்சம் பைசாப்படைத்த கூட்டம், வெளிநாட்டைப் பற்றியே கனவு காணும் இளவட்டங்கள். கல்விக்கூடங்களிலிருந்து பட்டங்களைப் பெற்றுவரும் இவர்கள் அறிவை மதிப்பதில்லை. அறிவுத்தாகமற்று கூலிக்கு மாறடிக்கும் பட்டதாரிகள். கூலிக்கு மாறடிக்க மட்டுமே கூலி கொடுக்கும் பள்ளிகள், கல்லூரிகள்.
இன்னும் வரும்…….கோபம்

No comments:

Post a Comment