Tuesday, December 01, 2009

சின்ன நாச்சியார் கதை

விஷ்ணு குடுமியை இழுத்துச் சுற்றிக் கொண்டான். துண்டும் சேர்ந்தே இருந்த குடுமி காய எவ்வளவு நேரமாகும் என்று தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும். கோவிலைச் சுத்தப்படுத்திவிட்டு பண்டாரம் போயிருப்பான். வானத்தைப் பார்த்தான். விடிவதற்கு இரண்டு மூன்று நாழிகை இருக்கலாம் என்று கணித்துக் கொண்டான். அக்ரஹாரத்துக்குள் வந்த போது சில்லென்று காற்று நெஞ்சில் அடித்தது. குளிர் காலம் இல்லையென்றாலும் இந்த நாழிகையில் இப்படித்தான் இருக்கும். இங்கிருந்து மலையடிவாரம் சில கல் தூரம்தான் அதைத் தாண்டினால் பெரும் மலைத்தொடரின் வரிசைகள் வந்துவிடும்.

கோயிலின் ஒருவாசல் கதவு மட்டும் திறந்திருந்தது. இந்த இருளில் அங்கங்கே கோயிலில் வைத்திருந்த எண்ணெய் விளக்குகள் காற்றுடன் போராடிக் கொண்டிருந்தன. யாரும் உள்ளே இருப்பதாகக் காணோம். பண்டாரம் கோவிலைவிட்டுப் போயிருப்பான் போலும். வெளிப்பிரகாரம் வழியே சுற்றிக் கொண்டு, கோவிலின் பின்புறத்திலுள்ள மலர் வனத்துக்குச் சென்றான். அங்கு இருளாக இருந்தாலும், விடிகாலை வெளிச்சமும் இருந்தது. எல்லாம் துலக்கமாகத் தெரிந்தன. செடிகளின் கரும் பச்சையில் வெள்ளை மலர்கள் தெளிவாகத் தெரிந்தன. மஞ்சள், சிவப்பு மலர்களும் நிறையப் பூத்திருந்தன. தினந்தினமும் பார்த்த பழகிப் போன காட்சிகள். சர்ப்பங்களும் உண்டென்று கொஞ்சம் நிதானமாக காலடி எடுத்து வைத்தான். பகவான் அருளிருக்க இதுவரை அப்படி ஏதும் நிகழவில்லை. ஆனாலும் பயம் இருந்தது.

மனம் பதட்டத்துடனேயே அலைமோதிக் கொண்டிருந்தது. முகத்தில் என்றும் இருக்கிற சாந்தம் இல்லை. நாமாகவே கற்பனை பண்ணிக் கொள்கிறோம் என்றும் நினைத்தான். கொஞ்ச நாட்களாக அப்படித்தான் இருக்கிறது. காரணம் அவனுக்கும் பண்டாரத்துக்கு மட்டும்தான் தெரியும். சிறுகிழாருக்குத் தெரிந்தால் இந்தப் பணியைத் தொடரமுடியாது. உஞ்சவிருத்தி எடுத்துப் பிழைக்க வேண்டியதாகிவிடும். இதுவும் ஒருவகையில் உஞ்சவிருத்திதான். தெருவில் போகவேண்டியதில்லை. கிழார் வீட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருட்களும் விளைந்ததும் அனுப்பி விடுவார்கள். கேட்கவேண்டியதில்லை. கேட்டாலும் கிடைக்குமா என்பது சந்தேகம். விஷ்ணுவும் வயதான அம்மாவும் அதை நம்பித்தான் இருந்தார்கள். கோயிலுக்கு எண்ணைய் கொடுப்பவர்கள் பட்டருக்கும் கொடுத்துவிடுவார்கள்.

புதிதாகப் பின்னிய மலர்க்கூடையில் மலர்களைப் பறித்துப் போட ஆரம்பித்தான். பெருமாளுக்கு ஆழ்வார் பாசுரங்கள் கிழார் வந்து முதல் ஆரத்தி காட்டும் வரை மலர் தூவிக்கொண்டே பாடவேண்டும். அதற்குத் தேவையான அளவு மலர்கள் வேண்டும். அது தவிர மாலைகள் கட்டிப் போடவேண்டும். வேக வேகமாக கைவிரல்கள் வேலை செய்தன. நடு நடுவில் செவத்தாள் ஞாபகம் வந்தாள். என்ன சொல்லியும் கேட்கவில்லை அவள். பிடிவாதக்காரி. அவள் இங்கிருந்தாள் அவள் பெயரோடு அவன் பெயரும் களங்கமாகி இருக்கும். ஒரு பிராமணன் தன்னை நேசித்ததே அவளுக்குப் பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஏதாவது செய்து விடுவோம் என்று குறிப்பாகச் சொல்லிப் பார்த்தான். அவள் கேட்பதாக இல்லை. இறைவன் கொடுத்த வரம். அதை அழித்துவிடக்கூடாது என்று அவள் நம்பினாள். அவள் அப்பனான சாமிப் பண்டாரமும் அவளுக்கு உதவினான். அனேகமாக அவள் குழந்தை பெற்றிருக்க வேண்டும். எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் மீது விஷ்ணுவுக்கு ரொம்பப் பாசம் என்று அவளே பலபேரிடம் சொல்லியிருக்கிறாள். அவனுக்கு அவள் ஞாபகம் வந்தாலும், அது அவள் மேல் உள்ள நேசமா அல்லது உளைச்சலா என்று அவனுக்குப் புரிந்ததில்லை. அவன் ஆண், அந்தணன். அதிலும் கோயிலில் வழிபாடு நடத்துபவன். அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவை எப்படி எடுத்துக் கொள்வது அல்லது மற்றவர்கள் முன் எப்படிச் சொல்வது என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.


சிறு வயது முதல் இருவரும் ஓரே இடத்தில் வளைய வளைய வருபவர்கள். சாமிப் பண்டாரம் அவன் அப்பா வயது. ஜாதியில் தாழ்ந்திருந்தாலும் இருவரும் கோயில் சார்ந்தே வாழ்வதனால் ரொம்பப் பழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த உடம்பு ஒன்று இருக்கிறதே அது மாயம் அது இது என்று என்ன சொன்னாலும், ஜாதி ஆச்சாரங்களைப் பார்க்காது. அதனுடைய பசி அவனையும் அவளையும் சாப்பிட்டுவிட்டது. மூன்று மாதமாக அவளைக் காணவில்லை.


சாமிப் பண்டாரம் சொன்னான் “அவள் பத்ரமா இருக்கா சாமி. ஏதோ தெய்வச் செயல். நடந்தது நடந்துபோச்சு. ரெண்டுபேரும் சாமிக்குப் பணி செய்றீங்க. நம்ப ஒரு பாவமும் செய்யக் கூடாது. அது பொறந்தா பொறக்கட்டும். கிழாருக்குத் தெரியாது என்ன நடந்ததுன்னு. நான் வெளியூர் போயிருக்கான்னு சொல்லி வச்சிருக்கேன். அவருக்கும் அவ மேல ஆசைதான். ஆனா வெளிப்படையா ஒண்ணும் செய்ய முடியாம இருந்தார். இனிமே அவளுக்குத் திருமணம் கைகூடாது. அந்தக் குழந்தையை வச்சுக் காப்பாத்த வேண்டியது தான். நேத்துக் குழந்த பொறந்த்துன்னு சொல்லிவிட்ருக்கா. என்ன நடக்கணுமோ அது ஆண்டவன் செயல்”

ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடும் என்று விஷ்ணுவுக்குத் தோன்றிக் கொண்டேஇருந்தது. அவள் அப்படி. ரொம்ப அவனை விரும்பினாள். விளையாடும் போதும் அடிக்கடி எதிர்த்துக் கேட்பாள். அவள் பிராமணத்தியாக இல்லாதது அவளுக்கு வசதியாகப் போய்விட்டது. அவனை அச்சுறுத்தலாம். என்ன நடந்தது என்று கிழாருக்குத் தெரிந்தால்… ஆனால் அவளும் சாமிப் பண்டாரமும் அப்படி ஆட்களாகத் தெரியவில்லை. கோயிலையும் அக்ரஹாரத்தையும், சிறுகிழாரையும் நம்பித்தான் அவர்கள் கதை நடக்கிறது. பகைத்துக் கொள்ளமுடியாது. அல்லது அடிமைச் சேவகம் செய்யவேண்டும். கோவிலடிமையாக இருப்பது தேவலை. அதுவும் பட்டருடன் இருப்பது ரொம்ப வசதி.

விஷ்ணும் எதிர்பார்த்தபடி நடந்தது.

மலர் பறித்துக்கொண்டு கோயில் உள்நடையில் எப்போதும் உட்கார்ந்து பூக்கோத்துக் கொண்டிருக்கும் இடத்துக்குப் போனான். அங்கே திண்ணை மீது அவனும், நாலைந்து படிக்குக் கீழ் சாமிப் பண்டாரமும் அமர்ந்து பேசிக்கொண்டே வேலை நடக்கும். ஏதாவது எடுபிடி வேலை என்றால் சாமிப் பண்டாரம் செய்வான். ஆனால் அவன் அப்படி வேலை செய்வது ஊரார் யாருக்கும் தெரியக் கூடாது என்பது வழக்கம். தெரிந்தாலும் கிழார் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார். கோவிலில் எவ்வளவு வேலை என்பது அவருக்குத் தெரியும். ஒண்டி ஆளாக விஷ்ணுவால் முடியாது.

எப்போது உட்காரும் இடத்தில் சாமிப் பண்டாரத்தைக் காணவில்லை. விஷ்ணுவுக்கு வேலைசெய்து களைத்துவிட்டது. அப்போதுதான் சாமிப்பண்டாரம் ஓடிவந்தான், கையில் ஏதோ துணிகட்டு மாதிரி இருந்தது. இந்த நேரத்தில் அவன் பதைத்து ஏன் ஓடி வருகிறான் என்பது அவனுக்குப் புரியவில்லை.

===


விஷ்ணு அன்று வழிபாடு முடிந்ததும் கிழார் வீட்டுக்கு வழக்கம் போல அவர் பின்னாலேயே போனான். நன்றாக விடிந்து விட்டது. வெய்யில் வரவில்லை. சிறுகிழார் வீட்டை விட்டு ஒதுங்கிச் சாமிப் பண்டாரம், கையில் எதையோ துணியால் சுற்றிவைத்து தாங்கிக்கொண்டு நின்றிருந்தான். விஷ்ணுவுக்கு பதைபதைப்பு மிகவும் அதிகமாகி விட்டது. ஓடோடி வந்து கையிலிருந்த மூட்டையுடன் கிழார் காலில் விழுந்தான். கையில் ஒரு பச்சைக் குழந்தை. பிறந்து சில நாட்களே ஆகியிருக்க வேண்டும். விஷ்ணுவும் அப்போதுதான் பார்த்தான். மனது அடித்துக் கொண்டது. ஏதாவது சொல்லி பிழைப்பைக் கெடுத்துவிடுவானோ? அதை வெளிக்காட்டமலிருக்க முயன்றான். ஆனால் பேச்சு எழவில்லை.

“என்னடா கையில?” நிமிர்ந்த தலை திரும்பாமலே கேட்டார்.

“சாமி, குழந்தை…கோவில் வாசலில் காலையில் கிடந்தது”.
திடுக்கிட்டு நின்றார். கிழார் விஷ்ணுவைப் பார்த்தார்.

“யாரு பெத்த பிள்ளையோ? களையான முகம் மேல்ஜாதிக் குழந்தையாகத்தான் இருக்கணும். நல்ல மூக்கும் முழியுமா இருக்கு” அவன் வருத்தத்தில் பேசுவது மாதிரித் தெரியவில்லை. ஏதோ புதையல் எடுத்த மாதிரிப் பேசிக் கொண்டிருந்தான். அவருடைய முகத்திலும் அதிர்ச்சி இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. பிறந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும் என்று கிழாரின் மனைவி சொன்னாள். அந்தணக் குழந்தை என்பது அவளின் ஊகம். விஷ்ணுவைப் பார்த்தாள். அதில் இருவருக்கும் ஏதோ புரிந்தது. அவள் கிழாரின் காதில் எதையோ சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். மூவரும் வீட்டினுள் சென்று எதையோ பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார்கள்.

விஷ்ணு ஊகிக்க வேண்டியிருக்கவில்லை. அதற்குப் பின் செவத்தாளைக் காணவில்லை. விஷ்ணுவுக்கு சாமிப் பண்டாரம் எதையோ மறைக்கிறான் என்று புரிந்தது. வெளிப்படையாக கேட்க முடியவில்லை. கேட்டால் ஏதாவது சொல்லி தன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தான். கோயிலில் கிடைத்த அழகான குழந்தை, பகவானின் அருளால் கிடைத்த குழந்தை, திருமணம் ஆகாத விஷ்ணுவில் வீட்டில் வளர்ந்து வந்தது. அவனுடைய அம்மாவும் குழந்தையை கொஞ்சிக் குலாவினாள். அதன் முக லட்சணம் ஒரு காரணம். ஒருவேளை குழந்தை அவளைப் போல் பிறந்திருந்தால் கண்டுபிடித்து … அதற்கு மேல் அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. அவனும் இனிமேல திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவு கட்டிவிட்டான்.

சின்ன நாச்சியார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தாள். ஊரில் அவள் விஷ்ணு பட்டரின் மகளென்RU தெரிந்தும் தெரியாத ரகஸியமாய் இருந்தது. செவத்தாள் அதற்கப்புறம் எங்கே போனாள் என்று தெரியவில்லை.

இந்தச் சின்ன நாச்சியார்தான் ஆண்டாளாக மாறி இருக்கலாம் என்று மடையர்கள் சொன்னால் நாம் ஒத்துக் கொள்ளமுடியாது. மறுக்கவும் முடியாது. ஏனெனில் எல்லாம் புராணக்கதை.

Wednesday, November 11, 2009

பிரதிபலிக்கும் தளங்கள்

சைமன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்ததும், கலிஸ்தா சுறுப்படைந்து குளியலறைக்குச் சென்றாள். தண்ணீர் இதமான சூடாக இருந்த்து. பாத்ரூம் கண்ணாடி நீராவியால் பனித்திரை போல் மறைக்கப்படும் வரை, விரல்களில் சுருக்கம் ஏற்படும் வரை நீருக்கடியில் நின்றாள்.

தலையில் ஷாம்புவைச் சிறிது கொட்டி தேய்க்கும் போது முடி இழைகள் அவள் விரல்களில் சுற்றிக் கொண்டன. தன் மீது தண்ணீரை வழிந்தோடும்போது இன்னும் முடி இழைகள் நீரில் சுழன்று வடிகாலில் செல்வதைப் பார்த்தாள். உடலிலிருந்த சோப்புநுரை நுரைகளை கழுவிவிட்டு ஷவரை விட்டு வெளியில் வந்தாள். உடலைத்துண்டால் போர்த்திக் கொண்டு, கண்ணாடியைக் கையால் ஒரு முறை துடைத்தாள். நின்று பார்த்தாள்.

சைமன் கதவைத் தட்டினான் “என்ன உள்ளே ஓ.கே யா?

அவள் கதவைத் திறந்தாள்.

“ஏய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“நான் இதை வெறுக்கிறேன்” அவள் முணுமுணுத்தாள்

அவன் அவளைக் கட்டியணைத்து, கழுத்தில் முத்தமிட்டான்.

“சீரியஸாத்தான், சைமன், என் தலையைப் பார்த்தாயா? நான் எப்படி இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”

“ஆமா, ரொம்ப அழகாக இருக்கிறாய்” அவன் தொடர்ந்தான் “எப்பவும் போல. இனிமேலும் அழகாய்த்தான் இருப்பாய்”

அவள் சிரித்தாள். அவளுக்குத் தெரியும் அவன் பொய் சொல்லுகிறான். சில விஷயங்கள் இயல்பாகவே பொய்யாகி விடுகின்றன.

“அழகா…இருக்கிறேன்.. ஹ...”

“ஆமா.”

“அது எப்படிங்கிறேன்?”

“நீ என்ன சொல்ற? எப்படியா? அது அப்படித்தான்..” அவன் கண்களில் ஒளியில்லை. நெற்றி சுருங்கியது. ஆயிரம் வாதங்களை மறுத்து கடைசித் தடவை அழுத்திச் சொல்வது போல்

மீண்டும் சொன்னான் “அழகாக இருக்கிறாய்”

“இல்லை” கலிஸ்தா யோசித்தாள். அவன் எப்படி நினைக்க முடியும்? அவனால் முடியாது. அவன் அப்படி நினைக்கவில்லை. இது அழகானதல்ல. இது புற்றுநோய். இது இழப்பு. நீலப்பச்சை டைல்ஸ் பதித்த பாத்ரூம் தரையெங்கும் அவள் கருத்த தலைமயிர் கொட்டிப் பரவியிருந்த்து. அவள் தலை கொஞ்சம் ஒட்டியிருந்த முடிகளுடன் சொரசொரப்பாக இருந்தது.
அவன் கையை நீட்டினான். அவள் கூச்சத்திலும் விலக்காமல் இருக்க முயன்றாள். ஆனாலும் விலகுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவள் முன்புபோல் இல்லை. அவன்மீதும் தான் முன்புபோல் உணரவில்லை என்று பயந்தாள்.

“மீதமிருப்பதையும் சிரைத்து விட வேண்டும்” சொல்லும் போது அவள் தொண்டை அடைத்தது. இதைச் சொல்லத் தயாராக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் தயார்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

“நான் சிரைத்து விடுகிறேன். என்னைப் பண்ண விடு” அவன் சொன்னான்.

“நல்லது. இப்பவே பண்ணிவிடுவோம். இத்தோட இதை முடிக்கணும்னு விரும்புகிறேன்”
அவன் மருந்துகள் வைத்திருக்கும் மர டிராயரை உருட்டித் தேடி ஒரு புது ரேஸரை எடுத்தான். “மெல்லியது” என்று அதன் பிளாஸ்டிக் அட்டையில் சிவப்பெழுத்தில் இருந்தது

அவள் ஜாக்கிரதையாக பாத்டப்பின் விளிம்பில் உட்கார்ந்தாள். அவன் கையில் ஷேவிங் கிரீம் டப்பாவுடன் அவளருகில் நின்றான். அவன் ஷேவிங்கிரீமைத் தலையில் தடவத் தொடங்கியதும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் அழ விரும்பவில்லை. அவள் விரும்புவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.

“முடி, வெறும் முடிதானே” அவள் நினைத்தாள்.
அவன் சிங்க்கில் கைகளைக் கழுவினான். அவன் திரும்பி நிற்கும் போது அவனைப் பார்த்தாள். முடிச்சுருள்கற்றைகள் வேர்வையில் ஈரமாக இருந்தன. அவளுக்காக அவன் தைரியமாக இருந்தான். இதை எப்படிச் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

ரேசருடன் அவளிடம் திரும்பினான். அவள் கைகளால் அவன் இடுப்பைச் சுற்றிக் கொண்டாள். பிடித்துக் கொள்ளவேண்டும்.

