Monday, May 22, 2017

வெளியேறுதல்

மேய்ப்பரே
உங்கள் மந்தையிலிருந்து
சில ஆடுகள்
தப்பிவிட்டன

கழுத்தில், காலில்
பிணைத்திருந்த தளைகள்
அறுந்துவிட்டன

தறிகெட்டு அவை
ஓடுவதாய்ப் புலம்புவதேன்

என்றாவது வரும் தீர்ப்பு நாளுக்குப் பின்
வரப்போகின்ற
பரலோக சாம்ராஜ்யத்தின்
மூச்சடைக்கும் சட்டங்களைவிட

இன்று
வெயில் கொளுத்தும்
பாலைவனத்தின் மணல்வெளியும்
அதில் வீசும் வெப்பக் காற்றும்
காய்ந்த சருகுகளும்
எங்காவது இருக்கும்
சோலையும்,
அதன் இதமான நிழலும், காற்றும்
போதுமே..
நாங்கள் இன்று உயிருடனிருக்க..

No comments:

Post a Comment