Sunday, November 14, 2010

விஞ்ஞானிகள் சில கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கிறது . புதிய புதிய மருத்துவ முறைகளை செயல்படுத்தி பிறப்பிலிருந்து அல்லது மரபு வழியில் தொடரும் உடல் குறைபாடுகளை, அல்லது நோய்களை நீக்க, உடலியல் மருத்துவத்தை பயன் படுத்துவதன் மூலம் அவர்கள் கடவுளின் வேலையைச் செய்ய முற்படுகிறார்கள். அல்லது இயற்கைக்கு எதிரான வேலையைச் செய்கிறார்கள். உதாரணமாக பிறப்ப்பிலிருந்தே இதயச் செயல்பாட்டில் குறையுள்ள ஒருவனுக்கு உயிரியல் மருத்துவ முறையில் புதிய ஸ்டெம் செல்லை பயன்படுத்தி சரி செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த உடற்குறை அந்த மனிதனைப் பொறுத்த வரை இல்லாததாகி விட்டாலும் அவனுடைய மரபணுவில் அந்தக்குறை நீக்கப் படாததால் அடுத்த சந்ததியினரையும் அது தொடரும். இதனால் தனி மனிதனைப் பொறுத்த வரை நோய் நீங்கி விட்டாலும் அது பரம்பரையிலிருந்து விலகுவதில்லை. தொடரும் சந்ததியினரைப் பாதிக்கிறது.

ஆனால் இயற்க்கை தொடரும் சந்ததியினரை நோயிலிருந்து விலக்க ஒரு முறையைக் கடைப் பிடிக்கிறது. ஒவ்வொரு சந்ததியிலும் கடுமையாக வளரும் நோய் ஒன்று, ஒரு சந்ததியின் ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் முற்றி அவன் மரணம் அடையும் பொது அந்த மரபணுவை அந்தச் சந்ததியிடமிருந்து விலக்கி விடுகின்றது. அதனால் நீண்ட பரம்பரையிலிருந்து இயற்கை தானாகவே வைத்தியம் செய்து விடுகிறது. முதல் பத்தியில் சொன்ன நடைமுறையில் இது முற்றிலுமாக மறுதலிக்கப் படுகிறது. ஸ்டெம் செல் வைத்தியத்தில் பரம்பரை பரம்பரையாக விலக்கப் படாத நோய் தொடரும். அதனால் மேலும் மேலும் குறையுற்ற மனிதர்கள் பிறக்க வழியுண்டு.


இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சந்ததியிலும் மேலும் மேலும் குறைவுற்ற மனிதர்கள் பிறந்துவிட நேரும்.

No comments:

Post a Comment