ரேசர் அவள் தலையை சிரைக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று. அவள் எண்ணுவதை விட்டுவிட்டாள். ரேசரின் வேலை முடிவின்றித் தொடர்வது போல் தோன்றியது.
திடீரென்று அவளுக்குத் தோன்றியது. தம் உடலிலிருந்து, இதமான சூடுதரும் உரோமங்கள், சிரைக்கப் படும் போது செம்மறி ஆடுகள் என்ன உணரும்? செம்மறிகள் கொடுமை இழைக்கப்பட்டதாக, திருடப்பட்டதாக உணருமா? என்றெல்லாம் அவள் யோசித்ததில்லை. செம்மறிகள் பற்றி அவள் யோசித்ததே இல்லையே.

அவன் முடித்துவிட்டான். ரேசரைக் கழுவினான். தலையைத் துவட்ட செண்ட் போட்ட துண்டை எடுத்தாள். தன்கையால் மொட்டைத் தலையைத் தடவிப் பார்த்தாள்.

சைமன் ரேசரை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டான். பாத்ரும் டப்பின் விளிம்பில் அவளருகில் உட்கார்ந்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. கைகளால் அவளை அணைத்துக் கொண்டான். அவள் அவன் கையை விலக்கிக்கொண்டு விடாதபடி தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தான். அவன் நீண்ட விரல்கள் அவளுடலின் இந்தப் புதிய பகுதியை தொடவும், தடவவும், நினைவில் இருத்திக் கொள்ளவும் விரும்பின.

கலிஸ்தா மென்மையாக அவனுடைய சுருள்முடிகளுக்கும் கைகளை விட்டு, அடிப்பகுதியைப்
பிடித்து அவற்றின் இளஞ்சூட்டில் கைகளை அப்படியோ வைத்துக் கொண்டிருந்தாள். சுருக்கம் விழுந்த அவன் வெள்ளைச் சட்டையில் புதைந்து அழுதாள்.

“அழகாக இருக்கிறது” இந்த வார்த்தைகளை மட்டும் அவன் முணுமுணுப்பதைக் கேட்க முடிந்தது.

கொஞ்சமாவது உறுதி இருந்தால் அவள் மீண்டும் சிரித்திருப்பாள். ஆனால் முடியவில்லை.
விழித்தபோது காலை மூன்று மணி.. கடிகாரத்தின் எண்களிலிருந்து வந்த ஒளி அவள் கண்களை உறுத்தியது. அவள் மறுபுறம் திரும்பிப் படுத்தாள். குளிர்ந்தது.

அறையிலிருந்த அமைதி வினோதமாக இருந்தது. மூச்சைப் பெரிதாக இழுத்து விட்டுக் கொண்டு சீராக்க் குறட்டைவிட்டுத் தூங்கும் சைமன் அவளருகில் படுத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தாள். எழுந்து உட்கார்ந்தாள். படுக்கையில் இருந்த கால்களை எடுத்துத் தரையில் வைத்தாள். காலில் ஒரு ஜீன்ஸ் பேண்ட் பட்டது. தன்னை தடுமாறாமல் நிறுத்திக் கொண்டு ஹாலுக்குள் கவனமாக நடந்தாள். ஹாலில் இருந்த பாத்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது.

மெல்ல நடந்து கதவைத் திறந்தாள். அவன் தான். கையில் ரேசருடன் குப்பைத் தொட்டிப்பக்கம் தலையை நீட்டிக் கொண்டிருந்தான். அநேனகமாக வேலை முடிந்துவிட்ட்து. பாத்ரூம் டைல்கள் மீது கத்தை கத்தையாக முடி பரவிக் கிடந்தது. இரண்டு இழுப்புகளில் வேலை முடிந்துவிட்டது. நீல நிற ரத்தக் குழாய்கள் மொட்டைத் தலையில் பெரிதாகத் தெரிந்தன.

நம்பமுடியாமல் கால்கள், குரல், சிந்தனை எல்லாம் ஸ்தம்பித்துவிட்டன. அவன் நிமிர்ந்து அவள் நிற்பதைப் பார்த்தான். அவன் கண்கள், மூக்கின் நுனி சிவந்திருந்தன.
அவனிடம் போனாள். கழுத்தின் பின்புறம் தொடங்கிக் கண் இமைகள், கன்னங்கள் தாடை மீது கைகளைத் தடவினாள். அவன் முன்புறம் குனிந்து மென்மையான முன் தலையால் அவள் தலைமீது மெல்ல அழுத்தினான். அவன் உருவத்தை, கண்ணீரை, அவள் வலியைப் புரிந்து கொள்ள வேண்டிய அவன் தேவையை மனதில் இருத்திக் கொண்டாள். அவன் அவள் கண்களால் பார்த்தான். அவளும் அவன் கண்களால் பார்க்க முடிந்தது.

அவள் சொன்னாள் “அழகாக இருக்கிறது”

* * * * * * * * * * * * * * *

REFLECTING SURFACES, Christie Lambert Boston Literary Magazine, Fall,2009. Tamil Translation by V.Rajagopal

ஆங்கிலத்தில் கிறிஸ்டி லாம்பர்ட்., போஸ்டன் லிடர்ரி மேகஸீன், Fall, 2009
தமிழில் வே. ராஜகோபால்.

Tuesday, November 10, 2009

வில்லேருழவர் 3


அம்பு


அம்பு என்பது நமது எண்ணம். வில்லின் உறுதியையும் இலக்கின் மையத்தையும் இணைக்கிறது. எண்ணம் மிகமிகத் தெளிவாக, நேராக, சமச்சீராக, இருக்கவேண்டும். அம்பை விட்டுவிட்டால் திரும்ப வராது. இலக்குத் தயாராக இருக்கிறது என்பதற்காகவோ வில்லில் நாணேற்றிவிட்டோம் என்பதற்காகவோ முழுக்கவனமின்றி அம்பை எய்துவிடாமல், அதைச் செலுத்துவது வரைக்கும் நடந்ததனைத்தும் முறையாக, மிகச் சரியாக இல்லை என்றால், அது செலுத்தாமல் இருபதே நல்லது. தவறு செய்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக மட்டும் அம்பு எய்வதை நிறுத்தாதே. சரியான முறையில் நாணேற்றினால் கைகளை விரித்து அம்பை விடு. அம்பு இலக்கைத் தவறவிட்டாலும் அடுத்தமுறை எப்படி சரியாக விடுவது என்பதை நீ அறிந்து கொள்வாய். அந்த சவாலை எதிர்கொள்ளாவிட்டால் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதை நீ அறிய முடியாது. ஒவ்வொரு அம்பும் தன் நினைவை விட்டுச் செல்லும் அந்த மொத்த நினைவுகள் தான் மேலும் மேலும் சிறப்பாக அம்புவிட வைக்கும்.


இலக்கு
அடையவேண்டிய குறிக்கோள்தான் இலக்கு. வில்வீரன் அதை தீர்மானிக்கிறான். அது வெகு தூரத்தில் இருந்தாலும் நாம் அடையமுடியவில்லை என்றால் அதைக் குறை கூற முடியாது. இதில்தான் வில்வித்தையின் பெருமை இருக்கிறது. எதிரி உன்னைவிட பலசாலி என்று நீ சாக்குச் சொல்ல முடியாது. நீதான் இலக்கைத் தேர்ந்தெடுத்தாய் அதற்கு நீதான் பொறுப்பு. இலக்கு முன்னாலோ பின்னாலோ பெரிதாகவோ சிறிதாகவோ இடப்புறமோ வலப்புறமோ இருக்கலாம். அதை மதித்து மனத்தின் அருகில் கொண்டுவரவேண்டும். அது உன் அம்பின் முனையில் இருக்கும் போது அதை நாணிலிருந்து விடவேண்டும். இலக்கை எதிரியாக மட்டும் நினைத்தால், இலக்கை நீஅடித்துவிடலாம். ஆனால் உனக்குள் எந்த நிறைவையும் அடையமுடியாது.

ஒரு காகிதத்தின் அல்லது மரத்தின் நடுவில் அம்பைவிடுவது தான் வாழ்வின் அனுபவமாகிவிடும். அது பொருளற்றது. மற்றவர்களுடன் இருக்கும் போது, சுவராஸ்யமாக எதையும் செய்யமுடிவதில்லை என்று புலம்ப நேரிடும். அதனால், இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதை அடிக்க முயலவேண்டும். இலக்கைப் பெருமையுடனும் மரியாதையுடனும் அணுகவேண்டும். அதன் மதிப்பென்ன? அதற்காக எவ்வளவு பயிற்சியும் உள்ளுணர்வும் உனக்குத் தேவைப்பட்டது என்பது உனக்குத் தெரியவேண்டும். இலக்கைப் பார்க்கும் போது அதை மட்டும் கவனிக்காதே. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கவனி. ஏனெனில், அம்பை விடும்போது, காற்று, எடை, தூரம் என்பன போன்ற நீ கவனிக்காத பல விஷயங்கள் அதை பாதிக்கும்.

நீ இலக்கைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இலக்காக இருந்தால் எப்படி இருப்பேன்? எய்தவன் பெருமைப்பட வேண்டுமெனில் அம்பு எங்கே குத்துவதை விரும்புவேன்? என்று எப்போதும் உன்னை நீயே கேட்டுக்கொள்ள வேண்டும். வில்வீரன் இருந்தால்தான் இலக்கும் இருக்கும். அதை அடையவேண்டும் என்ற வீரனின் ஆசைதான் இலக்கின் இருப்பதற்கான நியாயம். இல்லையெனில் அது வெறும் உயிரற்ற பொருள், மரத்துண்டு அல்லது காகிதத்துண்டு. அம்பு எவ்வாறு இலக்கைத் தேடுகிறதோ அவ்வாறே இலக்கும் அம்பைத் தேடுகிறது. ஏனெனில் அம்புதான் இலக்கு இருப்பதற்கான அர்த்தத்தைத் தருகிறது. அது வெறும் காகித அல்லது மரத் துண்டு அல்ல. வில்வீரனுக்கு அதுதான் உலகின் மையம்.
வில்லேருழவர் 2

“நீங்கள் மிகச்சிறந்த வில்வீரர் என்று அவன் சொன்னான். நீங்கள் வில்வித்தையில் வல்லவர் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஏன் மரவேலை பார்க்க வேண்டும்.

“மரவேலை செய்யவேண்டும் என்பது என் கனவு. வில்வித்தை எல்லாவற்றுக்கும் உதவும். சொல்லப்போனால் வில்வித்தை கற்றவனுக்கு வில் அம்பு, இலக்கு எதுவும் தேவையில்லை’

அந்தச் சிறுவன் தொடர்ந்தான் “ இந்தக் கிராமத்தில் சுவராஸ்யமாக எதுவும் நடப்பதில்லை. இப்போது திடீரென்று நான் ஒரு வில் வீர்ரை, ‘குரு’வைப் பார்க்கிறேன் யாருமே அவரைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவன் கண்கள் ஒளிவிட்டன.

வில்வித்தை என்றால் என்ன? எனக்குச் சொல்லித் தருவீர்களா?

சொல்லித் தருவது ஒன்றும் கஷ்டமானதல்ல. கிராமத்துக்குச் செல்லும் போதே வழியில் ஒருமணி நேரத்துக்குள் முடித்துவிடுவேன். மிக மிகச் தேர்ச்சி பெறுவது வரை நீ தினமும் பயிற்சி செய்வது தான் கஷ்டமானது.,

சரியென்று சொல்லிவிடுங்களேன் என்று சிறுவனின் கண்கள் அவனைக் கெஞ்சுவது போலிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் டெட்சுயா அமைதியாக நடந்தான். அவன் மீண்டும் பேசிய போது அவன் குரல் இளமையாக ஒலித்தது.

“இன்று எனக்குத் திருப்தியாக இருக்கிறது.. ரொம்ப வருஷங்களுக்கு முன் என் உயிரைக் காப்பாற்றிய ஒருவருக்கு நான் மரியாதை செய்தேன். அதனால் நான் எல்லா விதிகளையும் சொல்லித்தருவேன். அதற்கு மேல் முடியாது. நீ நான் சொல்வதைப் புரிந்துகொண்டால் என் உபதேசத்தை நீ விரும்பியபடி உபயோகிக்கலாம். கொஞ்சநேரத்துக்கு முன்னால் என்னை ‘குரு’ என்று சொன்னாய். குரு என்றால் யார்? எதையாவது யாருக்காவது சொல்லித் தருபவன் குரு அல்ல. யார் ஒருவன் ஒரு மாணவனின் ஆத்மாவில் ஏற்கனவே இருக்கும் முழுத் திறமையையும் அவனே கண்டு கொள்ளக் கற்பிக்கிறானோ அவன்தான் குரு. மலையிலிருந்து இறங்கும் போது டெட்சுயா வில்வித்தையை அவனுக்கு விளக்கினான்.

தோழர்கள்

அம்பும் வில்லும் பற்றிய தனது மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாத வில்வீரன் தனது குணங்களையும் குறைகளையும் அறிந்துகொள்வதில்லை. அதனால் எதையும் நீ தொடங்குமுன் உன் வேலையில் ஆர்வமுள்ள தோழர்களை, தெரிந்தவர்களைத் தேடு. மற்ற வில்வீர்ர்களைத் தேடு என்று நான் சொல்லவில்லை. மற்ற திறமைகள் உள்ளவர்களைத் தேடு. மகிழ்ச்சியுடன் தொடரும் எந்த வித்தையையும் மாதிரித்தான் வில்வித்தையும். எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இவரை விடச் சிறந்தவர் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குத் திறமையான தோழர்கள் பற்றிச் சொல்லவில்லை
.தவறுசெய்யப் பயப்படுகிற, அதனாலேயே தவறுகள் செய்கிற மனிதர்கள். அதனால் அவர்கள் வேலையை யாரும் அங்கீகரிப்பதில்லை. ஆனால், அது போன்றவர்கள் தான் உலகை மாற்றி அமைக்கிறார்கள். பல தவறுகள் செய்த பின்னால் ஏதாவது செய்து, அவர்கள் வாழும் சமூகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவந்து விடுவார்கள். தங்களைச் சுற்றி ஏதாவது நடக்கும் என்று காத்திருந்து பின்னர் தங்கள் பாதையை அதற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பொறுத்திருக்க மாட்டாதவர்கள். செயலில் ஈடுபடும் போதே பெரும் ஆபத்து என்று தெரிந்தும் முடிவெடுப்பவர்கள்.

இலக்கை எதிர்கொள்ளும் முன்னால் வில்லை நெஞ்சுக்கு உயர்த்தும்போதே திசையை மாற்றும் சுதந்திரத்தை அவன் உணரவேண்டியது அவசியம். அதனால் இதுமாதிரி மனிதர்களுடன் வாழ்வது முக்கியம். நாணிலிருந்து கையை விடும்போது தனக்குள் சொல்லிக் கொள்ளவேண்டும் “நாணை இழுக்கும்போது நீண்ட பாதையைக் கடந்துவிட்டேன். தேவையான சவால்களை என்னால் முடிந்த வரை எடுத்து இந்த அம்பை விடுகிறேன்.

எல்லோரையும் போல் சிந்திப்பவர்கள் நல்ல தோழர்கள் அல்ல. வில்வித்தையில் ஆர்வத்தை நீ பகிர்ந்து கொள்ளும் தோழர்களைத் தேடும் போது உள்ளுணர்வை மட்டும் நம்பு. மற்றவார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதே. மனிதர்கள் தங்களுடைய குறைகளைக் கவனத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைபோடுகிறார்கள். புதிய முயற்சிகள் செய்பவர்கள், துணிந்து சவால்களை சந்திப்பவர்கள், அதனால் கீழே விழுந்தாலும் அடி பட்டாலும் மீண்டும் துணிந்து இறங்குபவர்கள், இவர்களுடன் சேர்ந்து கொள்.

ஏற்கனவே சொல்லப்பட்ட உண்மைகளை ஒத்துக்கொள்வோர், தங்களைப்போல் எண்ணாதவர்களை விமரிசிப்போர், ஓரடி எடுத்து வைக்கும் முன்னால் நமக்கு மரியாதை கிடைக்கும் என்று தெரிந்த பின்னரே அடுத்த அடி எடுத்து வைக்கும் மனிதர்கள், ஐயங்களைவிட அறுதியிட்ட உண்மைகளை விரும்புவோர், இவர்களிடமிருந்து தள்ளியிரு.,

திறந்த மனதுடையோர், பலங்குறைந்திருப்பதைப் பற்றி அஞ்சாதவர்களுடன் சேர்ந்துகொள். அடுத்தவர்கள் செய்வதைக் கவனித்தால், முன்னேறமுடியும் என்பது புரிந்தவர்கள். கவனிப்பது தீர்ப்புச் சொல்வதற்காக அல்ல உறுதியையும், ஈடுபாட்டையும் நேசிப்பதற்காக.

வில்வித்தை மீது விவசாயிக்கோ, சமையல்காரனுக்கோ ஈடுபாடு இருக்காது என்று நீ நினைக்கலாம். தாங்கள் எதைப் பார்க்கிறார்களோ அதை தங்கள் வேலையிலும் புகுத்திவிடுவார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். நீயும் அதையே செய். ரொட்டி செய்பவனிடமிருந்து கைகளை எப்படிப் பயன்படுத்துவது, மசாலாக்களை சரியாக எப்படிச் சேர்ப்பது என்று நீ அறிந்து கொள்வாய். பொறுமை, கடும் உழைப்பு, பருவங்களை மதிப்பது, புயல்களை திட்டாமலிருப்பது(ஏனெனில் அது நேரத்தை வீணாக்குவதுதான்) இவற்றை விவசாயியிட்டமிருந்து கற்றுக் கொள்ளலாம். உனது வில்லின் மரத்தைப் போல் வளைந்துகொடுக்து, பாதையில் வரும் குறிப்புகளை உணர்ந்து கொள்பவருடன் சேர்ந்துகொள். அவர்கள் தாண்ட முடியாத தடைகள், நல்ல வாய்ப்புக்கள் வரும்போது திசைமாறத் தயங்காதவர்கள்.

அவர்கள் தண்ணீர் போல. பாறையைச் சுற்றி ஓடும்; நதியின் பாதையில் சென்று சில நேரம் பெரிய ஏரியாக நிறையும்வரை காத்திருந்து பின் வழிந்தோடிப் பயணம் தொடரும்; ஏனெனில் இலக்கு கடல் என்று தண்ணீர் எப்போதும் மறப்பதில்லை. இப்போது அல்லது அப்புறம் அதை அடைந்தே ஆகவேண்டும்.

சரி இதுதான் முடிவு. இதற்குமேல் செல்லமாட்டேன் என்று சொல்பவருடன் சேராதே. குளிருக்குப் பிறகு வசந்தம் வருவதுபோல் நிச்சயம். எதுவும் முடிவதில்லை. உனது இலக்கை அடைந்த பின் மீண்டும் தொடங்கு. வந்த வழியில் நீ கற்றதையெல்லாம் பயன்படுத்து.

