Thursday, February 04, 2010

மரங்களின் கதை

வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் பற்றிப் சமீபத்தில் படித்தேன். அரசமரம் தான் கதை சொல்லுகிறது. உடனடியாக ஞாபகம் வந்தது புளியமரத்தின் கதை. அடுத்து ஞாபகம் வந்தது சோ.தர்மனின் கூகை. இந்த வரிசையில் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் இலக்கியத்தில் மரத்தின் பரிணாம வளர்ச்சி மனதில் பட்டது.

குளத்தங்கரை அரசமரத்தில் பேசிய (அரச) மரம், புளிய மரத்தின் கதையின் மரம் பேசாத சாட்சியாக நிற்கிறது. தெருவிலும் ஊரிலும், நாட்டிலும் நடப்பதின் சாட்சியாக நிற்கிறது. கூகையில் வரும் மரம், கூகையின் தங்குமிடமாக, வாய்பேசாமலும், சாட்சியாக இராமலும் (இருந்தாலும் அது வெளியே தெரிவதில்லை) அமைதியாகிவிடுகிறது. கதைகளைப் பொறுத்தவரை வெளிப்படையாக துருத்திக் கொண்டு நின்ற மரம், இரண்டாவது கதையில் பேசாதிருந்து, மூன்றாவது கதையில் இருக்கும் இடம் தெரியாமல் ஆனால் ஒரு பின்புலமாக இருக்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால் நான் நான் என்று தம்பட்டம் அடித்த மரம், இரண்டாவதில் சத்தம் குறைந்து, மூன்றாவதில் கதையுடன் இயைந்து மெனக்கெட்டுப் பார்த்தால் ஒழிய தெரியாததாகி விடுகிறது.

இந்த வரிசையில் பார்த்தால், அது சமூகத்தின் குரல் என்றே அதைச் சொல்லலாம்.

No comments:

Post a Comment