Tuesday, June 07, 2016

வாக்குமூலம்

எனக்கு அநீதி இழைத்த
எல்லோரையும்
மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்
அவர்கள் வருவார்களா என்று
அறியவில்லை

என்னால் அநீதி இழைக்கப்பட்ட
எல்லோரிடமும்
மன்னிப்புக் கேட்கத் தயாராக
இருக்கிறேன்
அவர்களைக் காண்பது
இயலுமா என்று தெரியவில்லை

நான் நல்லவன் என்பதாலோ
இயலாதவன் என்பதாலோ அல்ல
வேறு மாதிரி வாழ்ந்திருக்கலாம்
என்று நினைக்கிறேன்

அது முடியாததால்
இனியேனும் அப்படி
நிகழாதபடி
பார்த்துக் கொள்ள விழைகிறேன்

அன்பின் மூலம்
என் பாவங்களைக் கழுவ விரும்புகிறேன்
சொர்க்கத்திற்குப் போவதற்காக அல்ல
இங்கேயே வாழும் நரகத்தில்
குளிர்காற்றாய் வீச நினைக்கிறேன்

நீங்கள் சொல்வதை
நானும்
நான் சொல்வதை நீங்களும்
ஏற்றுக் கொள்ள வேண்டும்

என்று எதுவும் இல்லை

No comments:

Post a Comment