பாட்டுப்பாடி கதைசொல்லி, இன்பங்களை அனுபவித்து, கண்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுடன் சேர்ந்துவிடு. ஏனெனில் மகிழ்ச்சி அடுத்தவர்களைத் தொற்றிக் கொள்ளும். தன்னிரக்கத்தில், தனிமையில் கஷ்ட்த்தில் ஸ்தம்பித்து விடுவதிலிருந்து தடுக்கும்.

உற்சாகத்துடன் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து கொள். அவர்கள் உனக்கு உபயோகப் படுவது போலவே நீயும் அவர்களுக்கு உபயோகப்படுவாய். அவர்களின் கருவிகளைப் புரிந்துகொள். அவர்களின் திறனை அதிகரிப்பது பற்றி யோசி.

உன் வில்லையும், அம்பையும், இலக்கையும் பாதையையும் நீ சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. .

வில்

வில்லே உயிர். சக்தியின் ஊற்று. அம்பு ஒரு நாள் சென்றுவிடும். இலக்கு வெகு தூரத்தில் இருக்கிறது. வில் உன்னுடனே இருக்கும். அதை எப்படிப் பாதுகாத்து வைத்துக் கொள்வது என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவ்வப்போது ஓய்வு வேண்டும். எப்போதும் நாணேற்றிய வில் பலத்தை இழந்துவிடுகிறது. எனவே மீண்டும் உறுதிபெற அதற்கு ஓய்வு கொடு. பின் நீ நாணேற்றும் போது அது முழுபலத்துடன் இருக்கும். வில்லுக்கு மனசாட்சி கிடையாது. அது வில்வீரனின் ஆசையின், கைகளின் நீட்சி. அது கொல்ல அல்லது அமைதிக்கு உதவும். அதனால் நீ தெளிவான எண்ணங்களுடன் இரு. வில் நன்றாக வளைந்து கொடுத்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அதற்கு மேல் வளைத்தால் உடைந்துவிடும் அல்லது வைத்திருப்பவனை களைப்படையச் செய்யும். உன் கருவிகளுடன் இயைந்து இரு. அதனால் முடிந்த்தற்கு மேல் எதிர்பார்க்காதே.

வில், வீரனின் கைகளில் இருக்கிறது அல்லது ஓய்வெடுக்கிறது. ஆனால் கைகளில் உடம்பின் எல்லாத் தசைகளும், வீரனின் எண்ணங்களும் வில்விடும் முயற்சியும் ஒருமுனைப்படுகிறது. நாணேற்றும் போது கம்பீரமாக நிற்க, உடம்பின் எல்லாப் பாகங்களும் தம்முடைய வேலையை வேண்டிய அளவு மட்டுமே செய்ய விடு. சக்தியை வீணாக்காதே. அப்படிச் செய்தால் களைத்துவிடாமல் தொடர்ந்து அம்புகள் விடலாம். வில்லை அறிந்து கொள்வதற்கு அது உனது கைகளின் உறுப்பாகவும் எண்ணங்களின் நீட்சியாகவும் இருக்கவேண்டும்.

'

Friday, November 06, 2009

வில்லேருழவன் - 1
‘டெட்சுயா’

சிறுவன் அதிர்ச்சியில் அன்னியனைப் பார்த்தான்.

‘இந்த ஊரில் யாருமே டெட்சுயா வில்லேந்தி இருப்பதைப் பார்த்ததில்லையே. அவன் மர ஆசாரி என்றுதான் எல்லோருக்கும் தெரியும்.” அவன் பதிலளித்தான்.
‘அடியோடு விட்டிருக்கலாம், ஒருவேளை தைரியம் இழந்திருக்கலாம் ஆனால் அதனால் எனக்கொன்றுமில்லை. தன் கலையை அவன் கைவிட்டால் அவன் இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த வில்வீரன் என்று கருதமுடியாது. அவனுக்குச் சவால் விடவும், அவனுக்குத் தகுதியற்ற அவன் பெருமையை முடிவுக்குக் கொண்டுவரவும் நான் இத்தனை நாளாக பயணம் செய்து வந்திருக்கிறேன்.’
அவனுடன் பேசுவதில் பொருளில்லை என்று அந்தப் பையன் தெரிந்துகொண்டான். தன் தவறை உணரும்படி அவனை மரஆசாரியின் கடைக்கு கூட்டிச் செல்வது தான் நல்லது.

டெட்சுயா வீட்டுக்குப் பின்னாலிருந்த பட்டறையில் இருந்தான். யார் வந்திருக்கிறார் என்று பார்க்கத் திரும்பினான். வந்தவனுடைய கையிலிருந்த பெரிய மூட்டையைக் கண்ட்தும் அவன் புன்னகை உறைந்துவிட்ட்து. ‘நீ நினைப்பதுதான் இது’ புதிதாக வந்தவன் சொன்னான். பெரிய கதாநாயகனை அவமானப் படுத்தவோ, சண்டைக்கு இழுக்கவோ நான் இங்கே வரவில்லை. இத்தனை வருடப் பயிற்சிக்குப் பிறகு வில்வித்தையின் உச்சத்தை அடைந்துவிட்டேன் என்பதை நிரூபிக்கவே வந்தேன்.” டெட்சுயா கவனிக்காத்து போல் வேலையைத் தொடர்ந்தான். ஒரு மேஜைக்குக் கால் வைத்துக் கொண்டிருந்தான்.


ஒரு தலைமுறைக்கு உதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று உன்னைப் போல் மறைந்துவிடக்கூடாது. நான் உங்களுடைய உபதேசங்களைப் பின்பற்றினேன். வில்வித்த்தையை மதித்தேன் நான் அம்புவிடுவதை நீ பார்க்கும் அளவுக்கு எனக்குத் தகுதி உண்டு. நீங்கள் அதைச் செய்தால், இப்படியே திரும்பிவிடுவேன். வில்வித்தையில் மிகப் பெரிய குருவை எங்கே காணலாம் என்பதை யாருக்கும் சொல்ல மாட்டேன். புதியவன் தன் மூட்டையிலிருந்து நீண்ட பளபளக்கும் அம்பு ஒன்றை அதன் நடுப்பகுதிக்கும் சற்றுக் கீழே பிடித்து உருவினான்.

டெட்சுயாவைப் பணிந்து வணங்கினான். தோட்ட்த்துக்குள் சென்று ஒரு இட்த்தைப் பார்த்து மீண்டும் வணங்கினான். பிறகு, பின்புறம் புறா இறகு வைக்கப்பட்ட அம்பு ஒன்றை வெளியில் எடுத்தான். அம்பு விடுவதற்கேற்ற மாதிரி உறுதியுடன் அசையாமல் நின்றான். ஒருகையால் வில்லை முகத்துக்கு நேராகப் பிடித்து இன்னொரு கையால் அம்பை சரியான் இடத்தில் பொறுத்தினான். சிறுவன் உள்ளுர மகிழ்ச்சியுடன் வியப்புடன் பார்த்தான். டெட்சுயா வேலை செய்வதை நிறுத்திவிட்டு புதியவனை ஆர்வத்துடன் கவனித்தான்.

அம்பைப் பொருத்தி, வில்லை நெஞ்சுக்கு நேராக உயர்த்தினான். தலைக்குமேல உயர்த்தினான். மெல்ல கீழிறக்கும்போது நாணைப் பின்னிழுத்தான். அம்பு முகத்துக்கு நேராக வரும்போது, வில் முழுமையாக இழுக்கப்பட்டிருந்தது. அப்படியே நின்றுவிட்டது போலிருந்தது. அவனும், வில்லும் அசையாமல் இருந்தனர். சிறுவன் அம்பு குறிவைத்திருக்கும் இடத்தைப் பார்த்தான். அவனுக்கு அங்கு ஒன்றும் தெரியவில்லை.

திடீரென்று நாணில் இருந்த கை விரிந்தது. பின்னால் சென்றது இன்னொரு கையிலிருந்த வில் வளைந்து நின்றது. அம்பு மறைந்து தூரத்தில் மீண்டும் தெரிந்தது. ‘போ, எடுத்து வா என்றான் டெட்சுயா. சிறுவன் அம்பை எடுத்து வந்தான். அது நாற்பது மீட்டருக்கு அப்பால் ஒரு செர்ரிப் பழத்தைத் துளைத்திருந்தது.

டெட்சுயா புதியவனை குனிந்து வணங்கிவிட்டு பட்டறையின் ஒரு மூலைக்குச் சென்றான். நீண்ட தோல் பையில் இருந்த மெல்லிய அழகாகச் செதுக்கப்பட்ட மரத்துண்டை எடுத்தான். தோல் பையை பிரித்து அதிலிருந்த வில் ஒன்றை எடுத்தான். அது புதியவனிடமிருந்த்து மாதிரிதான் இருந்த்து. ஆனால் பலமுறை உபயோகிக்கப்பட்டது. என்னிடம் அம்பு கிடையாது. உன்னிடம் உள்ளதைத்தான் உபயோகிப்பேன். நீ கேட்டுக் கொண்ட்து மாதிரி செய்வேன். ஆனால் நீ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். நானிருக்கும் ஊரை யாருக்கும் எப்போதும் சொல்லக் கூடாது. யாராவது கேட்டால், நான் அவனைக் கண்டுபிடிக்க உலகத்தின் கோடிக்கே சென்றேன் ஆனால் பின்னால் தெரிந்த்து பாம்புகடித்து அவன் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டான்’ என்று சொல்லிவிடு’ புதியவன் தலையாட்டிவிட்டு தன்னுடைய அம்பு ஒன்றைக் கொடுத்தான்.

நீண்ட மூங்கில் வில்லின் ஒரு முனையை சுவரில் வைத்து அழுத்தி டெட்சுயா வில்லைக் கட்டினான். ஒன்’றும் சொல்லாமல் மலைகளைப் பார்த்துச் செல்ல ஆரம்பித்தான். புதியவனும் சிறுவனும் அவனுடன்சென்றனர். ஒருமணி நேரம் நடந்து இரண்டு மலைகளுக்கிடையில் பெரும் பள்ளம் இருந்த இடத்தை அடைந்தனர். பள்ளத்தில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்த்து. இடைவெளிப் பள்ளத்திக் கடக்க கயிற்றுப் பாலம். அது எந்த நேரத்திலும் அற்று விழுந்துவிடும் நிலையில் இருந்தது.

டெட்சுயா மௌனமாக கயிற்றுப் பாலத்தின் மையப் பகுதிக்குச் சென்றான். அது மிக பயங்கரமாக ஆடியது. மறுபுறத்திலிருந்த எதையோ பார்த்துக் குனிந்து வணங்கிவிட்டு, அம்பை நாணேற்றி, தூக்கிப்பிடித்து நெஞ்சுக்கு நேர் வைத்து விட்டான். இருபது மீட்டருக்கு அப்பால் ஒரு பீச் பழத்தை அம்பு துளைத்திருந்த்தை சிறுவனும் புதியவனும் பார்த்தனர்.
‘நீ செர்ரிப் பழத்தில் நான் பீச் பழத்தில் அம்பை விட்டோம்’ டெட்சுயா கரைக்குத் திரும்பிக்கொண்டே சொன்னான். .

‘செர்ரி சின்னது. நாற்பது மீட்டர் தொலைவிலிருந்து அதைத் துளைத்தாய். நான் இருபது மீட்டரிலிருந்து. அதனால் நான் இப்போது செய்த்தை நீயும் செய்யவேண்டும். இந்தப் பாலத்தின் நடுவில் நின்று நான் செய்த மாதிரிச் செய்’
புதியவன் பயந்துநடுங்கி லொடலொடக்குப் பாலத்தின் நடுவில் சென்றான். கீழெ பள்ளத்தைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றான். டெட்சுயா செய்தமாதிரியே அவனும் செய்தான். பீச் மரத்தில் அம்பைவிட்டான் ஆனால் அம்பு விலகிப் போய்விட்டது.

கரைக்குத் திரும்பியபோது பயத்தில் அவன் முகம் வெளுத்திருந்தது. ‘உன்னிடம் திறமையும் கண்ணியமும், சரியாக நிற்பதும் இருக்கிறது. வில்லின் நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கிறாய் ஆனால் உன் மனதை வெற்றி கொள்ளவில்லை. எல்லா சூழ்நிலைகளும் உனக்குச் சாதகமாக இருக்கும்போது நன்றாக அம்புவிடுகிறாய். ஆனால் ஆபத்தான சூழலில் இலக்கை உன் அம்பு எட்டவில்லை. வில்வீரன் போர்க்களத்தை தானாகத் தேர்ந்தெடுக்க முடியாது. மீண்டும் பயிற்சியைத் தொடங்கு.சாதகமில்லாத் சூழலில் போரிடப் பழகு. வில்லின் வழியில் செல். அது வாழ்க்கைப் பயணம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள் நல்ல குறிதவறாமல் எய்வதும் மனதில் அமைதியுடன் எய்வதும் வேறுவேறு.

புதியவன் மீண்டும் நன்றாகக் குனிந்து வணங்கிவிட்டு, வில்லையும் அம்பையும் தோளில் சுமந்த நீண்ட பைக்குள் வைத்து அவ்விடத்தை விட்டு நீங்கினான். திரும்பி வரும்போது சிறுவன் மகிழ்ச்சியில் குதித்தான். ‘டெட்சுயா நீங்க காட்டிட்டீங்க.. நீங்க தான் உண்மையிலேயே பெரிய வீரன்’
முதலில் நாம் மற்றவர்களிடமிருந்து கேட்கவும், மரியாதை செய்யவும் கற்றுக் கொள்ளாமல் அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. புதிதாக வந்தவன் ரொம்ப நல்லவன். வெளியில் அப்படித் தெரிந்தாலும், அவன் என்னை அவமானப் படுத்தவில்லை. என்னைவிடப் திறமைசாலிஎன்று காட்டவும் முயலவில்லை. பார்ப்பதற்கு ஏதோ அவன் எனக்குச் சவால் விடுவது போல் இருந்தாலும்
அவன் தன் திறமையைப் பெருமைக்குக் காட்டவிரும்பினான். நாம் ஒத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினான். எதிர்பாராத சூழலில் மாட்டிக் கொள்வது வில்வீர்ர்களுக்கு நடப்பது தான். அவனும் அதைத்தான் இன்று என்னை செய்து காட்டவைத்தான்.

-------will continue------


english "The Way of the Bow" - A novel by Paulo Coelho
Tamil V.Rajagopal

Wednesday, November 04, 2009

Education in Mother tongue

தமிழில் கல்வி

உயர்ந்த நோக்கங்களைப் பற்றி காலங்காலமாகப் பேசி விட்டு, அதை நோக்கிய ஒரடி வைக்கவும் தயங்கும் மனிதர்களாகத்தான் நாம் இருக்கிறோம். சமூகம் பற்றிய நமது நம்பிக்கைகளுக்கும் அன்றாட வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கும் எந்தத் தொடர்பும், பெரும்பாலும், இருப்பதில்லை. வாழ்வின் முரண்பாடுகளில் இது ஒன்று என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டாலும், சமூகத்தை முன் செலுத்தும் வகையில் அரசியல் கலாச்சார வெளிகளில் ஆளுமைகள் இன்னும் நிறையத் தேவைப்படுகிறார்கள்.
உதாரணமாக, சட்டத்துக்கு முன்னால் மனிதர்களின் சமத்துவம் பற்றி மேடைகளில் உரக்கப் பேசுவதும் கீழிரங்கிப் போகும் போதே தன்னை உயர்த்திக்காட்டும் நடவடிக்கைகளை உறுதிப் படுத்திக் கொள்வதும் நமது தலைவர்கள்( கலாச்சார, இலக்கியத் தலைமகன்கள் உட்பட) வழக்கம்.

இந்த முறையில்தான் ‘தமிழில் கல்வி’ என்ற கருத்தும் கோஷமாக வைக்கப்படுகின்றது. மிகக் கசப்பான உண்மை ஒன்றை இந்த இட்த்தில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. தமிழில் உயர்கல்வி பெறும் அளவிற்கு அறிவியல் சாதனங்கள் (குறிப்பாக பாடப் புத்தகங்கள்) இல்லை என்பதே உண்மை. மைக்கேல் ஃபாரடேயின் கொள்கைகளை விளக்கும் காலத்துடன் தமிழ் அறிவியல் புத்தகங்களின் பயன்பாடு முடிந்துவிடுகிறது. இன்றைய அறிவியலின் மொழி பெரும்பாலும் ஆங்கிலமாக இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு மொழிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் எந்த மொழியும் இன்றைய விஞ்ஞானத்தின் கருத்துக்களைத் தடையின்றி, படிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிப்பதற்கு ஏற்றதல்ல. இந்த நிலையில் தமிழில் உயர்கல்வி என்பது இயலாதது. அனேகமாக இதை அனைவரும் ஒப்புக்கொள்வர். முதலில் விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும். மொழி அதற்கேற்ப தானாக தன்னைக் கண்டுபிடித்துக் கொள்ளும். புதிய தொழில்நுட்பத்துடன் புதிய சொற்கள் புழக்கத்துக்கு வரும். உதாரணமாக டெலிவிஷனை தமிழன் கண்டுபிடித்திருந்தால், உலகமெங்குக் தமிழ்ச்சொல்லில்தான் அது அழைக்கப்பட்டிருக்கும். மொழியைவிட அறிவை மதிக்கவும் நாம் சொல்லித்தரவேண்டும். (தமிழில் நன்றாகப் பேசத்தெரிந்தால் அவர் அறிஞராகிவிடுவாரா?- பேச்சாளராகக்கூடும்). அறிவை மதிக்காமல் மொழியை மதிக்கும் நாட்டில் நன்றாகப் பொய்சொல்பவர்கள் கிடைப்பார்கள். உண்மைகளைக் கண்டு சொல்லும் விஞ்ஞானிகளோ அறிவை வளர்ப்பதன் மூலம், மொழியை வளர்க்கும் அறிவாளிகளோ இருப்பது குறைவு.

இதிலிருந்து அடுத்த படியாக உயர்கல்வி பெற்றால் தான் உய்வுண்டு என்று ஆகிவிட்ட சூழலில், உயர்கல்வி பெறும் அதே மொழியில் சிந்திக்கப் பயில்வது தவிர்க்க இயலாதது. அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ மற்ற நாடுகளிலோ சென்று ஆராய்ச்சி செய்யவிரும்பும் ஒருவன், அடிப்படைக்கல்வியை ஆங்கிலத்தில் பெறுவதே நல்லது. அது அவன் அந்த மொழியில் சிந்திப்பதை எளிய செயலாக்கிவிடும். எனவே ஆரம்பக் கல்வியும் (தமிழ் என்ற பாடத்தைத் தவிர) ஆங்கிலத்தில் இருப்பது வசதியானதே.

வெளிநாடுகளில் சென்று பயிலாதவரும் கூட, இந்தியாவுக்குள்ளேயே வெளிமாநிலங்களுக்குச் சென்றால், ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் மொழியைக் கற்றுக் கொள்ளும் வரை, அல்லது அதற்குத் தேவை ஏற்படும் வரை, தன் தொழிலை, வேலையைப் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழிற்கல்வி என்று சொல்லும் போது யாரைக் குறிபார்த்துச் சொல்லப் படுகிறது? நகரங்களில், பெரிய பணக்காரர்களோ, அல்லது மேல்மத்திய வர்க்கத்து பிள்ளைகளோ பயிலும் பள்ளிகளை வைத்தோ சொல்லப்படுவதில்லை. ஏற்கனவே, அதிகப் படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுடைய பிள்ளைகளாய், கிராமங்களில் அறிவுச்சாதனங்களின்/(ஊடகங்களின்) பயனைப் பெறமுடியாத அளவில் பிற்படுத்தப் பட்ட மாணவர்களை நோக்கித்தான் இந்த தமிழிற்கல்வி என்ற வாசகம் (கோஷம்) வீசப்படுகின்றது. இவர்களின் கனவுகள் கூட, நகரத்தில் வசிக்கும், முழுஅறிவுச் சாதனங்களைப் பயன்படுத்தும் பணக்கார, மத்திய வர்க்கத்து மக்களின் கனவுகளின் அடிப்படையில்தான் எழுகின்றன. சென்னையில் இருப்பவன் அமெரிக்கா செல்ல நினைத்தால், அதையே கிராமத்திலிருப்பவனும் நினைக்கிறான். எனவே, அந்த நோக்கிலும் ஆங்கிலக்கல்வி கிராமத்துப் பள்ளியில் முக்கியமானதாகி விடுகின்றது.

தமிழில் கல்வி கற்றால் என்ன பயன் என்று கேட்டால் மீண்டும் பதில் கசப்பானதாகவே இருக்கிறது. தமிழில் கல்வி கற்றவன், சிறுதொழில் செய்யவும், சிறுவேலைகள் செய்யவும் தான் ஏற்றவன் என்பது சமூகத்தில் நாம் காணும் காட்சி, நிதரிசனம். இன்றைய நிலையில் இதுமாதிரி தொழிலில் உள்ளவர்கள் கூட ஆங்கிலம் பயின்றால் நல்லது. எனது சொந்தக்காரர் ஒருவர், தொழிற்சாலைகளுக்கான ‘ஏர் கண்டிஷனிங்’ மெஷின்கள் ரிப்பேர் பார்த்துவந்தார். அவர் ஃபிட்டர் வேலைக்குப் படித்திருந்தாலும், இதில் ஈடுபட்டிருந்தார். அவரும் சொன்னார் “இதே வேலையில் ஆங்கிலத்தில் பேசும் தகுதி இருப்பதாலேயே இவருடைய போட்டியாளருக்கு அதிகம் வேலைகள் வருகின்றன. எனது வருமானத்தை அது பாதிக்கிறது” எனவே தாய்மொழிக்கல்வி என்பது, எல்லோரும் சமம் என்பதைப் போல நல்ல கோஷமாக இருக்குமே தவிர, செயல் படுத்த முடியாததாகவே இருக்கும். எல்லோரும் சமம் என்பதிலாவது ஒரு உயரிய நோக்கம் இருக்கிறது. தமிழிற்கல்வி என்பதில் தமிழிற்கல்வி என்பதற்காகவே தவிர வேறு உயரிய நோக்கம் இல்லை. (just for the sake of it) அது கிராமத்தில் உள்ளவரை, ஏற்கனவே உயர்கல்வி கிடைக்காமல் தவிக்கும் ஒரு மக்கள் திரளை, ஓதுக்கிவைக்கப் பயன்படும்.

நமது அரசியல் வாதிகளும், கல்வியாளர்களும் சும்மா சொல்லுகிறார்களே தவிர, முழுமனதோடு எதையும் சொல்வதில்லை. அதைச் செய்யவும் விரும்புவதில்லை அல்லது அவர்களால் முடிவதில்லை. திட்டங்களைச் செயல்படுத்தும் நமது (efficiency) திறமை/செயல்முறை மிகக் கேவலமானது. எல்லாத்திட்டங்களையும் போலவே, அரைகுறையாக முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம். அறுபதாண்டுகளாகியும் எல்லாக்குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பமுடியாத நாட்டின் அரசியல்வாதிகள், மக்கள் நாம் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

ஆங்கிலத்தில் கல்விபயின்றால் விரைவில் பொருளாதார ரீதியில் உயரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளவரை, உயரமுடியும் என்ற அரசியல் கலாச்சார நிலை உள்ளவரை எல்லோருக்கும் ஆங்கிலக்கல்வி தருவதே நல்ல நடைமுறையாக இருக்க முடியும்.
பஞ்சத்தில் அடிபட்டு, கூலிகளாய் பலதேசமெங்கும் சென்ற பழைய தலைமுறையினர், வயிற்றுப் பாட்டுக்குத் தானே வெளிநாடு சென்றனர். இப்போதும், பெரிய பெரிய நிறுவங்களில் நாடு விட்டு நாடு சென்று கூலிக்காக (அது டாலரில் வருகுதென்றால் கூலியாகாதா?) அறிவை விற்பவர்கள் தமிழைப் பயில்வதில் ஆர்வம் காட்டியிருந்தால் போயிருப்பார்களா? அவர்கள் எல்லாம் தமிழை மறந்துதானே விட்டார்கள். அது தவறல்ல. பொருளாதார முன்னேற்றதின் முன் மொழி அடிவாங்கிவிடுகிறது. சரித்திரமெங்கும் நிகழ்ந்த்து தான். அவர்கள் பொருளாதார நிலை உயர்ந்த்தும் தமிழைப்பற்றிக் கவலைப் படுகிறார்கள். இப்போது வறிய நிலையிலிருந்து ஆங்கிலக்கல்வி பயில முடியாதவன், ஆங்கிலக்கல்வியா பொருளாதார முன்னேற்றம் அடையவிரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? இவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானதில்லையா?

தமிழிற்கல்வி என்று பேசும் அனைவரும் (முக்கியமாக அரசியல் கலாச்சாரத் தலைமைகள்) முதலில், ஏற்கனவே பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இல்லாதவர்களை இன்னும் ஓட்டாண்டிகளாக்கும் இந்தக் கோஷத்தை உடனடியாக கை விடவேண்டும். கல்விச் சாதனங்களை (புத்தகங்கள்) உயர்கல்வித் தரத்தில் கொண்டுவந்த பிறகு இந்தக் கோஷத்தைக் கையில் எடுக்கலாம். சமச்சீர் கல்வி பற்றிப் பேசும் இந்தக் காலத்தில், பயிற்றுமொழியும் சமமானால், இதுபற்றிப் பேசலாம். அதுவரை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்கள் படிக்கட்டும். பயிற்றுவிப்பவர்கள் பயிற்றுவிக்கட்டும்.

Tuesday, November 03, 2009

தவம்

விஸ்வாமித்திரன் ரிஷியாகி விட்டான். இந்த விஷயத்தை சேடிப் பெண் ஒருத்தி சொல்லிவிட்டுச் சென்றாள். அவனுக்கும் குஷியாக இருந்தது. அவனுடைய முன்னாள் நண்பன் ரிஷியானது மிக நல்ல செய்தி. அவனுடைய ஒற்றர்கள் வந்து சொல்ல வில்லை. அரசவைக்குச் சென்றவுடன் சொல்லுவார்கள். சேடிப் பெண் சொன்னது நல்லதாகப் போயிற்று. அரசவையில் அமரும் போது சொல்லிவிடலாம். அமைச்சர்களும் அதிர்ச்சி அடையக் கூடும். திரிசங்கு சாதாரண மன்னன் அல்ல. அவனுடைய ஒற்றர் வலை மிகவும் சக்தி வாய்ந்தது. ஒருபுறம் மகிழ்ந்தாலும் கொஞ்சம் தயக்கமும் இருந்த்து. விஸ்வாமித்திரன் கைமீறிப் போய் விட்டான். இனி அவனைப் பிடிக்க முடியாது. சின்ன வயதில் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்தவன். பல வருட காலமாக காணாமல் போயிருந்தான். தவமிருக்கக் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். திடீரென்று ரிஷி – இப்போது தகவல் வருகிறது. பிள்ளைப் பருவத்திலேயே அப்பா பெயர் கேட்டால் தெரியாது. திரிசங்குவின் அம்மாதான் சொன்னாள். “க்ஷத்திரிய தகப்பனுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவன் என்று ஜோஸியக்காரன் சொன்னானாம்.” யாருக்கும் முழுவிபரம் தெரியவில்லை. இப்போது கேட்க முடியாது. ரிஷியாகி விட்டான். பெரிய மனிதன் ஆனபிறகு தாய் தகப்பன் பற்றிச் சொல்ல முடியாது. இது தானே உலக வழக்கம். ரிஷிமூலம் என்று இதைத்தானே சொல்லி வைத்திருக்கிறார்கள்.

திரிசங்குக்குத் தோன்றியது. இப்போது ராஜரிஷியாக இருக்கும் அம்பரன் சரியில்லை. தலைக்கனம் அதிகமாகிவிட்ட்து. அவனுக்குப் பதிலாக விஸ்வாமித்திரனை நியமித்து விடலாம். அவனுடைய சீடர்களிடமிருந்து எதிப்புக் கிளம்பும் அதை சமாளிக்க வேண்டும். விஸ்வாமித்திரனையே கேட்டு விடலாம். ஆனால் அவனை, தப்பு தப்பு அவரை கேட்டால் தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டுவிடுவான். முதலில் அம்பரனை ஒழித்துவிட்டால், அவனும் தயங்கமாட்டான். வர வர அம்பரனின் போக்குச் சரியில்லை. அவனும் பிராமணர்களின் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விட்டான். அவனைப் பிரம்மரிஷி ஆக்குவதாக பேச்சு அடிபடுகிறது. அந்தப் பேச்சும் திரிசங்கு காதில் விழுந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அம்பரன் பிரம்மரிஷியாகிவிட்டால்? இப்போதே அவன் சரியில்லை. அப்புறம் அவ்வளவுதான். திரிசங்குவையே ஆட்டிவைப்பான்.
அன்றிலிருந்தே திட்டம் தீட்ட ஆரம்பித்தான். அம்பரனையும் அவனுடைய சீடர்களையும் எப்படி ஒழிப்பது? யாருக்கும் தெரியக்கூடாது. தன் பேரும் இதில் அடிபடக்கூடாது. ஏதோ ஒரு விபத்து மாதிரித் தெரியவேண்டும். யாராவது கொஞ்சம் சந்தேகப் பட்டாலும் அவர்களை ஒழித்துவிட வேண்டும்.

எட்டுமாதம் கழித்து ஒரு அம்மாவாசை நாளில், கங்கையில் சீடர்களுடன் அம்பரன் சென்ற படகு கவிழ்ந்துவிட்டது. ஒருவரும் தப்பவில்லை. கரையில் அந்த நேரம் யாருமில்லை. அம்மாவாசையன்று யார் நதியில் பயணம் போவார்? இதில் ஏதோ சூது என்று நிறையப் பேருக்குச் சந்தேகம். ஆனால் பேசமுடியவில்லை. பெரிய இடத்து விஷயம். பேசி வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது. அதற்கு முந்தினநாள், அம்பரன் ஏதோ யாகத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தானாம். அவனும் அவன் சீடர்களும் நதிக்கு எப்பொழுது போனார்கள் என்பதே தெரியவில்லை. திரிசங்கு யாரையும் ராஜரிஷியாக நியமிக்கவில்லை. ஏதோ வருத்த்த்தில் கழித்தான் என்று பேசிக்கொண்டார்கள் ஜனங்கள். அம்பரனுக்கு முதல் திதி பண்ணிவிட்டுத் திரும்பிய அவன் மகனும் இரண்டாவது நாள் இறந்துவிட்டான். அப்பாவை இழந்த சோகம் என்று ஊரில் பேசிக் கொண்டதாக கேள்விப்பட்டான் மன்னன். அரசவையில் அப்படித்தான் சொன்னான். அவன் யூகிப்பதற்கு எதுவுமில்லை.

அடுத்த முறை விஸ்வாமித்திரன் அம்பரன் அவைக்கு வர இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அதுவரை ராஜரிஷி பதவி காலியாகவே இருந்தது. விஸ்வாமித்திரனுக்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்ட்து. அவன் ராஜரிஷியாகிவிடலாம் என்று எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. குறிப்பாக, அம்பரன் மனைவிக்கு. ஏற்கனவே, திரிசங்கு கூப்பிட்டு ரகஸியமாகச் சொல்லிவிட்டான். வெளியில் தெரியாமலிருந்தால் இரண்டு கிராமங்களை தானங் கொடுப்பதாகச் சொன்னான். செத்துப் போன கணவனைவிட இரண்டு கிராமங்களின் வரி முக்கியமானதென்று அவளுக்குத்தெரியும். இன்னும் பலகாலத்துக்கு நன்றாக வாழலாம். அரசனின் பேச்சைக் கேட்காமலிருக்க முடியுமா? உயிர்.

ராஜரிஷி ஆனதும் விஸ்வாமித்திரனுக்குத் தனிக்களையே வந்து விட்ட்து. திரிசங்குவுக்கும் ரொம்ப வசதியாகிவிட்டது. இதுவரை ராஜரிஷியாக இருந்தவர்கள் எல்லாம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்கள். நல்லநாள் கெட்டநாள் சகுனம், வரி படைஎடுப்பு, தண்டனை, பதவி, தானம் சொல்லப் போனால் மனைவியுடன் ஒன்றாக இருப்பதற்குக் கூட ராஜரிஷியின் அனுமதி பெற்று, அவன் நேரம் குறித்துத் தந்த பின்னால்தான் முடியும். ஒரே கொட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் திரிசங்கு கேட்டான் “ சொர்க்கம் என்றால் என்ன?”

விஸ்வாமித்திரன் சொன்னான் “ நானும் பார்த்த்தில்லை, ஆனால் அங்கே எல்லாவசதிகளும் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன்”´

அப்படியானால் நாம் சென்று பார்க்கலாமா?

அது முடியாது. செத்தபிறகு தான் அங்கே ஒருவனை அனுப்புவதா வேண்டாமா என்று
எமனுடைய காரியதரிசி சித்திரகுப்தன் தீர்மானிப்பான். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்

நாம் ஏன் பார்க்க முடியாது?

அது தான் முறை.

அதைமீறினால்?

மீற முடியாது
நான் அரசன் மீற முடியாதா?

முடியாது.

நீர்?

நானும் மீற முடியாது

அப்படியானால் ரிஷியான நீரே சொர்க்கம் போக முடியாதா?

விஸ்வாமித்திரன் யோசித்தான். “என்ன செய்வது? நானே அங்கே போக முடியாதா? ஒன்றும் தெரியாத அரசன் கேட்டுவிட்டான். அன்றிலிருந்து அவன் தூங்கவில்லை. இரவும் பகலும் அதைப் பற்றியே சிந்தித்தான். விஸ்வாமித்திரன் செய்யமுடியாத காரியம் உண்டா? என் தவ வலிமை என்ன என்பதைக் காட்டுகிறேன். சூளுரைத்துக் கொண்டான்.

அடுத்தநாள் காலையில் திரிசங்குவைச் சென்று பார்த்தான். தன் மனக் கிடக்கையைச்
சொன்னான். திரிசங்குக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ விளையாட்டுப் போக்கில் சொன்னது இப்படி ஆகி விட்டதே என்று வருந்தினான். ஆனால் விஸ்வாமித்திரன் கிளம்பிவிட்டான்.
இருபதாண்டுகள் தவமிருந்தான். ஊண், உறக்கம் இன்றி, வேறு எந்த நினைவுமின்றித் தவம். சிவனுக்கே பொறுக்கவில்லை. தேவரும் அவுணரும் பயந்தனர். விஸ்வாமித்திரனைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். பிடிவாதம் பிடித்தவன். பிரதிவாதி பயங்கரம். எதுசொன்னாலும், ஏறுக்கு மாறாகத்தான் செய்வான். என்ன செய்வது என்று எல்லோரும் கலங்கினர். இந்திரன் தான் யோசனை சொன்னான். இவனையும் தேவர் குலத்தில் சேர்த்துவிடுவோம் அதுதான் சரியான வழி. பலசாலி, புத்திசாலி இவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அது ஆபத்து. அவன் நம்மை எதிர்ப்பான். நமது கட்சியில் சேர்த்துவிடுவோம். அதை அனைவரும் ஒத்துக் கொண்டார்கள். எல்லாமறிந்த சிவபெருமான் சிரித்தான்.

தேவர்கள் சார்பில் இந்திரன் வசிஷ்டனை அனுப்பினான். வசிஷ்டனும் பல வாரங்கள் விஸ்வாமித்திரன் தவக்குடிலின் முன் காத்திருந்தான். அவன் விழிப்பதாக இல்லை. வசிஷ்டனுக்குத் தானே விஸ்வாமித்திரன் தவத்தைக் கலைக்க மனமில்லை. என்னதான் அவன் க்ஷத்திரியனாக இருந்தாலும், தவசி. தன்னையொத்த துறவி மீது அவனுக்கு ஒரு பரிவு இருந்தது. அதுவும் இத்தனை கடுமையான தவக்கோலம் யாரும் பூமியில் பூண்டதில்லை. ஒரு பயமும் இருந்தது. தவத்தில் தன்னை மிஞ்சியவன் சக்தியிலும் தன்னை மிஞ்சிவிடுவானோ என்ற பயம். பலமிகுந்த அனைவருக்கும் எழும் பயம். அவன் தவத்தைக் கலைக்கும் போது கோபத்தில் ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால்?அதிலிருந்து விடுபட அவன் காலிலேயே விழவேண்டும். பிரம்மரிஷிக்கு மனமில்லை. தான் பெற்றிருந்த வலிமை, துறவிகளின் தலைவன் என்ற பெருமை, எல்லாவற்றையும் இழக்க மனமில்லை. இந்திரனிடமே மீண்டும் சென்றான்.

இந்திரனுக்கும் ஒரு தயக்கம் இருந்தது. வசிஷ்டரால் முடியவில்லை என்றால் யாரால் முடியும். வசிஷ்டன் தவவலிமை இழந்தால் இந்திரனுக்கும் தேவர் குலத்துக்கும் இழப்புத்தான். இது மாதிரி தவ சிரேஷ்டன் இன்னொருவன் கிடைப்பானா? இப்போதே விஸ்வாமித்திரனை நினைத்தால் பயமாக இருக்கிறது. விஸ்வாமித்திரன் தவமும் கலையவேண்டும், நமது ராஜாங்கமும் நடைபெறவேண்டும். யோசித்து முடிவெடுத்தான்.

மேனகை. இந்திரனின் மிகநெருங்கிய காதலி. தேவர்களின் காமக்கிழத்தி. என்னதான் இந்திரனின் காமக் களியாட்டதின் தலைவியாக இருந்தாலும், அவனுக்கு அடிமைதானே. அவள் பெண். அவன் சொன்னதைக் கேட்டே ஆகவேண்டும். தேவ சபையின் நலன்
காக்கப்படவேண்டும்.

கலைந்தது தவம். மேனகை பெற்றாள் சாபம். கோபம் தணிந்த நேரம், வசிஷ்டன் அவனைப் பார்த்து வணக்கம் சொன்னான். விஸ்வாமித்திரனுக்கு ஆச்சரியம். வசிஷ்டரா? ஆம் வசிஷ்டரேதான். கோபம் தணிந்து புன்னகை பூத்தான்.

“ நமஸ்காரம் யாரைப் பார்க்க வந்தீர்கள் ஐயா?

உங்களைத்தான்

எங்களைத்தானா? நான் மிகவும் சிறியவன். நீங்கள் பிரம்மரிஷி. நீங்கள் என்னை?

அது நேற்று வரை. இன்று உன் தவ வலிமை என் பெருமையை மிஞ்சிவிட்ட்து. இன்றுமுதல்

நீயும் பிரம்மரிஷி

என்ன பிரம்மரிஷியா?

“பிரம்மனுக்கு ரிஷியா? பிராமணனுக்கு ரிஷியா?” ஆச்சரியத்துடன் கேட்டான் விஸ்வாமித்திரன்.

அவனுக்குப் புரிந்தது. என் தவ வலிமை மிகுந்த்தும் என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்கள். ஒத்துக் கொள்ளலாமா? திரிசங்குவும் ஷத்திரிய குலமும் என்னாவது? ஆனால் மேல்நிலைக்குச் செல்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. நான் மட்டும் விதி விலக்கல்லவே? சரி என்று ஒத்துக் கொண்டான். வசிஷ்டன் அவனை இந்திர சபைக்கு அழைத்துச் சென்றான். அங்கே பலநாட்கள் கொண்டாட்டங்கள் நடந்தன. விஸ்வாமித்திரன் பூலோகத்தை மறந்தே போனான்.

இந்திரன் ஒரு நாள் நினைவூட்டினான். “விஸ்வாமித்திர்ரே, நீங்கள் சாபமிட்ட மேனகை
இன்னும் பூலோகத்தில் வாடிக்கொண்டிருக்கிறாள். அவளை உங்கள் பழைய சிஷ்யன் திரிசங்குவிடம் சேடியாகப் பணிபுரிய அனுப்பி இருக்கிறேன். அவனுக்கும் தெரியாது. இப்போது நீங்கள் தயை கூர்ந்து, அவளுக்குச் சாப விமோசனம் அளிக்கவேண்டும்”

இந்திரனின் சூது விஸ்வாமித்திரனுக்கு இப்போதுதான் புரிந்தது. மேனகையைவிட்டுத் தன் தவத்தைக் கலைத்தது, பின்னர் தன்னை தேவலோகத்தில் தனது அவையில் வைத்துக் கட்டுப் படுத்தியது, எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான். திரிசங்குவை நினைத்துப் பார்த்தான். தன்னை முதல் முதலாக அங்கீகரித்து, ராஜரிஷியாக்கியவன். அவனில்லாவிட்டால் தவம் செய்யப் போயிருக்கமாட்டேன். உடனே கிளம்பிவிட்டான்.

திரிசங்கு தூங்கிக் கொண்டிருந்தான். பக்கதில் மேனகை, லோகு என்ற பெயருடன் பணிவிடை செய்துவந்தாள். அவளுக்கும் தான் யாரென்று தெரியாது. எப்படி வந்தோம் என்பதும் நினைவில்லை. விஸ்வாமித்திரன் போனதும் திரிசங்கு விழுந்தடித்து ஓடிவந்தான்.

"தவசிரேஷ்டரே நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து காத்திருந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது நான் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தவம் முடிந்து இங்கே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். என் சேவகர்கள் தாங்கள் தவமிருந்த இடத்தில் உங்கள் வரவை நோக்கி இன்னும் நின்று கொண்டிருப்பார்கள்”
காலில் விழுந்தான். வயதான கோலத்தில் அவனைப்பார்த்த விஸ்வாமித்திரனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. முனிவன் தேவலோகத்தில் இருக்கும் வரை பூலோகத்தின் துயரங்கள் அவனை எட்டவில்லை. பூலோகம் வந்ததும் இப்படி நிகழ்ந்த்து ஆச்சரியமாக இருந்தது.

“கவலைப் படாதே. உன்னை நான் மறந்தது உண்மைதான். தேவகுமாரன் கொஞ்சம் என்னை தாமதிக்க வைத்துவிட்டான். உனக்காகத்தான் தவம் செய்யச் சென்றேன். சொர்க்கத்துக்கு உன்னை அனுப்பவே நான் தவமிருந்தேன். இத்தனைக் காலம் நீ கஷ்டப்பட்ட்தற்கு விடிவு வந்துவிட்ட்து. இப்போது என் தவ்வலிமையால் உன்னை சொர்க்கத்துக்கு அனுப்புகிறேன்.”

‘ஸ்வாமி, எனக்காக நீங்கள் இத்தனை கஷ்டப்பட்டபோது, நான் கொஞ்சம் கஷ்டப்படலாகாதா? நீங்கள் என்னுடனே இந்த ராஜியத்தில் இருக்க வேண்டும்.”
நீ ரொம்ப நாள் காத்திருந்துவிட்டாய். இனியும் உன்னை ஏமாற்றமாட்டேன். இதோ நீ, இந்த லோகு என்று இங்கே வந்த மேனகையுடன் தேவலோகம் செல்.” வானை நோக்கி இருவரையும் தள்ளினார் விஸ்வாமித்திரர்.

கொஞ்ச நேரத்தில் திரிசங்கு மீண்டும் அவர் காலடியில் பொத்தென்று விழுந்தான். விழுந்ததில் நல்ல அடிபட்டுவிட்டது. விஸ்வாமித்திரருக்கும் காலில் லேசான அடி. மேனகையைக் காணவில்லை. அவளை தேவ சபையில் சொர்க்கத்தில் உள்ளே விட்டு, திரிசங்குவை கீழே தள்ளிவிட்டார்கள் தேவலோகத்தில் இருந்த பிரம்மசபையினர். கோபத்துடன் எழுந்தார் விஸ்வாமித்திரர்.

திரிசங்கு சொன்னான் ”சொர்க்கத்தை வாசலில் இருந்து பார்த்தேன் அதுவே போதும்” விஸ்வாமித்திரன் யோசிக்க ஆரம்பித்தான். இப்படி அவன் கனவு நிறைவேறாது.

* * * * * * * * **

விஸ்வாமித்திரன் மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தான். பலயுகங்கள் கழிந்தன.

நந்தன் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலுக்கு முன்னே வந்து நின்றான். வேலை செய்து செய்து உடம்பு மெலிந்து, ரொம்பவும் சீக்காளியாயிருந்தான். பிறந்ததிலிருந்து ஆண்டைக்கு அடிமையாக இருந்தே வாழ்நாள் கழிந்துவிட்டது. எத்தனை முறை முயன்றாலும் எந்த ஊரின் கோயிலுக்குள்ளும் அவன் நுழையமுடியவில்லை. நாயன்மார்களுடன் கலந்துவிடலாமென்றால், அவர்கள் இறைவனைப் பாடி ஊர் ஊராகச் செல்லும் போது எல்லோரும் முன்னே செல்ல அவன் நாற்பதடி பின்னே செல்லவேண்டியிருந்தது. ஆண்டை வயல்காட்டில் வேலையில்லாத காலங்களில் தான் பஜனைக் கூட்டத்தில் சேர அனுமதித்தார். அவன் இல்லாத வேளையில் அவன் மனைவியும் எட்டு வயது, பத்து வயதுப் பிள்ளைகளும் நந்தன் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது.

“இந்த நாறப் பொழப்புக்கு நீ சிவபெருமானைப் பார்க்காமலே இருக்கலாம். சிவபெருமான் உன் வேலையைக் குறைக்கலாம் எங்க வேலையை பெருக்கிட்டாரு. சாமி கும்பிட்டதெல்லாம் போதும், ஆண்டை குடுத்த வேலையை ஒழுங்காச் செய்யி” அவன் மனைவி கறுப்பாயி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் வேலை செய்து களைத்துவிட்டான். இனிமேல் முடியாது. வேலையிலிருந்து தப்பிக்க ஒரே வழி சைவ பக்திக் கூட்டதில சேர்றதுதான். நாற்பதடி பின்னாடி நடந்தாலும், வேளை தவறாமல், ஊர்தவறாமல் சோறு கிடைத்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். செப்பரடிகள் கூட்டத்தில் சேர்ந்து வந்ததுமுதல் பிரச்சனையில்லை. இறைவன் பேரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் போதும். செப்பரடிகள் சொல்லும் பாடல் வரிகளைத் திரும்பச் சொல்ல வேண்டும். இதைவிட எளிதான வேலை உண்டா? இரவும் பகலும் வயலில் ஓய்வு இல்லாமல் உழைத்த உடம்பு. கோயிலுக்குள்ள விடவில்லை என்றால் என்ன? ஆண்டைகிட்ட படறபாட்டுக்கு இங்க ஒண்ணுமே இல்ல. கயிலாயம் செல்லவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அரற்ற ஆரம்பித்தான்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி இறைவனின் அடிமையாவதுதான். இறைவனை வழிபடும் கூட்டங்களில் பித்தனைப் போல் அலைந்தான். செப்பரடிகளிடம் வந்து சேர்ந்ததிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது.

இன்னைக்குத்தான் சிதம்பரம் வந்து சேர்ந்தார் செப்பரடிகள். அவருடன் அவனையும் சேர்த்து இருபத்தி எட்டுப் பேர். எல்லோரும் கோயிலுக்குள் போய்விட்டார்கள். அவன் மட்டும் வெளியில் காத்திருந்தான். உண்டைக்கட்டிச் சோறு கிடைத்துவிடும். நேற்றுக் காலையில் சாப்பிட்டது. சில நேரங்களில் இப்படி ஆகிவிடும். எல்லோரும் தர்மவான்களாக இருப்பதில்லை. சிவனடியார்களாக இருந்தால் கூட. அவனுக்கு வேறு தெரியவில்லை. வேலைபார்த்துக் களைத்த உடம்பு. சரியான நேரத்தில் ஆகாரம் கேட்கும். கூட்டதிலிருந்து விலகி ஒளிந்து, புத்தமடத்தில் கெஞ்சிக் கூத்தாடிக் கிடைத்தது. புத்தமடம் கொஞ்சம் ரகஸியமாக நடப்பதால் யாருக்கும் தெரியாது. அந்தந்த ஊரில் சிலருக்கு மட்டும் தெரியும். புத்தமடம் இருக்குதென்று தெரிந்தால் அடி கொளுத்திவிடுவார்கள். அவனுக்குத் தெரியும். பசித்தவனுக்குத் தெரியாதா சோறு எங்கே கிடைக்குமென்று?

இருப்பதிலேயே வயசான புத்த துறவி கேட்டார் “எங்கள் மடத்தில் சேர்ந்துவிடு தினமும் சாப்பாடு கிடைக்கும் வேலை செய்ய ஆட்களே இல்லை” நந்தனுக்குத் தோன்றியது “அங்கயும் வேலைதானா. இந்தச் சனியன் நம்மை விடாது. சைவத்துக்குப் போனாலும், புத்தத்துக்குப் போனாலும். கூட ஆண்டை வேற வந்து அடிப்பான். "ஏண்டா இங்க சேந்தே". சைவத்தில வருஷம் முழுக்க ஆண்டைக்கிட்ட வேல பாத்துட்டு எப்பவாவது கூடப் போய்ச் சேந்துக்கலாம். புதுசாச் சிவனடியார் கூட்டத்தைத் தொடங்கினால் தலைவனாக ஆகிவிடலாம். பஞ்சமரின் அடியார் கூட்டம். ஆண்டையும் சாமி பேரச் சொன்னா முதல்ல திட்டினாலும், பிறகு பயத்தில் அனுமதித்து விடுவார். புத்த மடத்தில அப்படி முடியாது. சதா நேரமும் அங்கயே இருக்கணும். நல்லது தான் ஆனா ஆண்டை விடமாட்டாரே. ஊர்பஞ்சாயத்தைக் கூட்டி, என்ன வேணாலும் செய்வாரு. குண்டில சூட்டுக் கம்பியக்கூட விட்டுருவாங்க. வழிவழியா வர்ற வழக்கத்தை மீறிட்டான்னு தண்டம் போடுவாரு. சாவறதுக்கு பதிலா சைவ அடியார்ட்ட சேந்துக்கலாம். இதான் முடிவு என்று நின்று கொண்டிருந்தான். அப்ப பாத்து, இரண்டு பேரு, நந்தன் மகனை அழைத்துக் கொண்டு அவனிடம் வந்தார்கள்.

வந்ததும் அடிதான். நல்ல வாட்டமான கட்டைகளை எடுத்து அடித்தார்கள். “அடிக்காதீங்க, நடராஜரைப் பாக்காமலேயே வந்திர்ரேன். ஆண்டைக்கிட்ட வர்றேன்.” அவன் மகனும் அலறிக் கொண்டிருந்தான். நந்தன் உணர்வின்றிக் கிடந்தான். அவனை யாரும் தூக்க வரவில்லை. தொட்டால் தீட்டு. அப்போது தான் “அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்” என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்த செப்பரடிகள் அவனைப்பார்த்தார்.

அடித்தவர்கள் நால்வரும் ஆண்டையின் ஆட்கள் என்று அவருக்கும் தெரிந்தது. ந்நதனுக்காக பரிந்து பேச முடியாது. இவன் எங்கடா நம்மிடம் வந்தான் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். நல்ல வேளை தீட்டு ஒழிந்தது. இனி மனத்தடுமாற்றம் இன்றி அவர் இறைவனைப் பாடிப் பரவலாம். நந்தனின் மகனும் அடிவாங்கியதில் விழுந்து கிடந்தான். கொஞ்சம் உணர்வு வந்ததும் தட்டுத் தடுமாறிக் கொண்டே ஊரைப்பார்க்க நடந்தான். அப்பா இங்க கிடைக்காம இருந்திருந்தா பிழச்சிருப்பார் என்று முனகிக் கொண்டே சென்றான். நந்தனை அங்கே விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அவனால் தூக்க முடியாது. யாரும் வரவும் மாட்டார்கள். நந்தன் பிணத்தை நாய்கள் காகங்கள் தின்றுவிடும். நினைக்கும் போது அழுதான். சிவன் பேரைச் சொல்லிச் சாவதில் என்ன இருக்கிறது? அடிமை என்றும் அடிமை தான். ஆண்டைக்கோ அல்லது சிவனுக்கோ. சொன்னாலும் அவன் கேட்டதில்லை.

செப்பரடிகள் தூரத்திலிருந்தே சொன்னார் “தீக்கு தீட்டுக் கிடையாது. எண்ணைய விட்டுக் கொளுத்திடு” நந்தன் கோயிலுக்குள் போகாமலேயே எரிந்தான். இனிமேல் எந்த அடிமையும் சைவக் கூட்ட்த்தில் சேரமாட்டான். ஆனால் புலையனும் சிவன் பேரைச் சொன்னால் அவனுக்கு நான் அடிமை என்று உரக்கப் பேசலாம்.

விஸ்வாமித்திரன் இன்னும் தவம் கலையவில்லை. நந்தன் இறந்தது தெரிந்து ஒருமுறை விழித்துப் பார்த்தான். இன்னும் தவம் செய்ய வேண்டும்.

• * * * * * * ** *

“விஸ்வாமித்திரனுக்கு தேவலோகத்தைப் பற்றித் தெரியுமா? ஏதோ புது லோகத்தப் படைக்கப் போரேன்னு கிளம்பினாராமே? அது போலத்தான் இப்போ கிளம்பிருக்காங்க. தினம் ஒரு கட்சி. அன்னன்னைக்குச் சோத்துக்கே வழியில்லாத பயக எல்லாம் புது உலகம் படைப்போம் அப்படீன்னா புது உலகம் என்ன பொம்மைக்கடையா? ஊர்வலம் போவாங்க. தகராறு பண்ணுவாங்க. அடிவாங்குவானுக. ஒளிஞ்சிக்குவானுக. இதுதான நடக்கு காலங்காலமா மாவோயிஸ்டுங்கிறான், புத்திஸ்டுங்கறான். தலித்துங்கறான், நந்தனார்ங்கிறான் ” சென்னையில் நடந்த ஊர்வலத்தைப் பார்த்து, சுப்பிரமணியனும், செல்லையாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் சரித்திரப் பேராசிரியர்கள். தினமும் கடற்கரைச்சாலையில் உடற்பயிற்சிக்காக நடப்பவர்கள். அம்பெட்கர் சிலை வரும்போது அவரைப் பற்றிப் பேசுவார்கள், பெரியார் சிலைவந்தால் அவரைப் பற்றிப் பேசுவார்கள். விஸ்வாமித்திரன் சிலையாக இல்லை. அதனால் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறாரா என்பது அவர்களுக்குத் தெரியாது. விஸ்வாமித்திரனும் தவமிருந்தே காற்றில் கரைந்துவிட்டான். அவன் ஏக்கம் கடைசிவரை தீரவே இல்லை.

Monday, October 19, 2009

Bald and pitiful

Many people concede that there are standards of Beauty. One of the factors determining beauty and handsomeness is the amount of hair on your head, and not the amout of mass inside or the amount of work it does. Long hair is considered more beautiful for females and denser its spread, it is considered handsome for males. No religious text has prescribed or defined beauty, for no oracles referring to hair has been found. It is only the poets and lazy people who have defined beauty or handsomeness. It may be recalled that until sometime ago, males had grown long hair like females and in some communities they still consider it sacred for males to grow hair. It appears that god is already bald or he is growing bald for he has not passed any commandmens on this subject.

Hairlessness creates permanent scar not only on the head but also in the mind and heart of the males. It is a nightmare for a man of twenty to foresee a future without a strand of hair on his head. But there are others more fortunate who are bald before twenty five. Fortunate in that they can reconcile with their baldness with boldness in mind without waiting for the hairlessness to come at a later age.

One of my friend had tried the medicines prescribed in a television advertisement by a one- eyed Bengali doctor who talked of curing baldness thousands of times. As they say if you repeat something thousands of times, people tend to believe. My friend had spent thousands of nights worried about his bald head and its impact on his illicit love with another man’s wife and scores of girls with whom he had fallen in love. Except for the illicit love who cared for something more than the bald head, none of them were impressed either by his baldness or by the growth of hair on his head visible only to himself. Like god, it was visible to the blessed and invisible to the not so blessed. For these scores of girls were not blessed. Blessed not to marry him.

He had spent hundreds of rupees and many hundreds of hours before mirrors looking for any improvement in his lock of hair. After sometime he also tried to hide his baldness with the camouflage of long stretched hair from the back of his head, bringing it to cover the bald patch like a general bringing in additional troops to cover his fighting front. After 5 years of counting his hairstrands he left the habit only when there was none to count. All the girls he he tried to love also left him high and dry by that time. I narrated this only to show that girls do not love a man without a hair on his head but they may love a man who has nothing inside.

Life of a Bald headed man is not all that gloomy. There are some advantages of baldness. People, particularly the intellectual type, may think that you must be wise, for most of the wise men are bald. If you keep some books in your drawing room and pretend to read books by wisemen there are chances that you may be considered a wise man and people may flock to you for updating their knowledge. This may a diversionary tactic. They may not discuss about your glowing hair or shining forehead, but about something else. They may over rate your age but also your wisdom. Your wife may have lice but it will never stay in your head. When all your male collegues may scratch their head in office albeit for bringing out some idea, but actually for killing a louse that is irritataing at the wrong moment, you need not. It may show itself in your hairless head with distinction and others may wonder as to how is it possible for lice to stay on your slippery head.

Once when my friend, who had know me only as a hairless emperor, saw my photograph of a bygone era when I had curled, step-cut hair, he wondered that it was a museum piece. For he had not known the times when combs were useless to keep my hair in order. I forgave him.

When you have a fight with your wife, if you are bald, she may not be able to catch you by your hair. You may have the advantage of doing that. Some people ( particularly biologists) may say that the reason for their baldness is exactly that their wives had caught them by their hair and when it was repeated often, their genes had developed baldness in defence. Think of biology. Baldness is the result of evolution. When men lived in forest, they needed hair to protect their skull from the heat, rain cold and what not. Now, when most of the time, Man stays inside, there is no need for such a protection. He can run into an AC room to cool his head.
Increasing I notice that women (particularly working women and old women, who have neither time nor energy for looking after their locks of hair) also prefer shorter hair.

Oh, my bald headed brotheren, don’t be bald and pitiful. Think yourself bold and beautiful(even if others don't think so}.

Sunday, October 11, 2009

தேர்வு


அம்மா அருணுக்கு சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

”ஜகத்குரு சங்கரர்”

“ஜகத்குரு எப்படிம்மா ஆகமுடியும்?” ஏழாவது நூற்றாண்டில் நம்மால் அமெரிக்கா போயிருக்க முடியுமா? அப்ப அமெரிக்காவை கண்டே பிடிக்கலையே?” அருண் படிப்பைத் தொடங்கியதும் பிடித்துக் கொண்டான். அம்மா அமைதியானாள். என்ன பதில் சொல்லுவாள்?”

“சரி நீ இங்க கவனி. அஞ்சடிக்கப் போகுது மணி. இன்னும் ஒண்ணுமே படிக்கல”. அவள் அர்த்தம் சொன்னாள் “முப்பத்தி ரண்டு வயதில் ஆதி சங்கரர் பகவானுடன் கலந்தார்”.

“கலந்தார் அப்படின்னா?”

“அதாவது கலந்தார்னா இறந்தார்”

“அம்மா கலந்தார்ங்கறதுக்கும் இறந்தார்ங்கறதுக்கும் என்ன வித்யாசம்?”

“எல்லாம் ஒண்ணுதான். அதாவது கடவுளுடன் இணைந்தார்.”

“அம்மா நீங்க என்ன சொல்றீங்க? ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?”

“தவம் பண்ணிக்கிட்டே இருந்தா ஆகும்.”

“என்ன தவம் பண்ணாரா? சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டாரே? உடம்புல சத்தெல்லாம் தீந்துருக்கும். செத்துப் போனார். பாவம். பைத்தியக்கார்ர் தான் அவரும். வீணாச் செத்துப் போனார். இல்லாட்டி எழுவது வயது வரைக்கும் இருந்திருப்பார்”.

“மேலே சொல்ல விடுடா. லொட லொடன்னு பேச்சு. போதும். இது ஏன்? அது ஏன்? வாயப் பொத்திகிட்டு இருக்க முடியாது. நீயே இதப் படி. எல்லாப் பிள்ளைகளும் தானாப் படிக்கிறாங்க. நீயாப் படிச்சா அப்பத் தெரியும்.” அம்மா போய்விட்டாள்.

அருணுக்கு ஆண்டுத் தேர்வு தொடங்கப் போகிறது. அவனை விட அம்மாவுக்குத்தான் தேர்வு.

“அப்பா… எப்பவும் டெஸ்ட், எக்ஸாம். சரியா தீபாவளிக்கு முன்னால் எக்ஸாம். ஏன் வருது?. போன வருஷமும் இதே மாதிரித்தான“. தேர்வை விட தீபாவளிக்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். “இந்தத் தடவை அந்த லக்ஷ்மியை விடமாட்டேன். ரொம்ப வெடிகளை எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டிருந்தா. நான் வெடி நிறைய வச்சிருந்தா அவளுக்கென்ன? உஹும்னு அழ ஆரம்பிச்சிடுறா”

அருண் மெல்ல சத்தமில்லாமல் வந்தான். “அப்பா, ஒரு நிமிஷம் வா.”
“ஏன் சொல்லு”.
அவன் உதட்டை மூடி விரலால் பொத்தி அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினான். அப்பா அவன் பின்னால் சென்றார். எங்கே போகிறானென்று புரியவில்லை. ஜன்னல் பக்கம் விரலைக்காட்டி கிசுகிசுத்தான். “அங்கே பாரு”.
அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனே அப்பாவின் தலையை பிடித்து இப்படியும் அப்படியும் அசைத்துச் சொன்னான். “அங்க பாரு அதோ”.
“அங்க என்ன?”
-2-
“மெல்ல ஜன்னலுக்குப் பின்னால பாருன்னா”.
“அங்க என்ன சொல்லு”
“அணில் குட்டி. மூணு. எப்படித் தூங்குதுன்னு பாரு?
ஜன்னலுக்குப் பக்கத்தில் கொய்யா மரம் இருந்தது. பலதடவை எட்டிப் பார்த்த பின் அப்பா அதைக் கண்ட்தும் அவர் கண்களும் விரிந்தன. “என்ன அழகாத் தூங்குது பாரேன். நானே முதல் தடவையாப் பாக்கேன்”.
“குட்டி அணில்கள். ஜாலியா தூங்குது பாரேன். ஒண்ணோட வால் இன்னொண்ணோட மூஞ்சில விழுந்திருக்கு.”
அப்பத்பாத்து அப்பாவுக்கு தும்மல் வந்த்து.
“மெல்லப்பா. பாரு ஒண்ணு முழிச்சிருச்சு. ச்ச்ச. இப்ப மூணும் ஓடிப் போயிரும். உங்களுக்கு இப்பத்தான் தும்மல் வரும்”.
எதுவரைக்கும் பாடம் படிச்சேன்னு கேட்க விரும்பினார் அப்பா. அவன் கவனம் வேறு விஷயத்தில் இருப்பதைப் பார்த்து பேசத் தயங்கினார்.
அம்மா அருணைத் தேடிக்கொண்டிருந்தாள். “இங்க பாரு. இப்பத்தான் அவனை இங்க விட்டுட்டு அடுகளைக்கு போனேன். இந்தப் பய என்னதான் செய்யணும்னு நெனக்கான்? கொஞ்சமாவது இவனுக்கு படிப்பில கவனம் இருக்கா? “அரூரூண்…. “ அவள் குரல் ஒரு கிலோமீட்டருக்கு மேல் கேட்டிருக்கும். திரும்பி வந்து அப்பாவைப் பார்த்துக் கூச்சலிட்டாள். “நீங்க புத்தகத்துக்குள்ள பூந்துக்கோங்க. எங்க போனான்? சொல்லுங்க. நான் அவனுக்கு சமஸ்க்ருத்த்தை முடிக்கணும். அவனுக்கு ஒண்ணுமே தெரியல. உங்க்கிட்ட கேட்டுட்டுப் போனானா?”
“எங்கிட்ட கேட்டுட்டு யாரும் போறதில்ல. நீக் கேட்டுட்டுப் போறயா?”
“ஆமா. அதுக்கென்ன? இப்பக் கேக்கறேன். சொல்லுங்க. அட ராமா. நான் என்ன செய்வேன். நாளைக்கு டெஸ்ட்ல இவன் என்ன எழுதுவான்? இவனுக்கு ஒண்ணுமே தெரியலையே?”
“வந்து சேர்வான். காலைல இருந்து படிச்சிருக்கான். பத்து நிமிஷம் சும்மா இருக்க மாட்டயா? சின்னப் பையந்தான. கொஞ்சம் ஃப்ரீயா விடேன்”
“இவனுக்கு வரும்னா நான் ஏன் இவன் பின்னால அலைறேன்.சமஸ்க்ருத்தை சொல்றான். அதை ஏன் பாடமா வச்சாங்கங்றான். என்ன ஆவான் இவன். அல்ஜீப்ரா எதுக்கு? ஜியாகிரபி எதுக்கு? பேசாம இவன வீட்லயே உட்கார வச்சிர வேண்டியதுதான்”. அவள் அடுக்களைக்குள் போய்விட்டாள்.
“அம்மா..” அருணின் குரல் கேட்டது. “வந்திட்டியா? வாடா கண்ணு” அம்மா அடுக்களையை விட்டு வெளியில் வந்தாள். ஆனால் அருணை எங்கும் காணவில்லை. “வா..இங்க வா.. உன்ன வெளுக்கல எம் பேரு… இல்ல” அடுக்களைக்குத் திரும்பினாள்.
அருண் கட்டிலுக்குக் கீழே ஒளிந்திருந்தான். ரொம்பச் சின்ன இடம். இதுக்குள் அவன் இருப்பானென்று கற்பனை செய்திருக்க முடியாது. “என்னை யாருங் கண்டே பிடிக்க முடியலயே.. நீங்க பேசுனதெல்லாம் கேட்டனே. அப்பாகூட எப்படிச் சண்ட போட்டீங்க?...”

3
அவன் கண்கள் புத்தகத்தையே பார்துக் கொண்டிருந்தன. தன்னம்பிக்கையுடன் நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தான். “ அப்பா… குட்டி நாய் இருந்த்தில்ல அது செத்துப் போச்சு.” ஒரு நொடி தலையை உயர்த்திச் சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான். “பாவம்,.. பசுமாடு மாதிரிச் செத்துப் போச்சு”
இப்போது அப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. நாய் மாதிரிச் செத்தான் என்று கேள்விப்பட்ட்துண்டு. பசுமாதிரிச் செத்தது என்றால்..”எப்படி?”
“பசுமாடு செத்த்து மாதிரி செத்த்து. இழுத்து இழுத்து மூச்சுவிட்டு…” அருண் அதே மாதிரி மூச்சுவிட்டுக் காட்டினான்.
“மாடு சாகறத நீ எங்க பாத்த?”
“நிறைய தடவை பத்திருக்கேன். எங்க ஸ்கூலுக்குப் பின்னால் பெரிய இடங்கடக்குல்ல. அதுல. வாய்ல இருந்து நுரையா வரும். நானும் நாராயணனும் தினம் பாப்போம். எதைத்தின்னுட்டு அது சாகும்னு தெரியல. மாட்டு டாக்டரும் வருவார். அப்படியும் சாகும். அங்க நிறைய பட்டாம்பூச்சியும் செத்துக் கிடக்கும். சரி, இப்ப இது என்னன்னு சொல்லுங்கப்பா..” நோட்டின் கடைசிப் பக்கத்தில் ஏதோ பறவையின் கால் சுவடுகள் போல வரைந்திருந்தான். அதைக் காட்டிக் கேட்டான்.
அப்பாவுக்குப் புரியவில்லை. படித்துக் கொண்டிருக்கும் போது, நாய், பசுமாடு, பட்டாம்பூச்சி, பறவையின் கால்விரல்கள். இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
“மயிலின் காலுப்பா. மழையில மயிலின் கால்தடம் இப்படித்தான் இருக்கும். எங்க ஸ்கூலுக்குப் பின்னால் நிறைய மயிலும் இருக்கும்”.
அருண், என்ன வெட்டிப் பேச்சு பேசிக்கிட்ருக்க. எதெல்லாம் படிச்ச. என்ன ஆனாலும் சரி இன்னைக்கு உன்னை விளையாடப் போக விடமாட்டேன். இதுல அப்பாவும் உங்கூட சேந்து வெட்டிப் பேச்சுப் பேச ஆரம்பிச்சாச்சு”
அம்மா சொன்னதைக் கேட்டு, அப்பாவும் அருணும் உடனே நேராக உட்கார்ந்தனர்.
“அப்பா, ஃபோன்ல எல்லாரும் என்னை அக்கான்னு சொல்றாங்கப்பா” சிரித்துக் கொண்டு கேட்டான் ”சொல்லுங்கப்பா, ஏன்?”
அப்பாவுக்குப் புரியவில்லை. “சொல்லுடா.., ஏன் என்ன நடந்தது?
“இப்ப நான் ஃபோனை எடுத்தன்ல. அதுல பேசுனாங்க. அக்கா வணக்கம், மிஸ்ராஜி இருக்காங்களா? எல்லோரும் இப்படித்தான் சொல்ராங்க”.
“அக்காவாகுறது என்ன பிரச்சனை?
அவன் அண்ணன் பிரஷாந்த் காதிலும் அது விழுந்த்து. “முதல்ல எங்கிட்டயும் அதுமாதிரித்தான் கேப்பாங்க. பிறகு, நான் தொண்டைய கரகரப்பாக்கிட்டேன். இப்ப யாரும் கேக்றதில்ல”
“ஊம்.. எப்படி?”
பிரஷாந்த் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஓடிவிட்டான்.

4
”அடுத்த வருஷம், எனக்கும் டீன் ஏஜ் ஆகிவிடும். அப்பறம் யாரும் அக்கான்னு சொல்ல மாட்டாங்க”
“இப்பப் படிக்கிறயா?. எழுதப் படிக்க வருதோ இல்லையோ, டீன் ஏஜ் வந்துரும்”. அம்மா இரைந்தாள்.
“உங்களுக்குத் திட்றதத் தவிர என்ன தெரியும்? எப்பப் பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க.”
அடுத்த நாள் வரலாறு-புவியியல் தேர்வு. அம்மா சரித்திரத்தில் வீக். அவனிடமே விட்டுவிட்டாள். அப்பாவையும் அவனையும் திட்டிக்கொண்டே “இவன்ட்ட கேள்வி கேட்டுப் பாருங்க. பெரிய சரித்திரப் பேரறிஞர்கள்” கோபமும் சிரிப்பும் லாவா மாதிரிப் பொங்கி வரும்போது நமது பதிலுக்குக் காத்திருப்பதில்லை. பதில் பேச நம்மாலும் முடிவதில்லை. அருணுக்கு இது தெரியும். சொன்னதால் எந்தப் பயனும் இல்லையென்று அவன் முகம் காட்டியது. அப்பா மீதும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவனுக்குத் தெரியும்.
அவன் அப்பா பக்கத்தில் உட்கார்ந்து, சரித்திரப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அப்பா பலமுறை எச்சரித்தும் முதல் பாடத்தில் இரண்டாவது வரியிலேயே படிப்பது நின்று விட்ட்து.
“அப்பா, சொக்குத் தாத்தா நம்ம வீட்டுக்கு ஏன் வர்றதில்ல? கேட்டுவிட்டு அப்பாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். “அவரு பேசறதக் கூட நான் பார்த்த்தில்லை. சொல்லுங்களேன். ஏன் வர்றதில்லை?
முதல் சுதந்திரப் போரின் தோல்விகளைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்த போது இதைக் கேட்டான்.
“அப்பறமா சொல்றேன்.”
“முதல்ல சொல்லு. எப்பவும் இப்படித்தான். அப்புறம் சொல்றேன்னு சொல்லவே மாட்டீங்க.”
“சரித்திரத் தேர்வுக்கப்புறம் நிச்சயமாச் சொல்லுவேன்”. அப்பா பக்கத்தில் வந்த்தும், இந்த மனப்பாடம் செய்ற படிப்பு நின்றுவிடும். அருணின் பூகோளப் புத்தகம் காணாமல் போய்விட்ட்து. இது முதல் தடவை அல்ல. மாசத் தேர்வென்றாலும், வருடத் தேர்வென்றாலும் ஏதாவதொரு பாடப் புத்தகம் தொலைந்துவிடும்.
ரொம்ப நேரமாக எந்தச் சத்தமும் இல்லையென்று அம்மாவுக்குப் பதற்றம். “அருண் இவ்வளவு கவனத்துடன் படிக்க மாட்டானே?”
அருண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். “அம்மா, புத்தகம் கிடைக்கல”
“அதான பாத்தேன். அதைத்தான் சத்தமில்லாம தேடுறியா? ரொம்பக் கவனமாப் படிச்சிக்கிட்டு இருக்கான்னு நான் நினச்சுக்கிட்ருக்கேன். அருண் நீ ஒவ்வொரு தடவையும் இதைத்தான் செய்ற. அண்ணன் புத்தகம் எப்படித் தொலையாம இருக்கு. இப்ப புத்தகம் கிடைக்கல உன்னைத் தொலச்சிட்டேன், கொன்னுபோட்ருவேன். தேடு நல்லாத் தேடு.”


அம்மாவின் கூப்பாடு, அவனுக்கு பறந்துவரும் கத்தி மாதிரி. உடனே ஓடிப்போய்த் தேட ஆரம்பித்தான். கட்டிலுக்குக் கீழே, சோஃபாவின் மெத்தையின் கீழே, பழைய பத்திரிக்கைகளுக்குப் பின்னால், அவன் புத்தகங்கள் இருக்கும் இடங்கள் இவைதான். சந்து பொந்துகளில் அறிந்தும் வைப்பான் அறியாமலும் வைப்பான். அப்பா சரித்திரப் பாடத்தில் டெஸ்ட் வைக்கும் நாளில் சரியாக, சரித்திரப் புத்தகம் காணாமல் போய்விடும். டெஸ்டு முகூர்த்தம் முடிந்த்த்டும் கிடைத்துவிடும். புவியியல் புத்தகம் காணாமல் போய்விடும். தீப்பெட்டி அட்டை, பழைய பேட்டரி செல், சாக்பீஸ், ஸ்டிக்கர், டபிள்யூ.டபிள்யூ.ஈ. அட்டைகள், சாக்லெட் தாள்கள், சச்சின் டெண்டுல்கர் படம் நாய்களின் கழுத்தில் கட்டும் மணி இதெல்லாம் ஒருபோதும் காணாமல் போனதில்லை.
“அருண், தண்ணீர் டாங்கி வழியாப் போகாதெ. அங்க ஒரு கடி நாய் இருக்கு. ராமச்சந்திரன் மகளைக் கடிச்சிருச்சு”.
“அம்மா, அது எந்தக் கலர் நாய்?”
“கறுப்பு மூஞ்சி செவலை உடம்பு”
“அதுக்கு என்னைப் பிடிக்கும்மா. எஞ்சத்தம் கேட்ட்தும் ஓடி வந்திரும். அதுக்கு நானும் எட்வர்ட்டும் ரொட்டி கொடுப்போம்.” அம்மா பையன் இருவரும் புத்தகம் டெஸ்ட், மிரட்டல் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.
“நான் சொல்றேன். நீ அங்க போகாதே. கடிச்சிட்டாப் பதினாலு ஊசி இவ்ள இவ்ள பெருசாப் போடுவாங்க. வயித்தில. புரியுதா?”. அருண் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. தன் நாயின் மீது அவ்வளவு நம்பிக்கை. “அம்மா, அது ஒண்ணும் ரொம்பப் பெரிசு இல்லையே. நேத்துக் கூட அது கூட வெளையாண்ட்டோம். ரொம்ப ஜாலியா இருந்த்து. மணின்னு கூப்பிட்டேன். இன்னொரு பையனைப் பார்த்துச் சாடை காட்டினேன். அவனத் துரத்தி விரட்டுச்சு. அவன் ஓடியே போய் வீட்டுக்குள்ள புகுந்துக்கிட்டான். இப்படி சேட்டைகளை விபரிக்கும் போது அவன் முகம் காலைச் சூரியன் போல் ஜொலிக்கும்.
அன்று அம்மா ஒரு திருமணத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவளுக்கு எல்லாவற்றிலும் பதட்டம். அவனையும் கூட்டிப் போக வேண்டுமென்று நினைத்தாள். பிள்ளைகளோடு விளையாடுவான். ஏதாவது சாப்பிட்டுக் கொள்வான். நாளக்கிப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொள்ளலாம். “எல்லா ஹோம் ஒர்க்கும் முடிச்சால்தான் கூட்டிப் போவேன்” அவள் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொண்ட்தாகவே தெரியவில்லை. அமைதியாக இருந்தான்.
“காதில விழுதா? டெஸ்ட் முடிக்கலன்னா கூட்டிப் போக மாட்டேன்”
அவன் சொன்னான் “நான் வரலே. யார் போவா அங்க. ஒரே போரடிக்கும்”. அப்பாவும் அவனை வருமாறு அழைத்தார். “நான் படிக்கப் போறேன்”
இப்போது என்ன செய்வது? அம்மாவின் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. அவள் கிளம்பிக் கொண்டிருந்தாள். தலைசீவிக் கொள்வதும், முகத்தைத் துடைத்துக் கொள்வதும், நடு நடுவில் அவன் படிக்கிறானா என்று எட்டிப் பார்த்துக் கொள்வதுமாக இருந்தாள். இப்படி அவனை விட்டுச் சென்றால் கவலை நான்கு மடங்காகிவிடும். இந்த ஜன்மம் முழுவதுக்கும் சேர்த்து உபதேசம் செய்வாள். இதைச் செய் அதைச்செய் என்று கட்டளைகள் இடுவாள். அருண் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பான். அம்மா இந்தப் பக்கம் வெளியே போனதும் அவனும் வெளியே பறந்துவிடுவான். மணி ஆறாகிவிட்டாலும் அம்மா இன்னும் கிளம்பவில்லை. அருண் அம்மாவின் முன்னால் நின்றான்.
“அம்மா என்ன செய்ற. கெட்ட நாத்தம் வருது”
6
அதற்கு அம்மா என்ன பதில் சொல்லுவாள்?. அவன் தொடர்ந்தான் “அம்மா இங்கிலிஷ் டீச்சர்ட்டப் போனா கெட்ட நாத்தத்தில மூக்கே வெடிச்சிரும். என்னத்தையோ போட்டுக்கிட்டு வர்றா. ஒரு நாள் எங்கிட்ட எம் மேஜையில ஒரு புத்தகம் இருக்கு எடுத்திட்டு வான்னு சொன்னாங்க. கேளேன்…. அம்மா… அதுல ஃபேர் அண்ட் லவ்லி, பவுடர், லிப்ஸ்டிக் இன்னும் என்னென்னமோ இருந்த்து. இதெல்லாம் ஏம்மா ஸ்கூல்ல வச்சிருக்காங்க.”
அம்மா கன்னத்தில் எதையோ வைத்துக் தேய்த்துக் கொண்டிருந்தாள். “என்னை ரெடியாக விடுவியா இல்லயா? படிச்சு முடிச்சிட்டயா?”
“இப்ப முடிச்சிருவேன்ல். நான் சொல்லிட்டேன்ல. அம்மா சொல்லு இதெல்லாம் எதுக்கு வச்சிருக்காங்க. ஸ்கூல்ல”.
“அதெல்லாம் உனக்குப் பிடிக்காதா?”
அருண் அமைதியாக இருந்தான். என்ன பதில் சொல்ல.
“உன் பொண்டாட்டி போடுவாள்ள…. அப்ப..?
“எனக்கு கவிதா மேம் தான் பிடிக்கும் அவங்க கிட்ட எந்த வாசனையும் வராது”.
அம்மா நினைத்துக் கொண்டாள் “படிக்கிறத்த் தவிர எல்லா வேலையும் பிடிக்கும்”
அம்மா, எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கும் பொறந்தநாள் பதினைஞ்சு மார்ச் என்னை மாதிரி. நான் பன்னிரண்டு மணிக்குத் தான பிறந்தேன். அவ பன்னிரண்டரைக்குப் பொறந்தாளாம்”
“நீ பன்னிரண்டே காலுக்குப் பொறந்தெ”
“அப்படின்னாலும், அவளைவிட பதினைந்து நிமிஷம் பெரியவந்தான.”
இந்தக் கணக்கெல்லாம் அவனுக்குத் தப்பாமல் வரும். பள்ளிக்கூடக் கணக்குத்தான் தகராறு. அடுத்தநாள் கேட்டுக் கொண்டிருந்தான். “அப்பா. ஏம்ப்பா அல்ஜீப்ரா படிக்கிறாங்க.. அதில என்ன இருக்கு” அவன் கேள்விகள் கேட்கும் மனநிலையில் இருந்தான். அப்பாவும் தான்.
“எல்லாத்துக்கும் ஏதாவது பலன் உண்டு. சிலதுக்கு இப்பவே இருக்கும் சிலதுக்கு நாளைக்கு”
“அது எப்படி?”
லாப நஷ்டக் கணக்கு, சதவீதம் படிக்கிறீல்ல. கடைக்குப் போனாப் புரிஞ்சுக்கலாம். எதுல கமிஷன் கிடைக்கும்? எது விலை மலிவு. எந்த பேங்கில வட்டி அதிகம் அதுமாதிரி. அல்ஜீப்ரா பெரிய பெரிய கணக்குப் போடும்போது தேவைப் படும். நிலாவுக்கு எவ்வளவு தூரம்? ஒலியின் வேகம் ஐன்ஸ்டீன் த்த்துவம் அது மாதிரி.”
அவனுக்கு முதலில் சொன்னது மட்டும் புரிந்த்து. அமைதியாகப் படிப்பதில் ஈடுபட்டான். ரொம்பக் கேள்வி கேட்டால் அப்பாவும் அம்மாவும், கூப்பாடு போட்டு திட்டித் தீர்த்து வாயை மூடி விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து அமைதியைக் கலைத்தான்.
“அப்பா இதெல்லாம் ஒருத்தனுக்குப் பிடிக்கலைன்ன்னா? என்ன ஆகும் அதுனால?”
அப்பாவிடம் அதற்குப் பதில் கிடையாது. “நீ முதல்ல ஹோம் ஒர்க்க முடி..”
7

அல்ஜீப்ராவில் பாக்கியிருந்த்து. முதல் கேள்வியிலேயே வண்டி நின்று விட்ட்து.
“உனக்குத் தெரியலைன்னா கேட்டா என்ன? எனக்குப் பரிச்சயா உனக்கா?” திடீரேன கோபத்தில் இரண்டு மூன்று அடிவிட்டார். முடியைப் பிடித்து உலுக்கினார். “இப்பக் கணக்குப் போட்டு முடியறவரைக்கும் இங்கிருந்து எந்திருச்ச தொலச்சிட்டேன். குறுக்குக் கேள்வி மட்டும் கேட்க மட்டும் எப்படித் தெரியுது? மூச்சு விட்ட நொறுக்கிட்டன் நொறுக்கி..”
கொஞ்ச நேரம் கழிந்து மொட்டை மாடியில் தவறு செய்துவிட்ட உணர்வுடன் உலவிக் கொண்டிருந்தார் அப்பா. “எதுக்கு அடிச்சேன்? அடிச்சாப் படிப்பு வந்திருமா? தப்பில்லையா? கண்ணுல எங்காவது பட்டிருந்தா? அவன் சீக்கிரம் அழமாட்டானே? இன்னைக்கு குலுங்கிக் குலுங்கி அழுதுக்கிட்டு இருக்கான்”
“கணக்கு, கணக்கு கணக்கு.. சாகவா? சாயந்தரம் அஞ்சு மணியில இருந்து எட்டு மணிவரைக்கும் படிக்கிறனா இல்லையா? கிரிக்கட் வேண்டான்னீங்க போகலை. கம்ப்யூட்டர் வேண்டாம் அங்கயும் போகலை. உலகத்ல எல்லாப் பிள்ளையும் ஒரே மாதிரியா இருக்கு. உங்களுக்குந்தான் படிப்பு வரலை. அடிங்க அடிங்க நல்லா அடிச்சுக் கொல்லுங்க…”
மீண்டும் மீண்டும் கண்ணீர் வழியும் அவன் முகம் மனக்கண்ணில் வந்துசென்றது. பயந்து போயிருந்தான். சீக்கிரம் எழுந்து படிக்கத் தொடங்கினான். அலாரம் வைத்துவிட்டுத் தூங்கினான்.
விடிந்தும் விடியாத காலையில் வரண்டாவிலிருந்து கூப்பிட்டான் “அப்பா அப்பா..நிலாவைப் பாருங்க.. எவ்வளவு அழகா இருக்கு மரத்துக்கு நடுவில். சீனரி நல்லா இருக்கில்ல. பரிட்சை முடிஞ்சதும் இதைப் படமா வரைவேன்”
நேற்று அந்த அடி வாங்கினான் என்றோ, இன்று அவனுக்குப் பரிட்சை என்றோ யாரும் சொல்ல முடியாது.

ஹிந்தி மூலம் : பிரேம் பால் ஷர்மா.
தமிழில் : வே ராஜகோபால்.

Thursday, October 08, 2009


முதற்காதல்

வீடு வெறிச்சென்றிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்து அருகிலிருந்த கேஸ்கட்டுகளை சுந்தர்ராமன் பார்த்தார். சற்றுத் தூரத்தில் கண்ணாடி அலமாறிக்குள் இருந்த காலாவதியான வழக்குகளின் கட்டுகளும் பல வருடங்களாக வாய்தாவில் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் வழக்குகளும் மருத்துவமனையின் சவ அறையில் அடுக்கி வைக்கப்பட்ட பிணங்களைப் போல் தெரிந்தன. கட்டுக்களைத் தொட்டவுடன் பைல்களின் காகிதங்கள் பிரிந்து மின்விசிறியில் காற்றில் படபடத்து பிணங்களின் வாய்கள் போல் திறந்தன. ஒவ்வொரு கட்டுக்குள்ளிருந்தும் பல முகங்கள் எட்டிக் குதித்தோடின.

மச்சானை வெட்டிய முத்துச்சாமி, அண்ணனுடன் நிலத்தகறாறில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே வயதாகி இறந்து போன கணபதிதேவர் இன்னும் எத்தனையோ அலைந்த ஊர்களும், வாதாடிய சப்-கோர்ட்டுகளும் செஷன்ஸ் கோர்ட்டுகளும் நீதிபதிகளும் அலையலையாய் நினைவில் நகர்ந்தனர்.

வழக்குகளின் விவரங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்ட வழக்குகளின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், வாதமும், வெற்றியும் தோல்வியும் அவருக்கு ஞாபகம் உண்டு. பழைய புகைப்படங்களைப் பார்த்து நினைவுகளில் மூழ்கி அசைபோடும் எழுவத்தி ஆறு வயதாகிவிட்டது அவருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது பிரச்சனையுடன் யாராவது வரக்கூடும். அதுவரை இது தொடரும். களைத்தது போலிருந்ததும் நாற்காலியில் உட்கார்ந்தார்.

குமாஸ்தா வருவதற்கு நேரமாகிவிடுகிறது. பத்துமணிக்குக் கோர்ட்டுக்குப் போகவேண்டும். ஒன்பதே முக்காலுக்குத்தான் வருவான். வேலையில் இருந்த பிடிப்பும் உழைப்பும் இப்போது வரும் குமாஸ்தாக்களுக்கு இல்லை. வக்கீல்களுக்கே கேஸ்காரன் மீது கருணையும் தொழில்மீது பிடிப்பும் இருப்பதில்லை.

மீண்டும் எழுந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு பழைய வழக்குகள் வைத்த அலமாரியைத் திறந்தார். ஒவ்வொரு கட்டாக, நூலகத்தில் புத்தகம் தேடுவதுபோல இலக்கின்றி தேடிப்பார்த்தார். கண்ணன் வாதி பிரதிவாதி முனிசிபாலிடி, கருப்பசாமி-பெரியசாமி (அவன் அண்ணன்) வெள்ளைப் பாண்டி- -- முனியம்மா(புருஷன் பொண்டாட்டி), ராமமூர்த்தி—காமாட்சி,.. அதைத்தான் கையில் எடுத்தார்.
அந்தப் பெண்ணை நன்றாக இருந்தது. தபாலாபிஸில் டைப்பிஸ்ட்டாக வேலைபார்த்தாள். கணவன் இறந்ததிலிருந்து கருணை அடிப்படையில் வேலைக்கு ஆணை வாங்கும் வரை அலைந்த அலைச்சல். வேறு வழக்குகளிலும் இதே உறுதி இருந்தாலும், தீவிரத்துடன் உழைத்தாலும், இந்த வழக்கில் வெற்றி பெற்று உயர்நீதி மன்றத்தில் ஆணை வாங்கியபோது அடைந்த மகிழ்ச்சி தனி. பாவப்பட்ட பெண், வேலைக்குப் போட்டியாக கணவனின் தம்பி, அவனுக்கு உதவிய அலுவலகத் தொடர்புகள். அவளுக்கு அண்ணனுடன் திருமணமாகவில்லை என்று மனதார பொய் சொல்லிய தம்பி. எல்லாம் சேர்ந்து அவள் வாழ்க்கை பாழாகியிருக்கக் கூடும்.

அதற்குள் தினமலரும் எக்ஸ்ப்ரஸ்ஸூம் வந்து தொப்பென்று விழுந்தன. இரண்டையும் படித்து முடிக்க அரைமணி நேரம் ஆனது. முடித்ததும் சலிப்புதான் எஞ்சியது. “என்னத்தையெல்லாம் போடறானுக” சுவாரஸியம் இல்லாமல் மாடியை விட்டுக் கீழே வந்தார். படிகளில் இறங்குவது சிரமமாகத்தான் இருந்தது. எழுவத்தி ஆறாம் வயதில் மாடிப்படி ஏற முடிவதே பெரிய விஷயம். அரிதரிது.

கீழே முன்னறையில் அவர் மகன் சிவசு உட்கார்ந்திருந்தான். அவனுடன் ராஜன். அவரைக் கண்டதும் இருவரும் நேராக உட்காருவதுபோல் அசைந்து மீண்டும் முன்னர் இருந்த மாதிரியே இருந்தனர். “இவனுக்கு என்னைக்கு புத்தி வருமோ? கண்ட பயலுக கூடச்சேர்ந்து சுத்த வேண்டியது. வக்கீல் தொழிலுக்கு வேண்டாத சகவாசம் வைச்சிருக்கான்”. யோசித்துக் கொண்டே தோளிலிருந்த துண்டை உதறி மீண்டும் போட்டுக் கொண்டு உள்ளறைக்குச் சென்றார்.
அடுக்களையில் மருமகள் மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தாள். வேறு எதுவும் சத்தமில்லை. ஒரு காலத்தில் பத்து பதினைந்து பேர் இருந்த வீடு. சந்தக்கடை மாதிரி என்று இளைய மகள் சலித்துக் கொள்வாள். பாத்ரூம் படியில் நின்று விறகடுப்பில இருந்த வென்னீர்ப் பானையைப் பார்த்தார். முப்பது நாற்பது வருட்ங்களாக புகையடித்துப் போன அடுப்பும் பானையும் கோபத்தில் தள்ளி உட்கார்ந்திருக்கும் பெண்ணைப் போலிருந்தன. அதில் தான் செண்பகம் எத்தனையோ வருடங்களாய் புகையில் இருமிக் கண்கலங்கி, கசங்கி ஆஸ்மாவுடனும் அவருடனும் எட்டுக் குழந்தைகளுடனும் கொஞ்சிக் குலவி, கூப்பாடு போட்டு, கடைசிவரை நோயுடன் போராடி. சடக்கென்று போய்விட்டாள்.

குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் சாமி படங்கள் வைத்திருக்கும் அறைக்கு வந்தார். ஊதுபத்தியை எடுத்துக் கொளுத்தி சாமிகளுக்கெல்லாம் காட்டும் போது புதியதாகச் சேர்ந்திருக்கும் செண்பகத்தின் படத்தைப் பார்த்தார். இரண்டு மாதத்திற்கு மேலாகி விட்டது. வேட்டியைக் கட்டிக் கொண்டு அதே அறையில் சாப்பிட உட்காரும் போது குமாஸ்தா வந்தான்.
“இன்னைக்கு சீக்கிரம் கட்டுகளை எடுத்திட்டுப் போய்ரு. நம்ம கேஸ் முதல்ல வந்திரும் ”அவர் பேசுவது குமாஸ்தா மணிக்கும் வெளியறையில் இருந்த ஜூனியர் சங்கருக்கும் கேட்டது. மருமகள் இட்லித்தட்டுடன் வந்தாள். முதுகுக்குப் பின் செண்பகம் “தண்ணி வைம்மா” என்றாள். அவர் எப்போதும் போல திரும்பாமலே இருந்தார். சாப்பிட்டு எழும் போது கட்டில் வழக்கத்துக்கு மாறாக காலியாக் இருந்தது.
துண்டைத் தேடினார். அவராகச் சென்று உள்ளறையில் தேடி எடுக்க வேண்டியிருந்தது. யாரோ பின்னால் வருவது போலிருந்தது. ‘என்ன’ என்று கேட்டுக் கொண்டே திரும்பினார்.

செண்பகம் இந்த நேரத்தில்தான் சண்டைக்கார முதலாளியிடம் வேலைக்காரன் கேட்பதுபோல் “முன்னூறு ரூபா கொடுங்க” என்று கேட்பாள்.
“அன்னைக்குத்தான் எண்ணுறு ரூபாய் வாங்குன” பதில் தெரிந்திருந்தாலும் எப்பவும் இந்தக் கேள்வி வரும். நேரே பார்க்காமல் இருவரும் முனகிக் கொள்வார்கள்.
“சாமான் வாங்க வேண்டாம். வண்ணாத்திக்கு துணிபோடவேண்டாம். தூரவா போடுதேன்” கோபத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர எத்தனிப்பாள். “இந்தா இந்தா பைசா என்ன மரத்திலயா காய்க்கு..உழைச்ச காசு” என்ன பேசினாலும் கொடுக்காமல் விடமாட்டாள். “நாங்க மட்டும் உழக்கலையாக்கும் இவுக தான் உழக்காக” வக்கணையாக சொல்லிவிட்டுப் போய்விடுவாள். மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவரும் கோர்ட்டுக்குக் கிளம்பிவிடுவாள். கோர்ட்டில் நேரம் போவது தெரியாது.

சாயங்காலம் வீடு திரும்பும் போது அவர் மனதில் எதொ அழுத்தியது. வாசலில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. சிவசு எங்காவது கிளம்பிவிட்டானோ? அவன் கேஸ்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்ததான். “யாருக்கு ஆட்டோ? குறை சொல்லும் தொனியில் ஆனிடம் கேட்டுக் கொண்டே உள்ளே போனார். மூங்கில் சோபாவில் நிரம்பி வழியும் ஒரு சாக்குப்பை இருந்தது.
உள்ளே நின்ற மருமகள் கண்களில் தயக்கத்துடன் சொன்னாள் “அம்மாவுக்கு ரொம்பக் காய்ச்சல் அடிக்காம் அதாம் பாக்கப் போறோம்”
“சரி போ”

உடைகளை மற்றிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஆட்டோ கிளம்பிப் போய்விட்டது. வீட்டில் ஆள்ரவமில்லை. அவர் காலடிந் சத்தம் அவருக்கே வேறு யாருடையது போலவோ கேட்டது. உள்ளே நுழையும் போது செண்பகம் கட்டிலில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பாள்.
“எப்பப் பார்த்தாலும் டி.வி தானா? கொஞ்ச நேரம் சத்தமில்லாமல் இருக்காதா?”
அதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப் படுவதில்லை. மகன் இருந்தால் அவனிடம் சொல்லுவாள் “வீட்டுக்குள்ளயே இருந்து என்ன செய்ய? செத்த நேரம் உக்காந்தா?” அதற்குள் டி.வி. சிரியல் அவளை மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும்.
சிவசு என்ன செய்கிறான்? அடுக்களையில் ஏதோ உருளுவது கேட்டது. பக்கத்து வீட்டில் சுவரை இடித்துக் கொண்டிருந்தான். சாமி படங்களைப் பார்த்தார். தி.மு.க.வில் இருந்தாலும் கோயில்களுக்குத் தினமும் போகாவிட்டாலும் வீட்டில் குளித்துவிட்டு திருநீறு பூசி, சாமி படங்களுக்கு பத்தியைக் கொளுத்திவைத்து சுற்றிக் காட்டிவிட்டுச் சாப்பிடுவார். செண்பகத்தின் படத்தில் மல்லிகைச் சரம் தொங்கியது. கொஞ்ச நேரம் முன் மருமகள் தலையில் அதைப் பார்த்த ஞாபகம் வந்தது. முன்னறையில் சிவசுவைக் காணவில்லை. எங்கே போனான்? மாடி ஏற நினைத்தவர் தயங்கி நின்றார். இவ்வளவு பெரிய வீட்டைத் திறந்து வைத்துவிட்டு ….அங்கிருந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டார்.

எல்லாப் பிள்ளைகளும் வெளியூரில் இருந்தாலும் கடிதம் எழுதுகிற வழக்கமில்லை.. இப்போது யாருமே கடிதங்கள் எழுதுவதில்லை. எல்லாம் போனில் பேசிவிடுகிறார்கள். அவருடன் யாரும் ரொம்ப பேசுவதில்லை. சின்ன வயசிலிருந்தே அப்படித்தான் வழக்கம்.

பக்கத்து வீட்டு முத்தையாபிள்ளை நடக்க முடியாமல் பேரனின் கைத்தாங்கலுடன் போய்க்கொண்டிருந்தார். நல்ல வேளை அவரால் நடக்கமுடிகிறது. பேரன்கள் வெவ்வேறு ஊர்களில் வேலைக்கும், மற்றதற்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

மாத்திரை சாப்பிட வேண்டும். அதைத்தேடக் கண்ணாடி வேண்டும். ‘ஏ இந்தக் கண்ணாடி” பாதியிலேயே குரல் நின்றுவிட்டது. இந்த வீட்டில் இப்போது யாருமில்லை. அப்புறமாக மாத்திரை சாப்பிட்டுக் கொள்ளலாம். மாத்திரை தேடக் கண்ணாடி தேடி, தண்ணி எடுத்து, .. நினைக்கவே களைப்பாக இருந்தது. யாராவது வேண்டும். செண்பகம், பேத்தி பேரன். சிவசுவின் மனைவி இருந்தால் சிடு மூஞ்சியுடனாவது எடுத்துத் தருவாள். இப்போதுதான் யாரும் இல்லையே. வயசான காலத்தில் முடியாத நேரத்தில் ..

“இஞ்சி பூண்டு தினம் சாப்பிட்டால் போதாது. இந்த மூன்று மாத்திரைகளையும் கண்டிப்பாகச் சாப்பிடவேண்டும்” என்று டாக்டர் பாண்டியன் சொன்னது ஞாபகம் வந்தது. எழ மனமில்லை. வியாதி என்ன செய்யும்? இப்ப இருக்கும் டாக்டர்கள் விலை கூடுன ஊசி மருந்து மாத்திரைன்னு எழுதிக் கொடுத்திர்ரானுக. இஞ்சி பூண்டு வேப்பந்தழை தெனமும் சவைச்சாலே ஒரு வியாதியும் வராது. மகள் டாக்டராக இருந்தாலும் அல்லோபதி மீது கொஞ்சம் வெறுப்பும் பயமும் உண்டு. எல்லோரையும் போல.

மறுநாள் சாயங்காலம் திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கியதும் வீடு ரொம்பத்தூரம் போல் தோன்றியது. கார் வாங்கியதிலிருந்து வெளியூர் கேஸ்களுக்கு அதில் போவது வழக்கமாகிவிட்டது. சிவசு காரை எடுத்துக் கொண்டு மதுரை போயிருந்தான். வீட்டில் மருமகள் இருந்தாள். வாசல் விளக்கு ஏனோ எரியவில்லை. செண்பகம் இருந்தால் பளிச்சென்று வெளிச்சமாக இருக்கும். அவள் உயிரோடிருக்கும் போது ஒருமுறை கூட ‘நீ இருந்தால் வீடு வெளிச்சமாக இருக்கிறதெ’ன்று அவளிடம் சொன்னதில்லை. சொல்லத் தோன்றியது கூட இல்லை.

வீட்டில் கால் வைத்ததும் மனதுக்கு இதமாக இருந்தது. செல்லம்மாவும் சிவசுவும் ராத்திரி வரலாம். வந்தால் தேவலை. ஏதாவது பேசலாம். பிள்ளைகளிடமும் பணம் படிப்பு கல்யாணம் தவிர அதிகம் பேசியது கிடையாது. பம்பாயிலிருந்து வரும் லக்ஷ்மி ஒருமுறை கேட்டாள் “அப்பா நான் எப்படி இருக்கேன். என்ன நினைப்பேன். என்னெல்லாம் கஷ்டப்படுவேன் இப்படியெல்லாம் யோசிப்பீங்களாப்பா. .பேசணும்னு தோணுமா? பாபு வீட்ல பேரன் தாத்தா மேல ஏறி விளையாடுதான். நீங்க பேசவே யோசிக்கிறீங்க..” அவருக்கு அப்படித் தோன்றியதே இல்லை. அவருடைய அப்பாவும் இப்படிக் கேட்டதில்லை. “எப்படித் தெரியும் எனக்கு?” அந்தச் சமயத்தில் கேட்டிருக்கலாம். இப்போது தோன்றியது. போன் பேசலாம். ஆனாலும் ஒரு தயக்கம் தடுத்தது.
“மருமகள் வந்து கேட்டாள்” சாப்பிடுறீங்களாப்பா..? அவரு மதுரையிலைருந்து வர லேட்டாகும்ல. “
உம்.. வை. என்னது சாப்பிட?”
“இட்லி”
அவருக்குச் சுவராஸ்யமாக இல்லை. விஸ்கி ஏதாவது அடிக்கலாம் என்றால், துணைக்கு ஆள் வேண்டும். யாராவது எல்லாவற்றையும் தயார் பண்ணி வைத்தால், குடிக்கலாம். தொட்டுக்க கறி மீன் ஏதாவது வைத்துக் கொள்ளலாம். எல்லாவேலைக்கும் ஆள் வைத்தே பழகிவிட்டது. இப்போது அவரே எல்லா வேலையையும் செய்ய முடியாது. ஒரு தயக்கம்.

தூங்கும் முன் அடுத்தநாளுக்கான கேஸ் கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது “வணக்கம் சார்” என்று பெண்குரல் கேட்டது. கேட்ட குரலாக இருக்கிறதே என்று நிமிர்ந்தார். புரிந்து விட்டது. “வாங்க..வாங்க. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முந்தினநாள் காலையில் பார்த்த கேஸ்கட்டில் எழுத்தாக இருந்த பெயர், இப்போது அவரெதிரில். காமாட்சி.
“நீங்க எப்ப வந்தீங்க? உக்காருங்க..
இந்த ஊருக்கு மாத்திட்டாங்க. சார். அதான் பாத்திட்டுப் போகலாம்னு வந்தேன். சீக்கிரம் வந்தா இருக்க மாட்டிங்கன்னு நேரங்கழிச்சு வர்றேன்”.
“பரவாயில்லை. சும்மாதான் இருக்கேன்’.
“அம்மா இறந்த அண்ணைக்கு வந்தேன்…” கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்.
ரொம்ப நல்லவங்க.. எப்ப வந்தாலும் விசாரிப்பாங்க.. பொதுவா எல்லார்ட்டயுமெ நல்லா பேசுவாங்க.. அதெப்படி சார் திடீர்ன்னு சுகர் குறஞ்சு போச்சு.”
ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனாள் காமாட்சி. மணி பத்துக்கு மேலாகிவிட்டது. அதற்குள் பலதடவை மருமகள் மாடியில் லைட் எரிகிறதா என்று பார்த்துவிட்டுப் போயிருந்தாள். சிவசுவும் செல்லம்மாவும் வர ராத்திரி பன்னிரண்டாகிவிட்டது.

சுந்தர்ராமன் கண்கள் நிலைகுத்தியிருக்க எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். காமாட்சிக்கு நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். நாட்டுக் கட்டை உடம்பு. ”ஒரு பொண்ணு இருக்கா சார். காலேஜ் படிக்கா. உங்க புண்ணியத்தில நல்லாயிருக்கேன். அவள் மேல படிக்க வைக்கணும்”. அவள் போய்விட்டாலும் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. எட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைத்தது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இப்போது பெரிதாகத் தெரிந்தது. அவர்கள் என்ன படித்தார்கள் எப்போது முடித்தார்கள் அதெல்லாம் மீண்டும் ஞாபகப் படுத்திப் பார்த்தார். மங்கலாக ஞாபகம் இருந்தது.

யாருடனும் மனம் விட்டுப் பேசி நாளாகிறது. அண்ணன் தம்பி எல்லாம் மேலே போய்விட்டார்கள். அடுக்களையில் ஏதோ பாத்திரம் உருண்ட சத்தம் கேட்டது. அங்கு யாரும் இல்லை. முன்பு கலகலத்திருந்த வீடு. சாப்பாடு பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.

செண்பகம் இருந்தவரை சாப்பாடு பற்றி ரொம்ப யோசித்ததில்லை. “உப்பு சரியில்லை. ருசியா இல்லை. சகுந்தலா ஓட்டல்ல இதைவிட நல்லாயிருக்கும்” என்று எதையாவது சொல்லிக் கொண்டுதான் சாப்பிடுவார். அவளோ பிள்ளைகளோ அந்த நேரம் எதுவும் பேசாது. கோபம் வந்துவிடும்.
கடைசியாக செண்பகத்துடன்……….எப்போது என்று யோசித்துப் பார்த்தார்… வருடங்கள் சரியாக ஞாபகமில்லை. முப்பது-நாற்பது வருடங்கள் இருக்கும். அவளுக்கு இளைப்பும், சர்க்கரை நோயும் வந்து பாடாய்ப் படுத்தியது. அதில் தான் போய்ச்சேர்ந்தாள். நடுநடுவில் வெளியூர்களில் பல இடங்களில் … கழித்ததுண்டு. பின்னர் யோசித்தால் அது ஒன்றுமில்லை போலிருக்கும். திருப்தி இல்லை. ஒரு மனச்சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். சிலநேரம் தண்ணீர் குடித்தால் தாகம் அடங்கிவிடும்.

இருட்டில் ஒளிரும் அவரது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. இப்போதெல்லாம் தூக்கம் வர நேரமாகிறது. இரண்டு வருடங்களாகத்தான் இந்தப் பிரச்சனை. வர வர அதிகமாகிவிட்டது. காமாட்சி மனதில் நிழலாடிக் கொண்டிருந்தாள். எவ்வளவு நன்றி விசுவாசம் அவளுக்கு. இந்தக் காலத்தில் பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையைப்பற்றி யோசிப்பதில்லை. அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுகிறார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பின் அவரைப் பார்க்க வந்திருக்கிறாள். மூத்த மகளைப் போல என்று சொல்லிக் கொள்ளலாமா? அவரால் முடியவில்லை. என்ன சமூகம் இது? மனைவியைத் தவிர வேறு பெண்ணாக இருந்தால் அக்காவாக அம்மாவாக மகளாகத்தான் ஒரு மனிதன் வரித்துக் கொள்ளவேண்டும். அவளோ நாய்க்கமாரு. நிறம் கொஞ்சம் சிவப்பு. இப்படி நாற்பத்தைந்து வயதில் உருண்டுழலும் அவள் பேசிக் குழைந்ததும் அவளை நினைத்தாலே ஜிவ்வென்றேரும் உணர்ச்சி.
அவளும் சொன்னாள் “ எனக்கு யார் சார் இருக்கா? பதினெட்டு வருஷமாச்சு அவரு போயி. ஒரு நாதி கிடையாது. தலைஎழுத்து. எத்தனை பிரச்சனைகள்?. மக மட்டும் இல்லைன்னா…. எப்பவோ போய்ச்சேந்திருப்பேன்” அவள் கண் கலங்கியதில் அவருக்கும் என்னவோ செய்தது. செண்பகம் போனவருஷம் தான் போனாள். ஆனால், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவளை நெருங்கி. காமாட்சியின் வேதனைகளும் அவள் பிரச்சனைகளும் அவருக்குப் புரிந்தன.
அவள் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.” நீங்க மட்டும் அந்த வேலையை வாங்கிக் கொடுக்கலைன்னா…” அவளால் பேச முடியவில்லை விம்மினாள். அவள் துயரம் அது மட்டுமில்லை என்று அவருக்குத் தோன்றவில்லை. கைகள் மெத்து மெத்தென்றிருந்தன. இத்தனை வருடம் யாரும் தொடாத கைகள். அப்படித்தானிருக்கும். இருக்கவேண்டும். அவருடைய கைகளும் தான். அவள் தோளைத் தட்டிக் கொடுத்து “கவலைப் படாதேம்மா.. எல்லாம் நல்ல படியா நடக்கும்”
“ நீங்கதான் சார்……” அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. அவருக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. அவளும் அதைப் பார்த்தாள்.
“நான் இருக்கேம்மா பயப்படாதே”. எத்தனை பேருக்கு மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணிடம் இப்படிச் சொல்ல வாய்ப்புக் கிடைக்கும். நினைத்தாலும் சொல்ல முடியாது. மனிதர்கள் எல்லோரும் கருணைமனம் படைத்தவர்கள். குறிப்பாக பெண்களிடம்.
“ஒரு மக இருக்கா. அவ படிச்சு மேல வரணும். உங்களை மாதிரி வக்கீல் ஆக்கணும்”
“அதுக்கென்ன, அவ படிச்சு வக்கீல் ஆகிருவா” அவர் முடித்ததும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அவருக்கும் மனதுக்கு இதமாக இருந்தது. யாருக்காவது ஆறுதல் சொன்னால் ஒரு அமைதி கிடைக்குமே அது. யாரிடமாவது இது மாதிரிப் பேசியிருக்கேனா என்று அவருக்குள் கேட்டுக் கொண்டார். எந்தப் பெண்ணும் அவரிடம் பேசியதில்லை. எத்தனையோ பெண்களுக்காக வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார். இவள் மட்டும் ஏதோ தனி. வீட்டில் யாரும் துணைக்கு இல்லாமல் தான் இப்படித் தோன்றுகிறதோ என்றும் நினைத்தார். ஆனால் இந்த உணர்ச்சி நிஜமானது. இல்லையென்றால் காலையில் கேஸ் கட்டுக்குள் பெயராக இருந்த ஒருத்தி மாலைக்குள் குழைந்து உருகும் மனமாக திரண்ட உடலாக வருவாளா? பாவம் இந்தப் பெண்ணுக்கு முடிந்தவரை உதவ வேண்டும்.

காலையில் ஐந்து மணிக்கு வழக்கம்போல் வேப்பங்குச்சியில் பல்தேய்த்துக் கொண்டே ‘வாக்கிங்’ போனார். வர ஆறு மணியாகிவிட்ட்து. அன்றைக்கான கேஸ் கட்டுகளைப் பார்க்க அலமாரியைத் திறந்தார். நேற்றுப் பார்த்த கேஸ்கட்டு கையில் அகப்பட்ட்து. முடிந்துபோன கேஸ்தான். ஆனால் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். காமாட்சி நேற்றிரவு பேசிக் கொண்டிருக்கும்போது ஆறுதலாக அவள் கையைப் பிடித்த போது சரிந்துவிழுந்த முந்தானையும், உருண்டு திரண்டு நிற்கும் உடலும் ஞாபகம் வந்த்து. இன்றைக்கும் வருவாளா? வரவேண்டும். அவர் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த்து. இப்படியெல்லாம் நினைக்கக் கூடாதோ மகனும், மருமகளும் வீட்டில் இருக்கிறார்கள் மகள்கள்… அதற்கு மேல் யோசிக்க வேண்டாம் என்று நிறுத்தினார். ஆனாலும் காமாட்சி மீண்டும் நினைவில் வந்தாள். பஸ்ஸில் போகும்போதும், கோர்ட்டில் பேசும் போதும். எழுபதிலும் ஆசை அடங்குவதில்லை. அவளும் பாவம் தான். இருபது வருடங்களுக்கு மேலாக அவள் கணவன் இல்லாமல் தனியாக இருக்கிறாள். தன்னால் இரண்டு வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. சண்பகம் இறந்தது சமீபத்தில் தான் என்றாலும், அவளுக்கும் அவருக்கும் இருபது வருடங்களுக்கு மேலாகவே தனியாகத்தான் படுக்கை.

செண்பகம் இருக்கும் போது சண்டை போடவாவது பேச்சுக் கொடுப்பாள். இப்போது தனிமையும் அமைதியும் தான். குடும்பத்தில் பிள்ளைகள் மனைவி என்று கூட்டத்துடன் இருக்கும் போது அமைதி வேண்டும் என்று மனம் அல்லாடுகிறது. தனிமைதான் இனிமை என்று கனவு காண்கிறது. முதுமையில் தனிமையும், அமைதியும் வரும்போது அதுவே வதையாகிவிடுகிறது.

நாற்பது வருடங்களுக்கு மேலாக நோயுடன் போராடினாள். சொன்னதையெல்லாம் செய்தாள். இப்போது கூப்பிடக் கூட ஆள் இல்லை. ஆண்கள் பெண்கள் மீது சார்ந்து வாழ்ந்து வாழ்ந்து தனியாய் நிற்கும் வலுவிழந்து விடுகிறார்கள். மீண்டும் காமாட்சி நினைவில் வந்தாள். அவளுடன் வாழ முடிந்தால்.. அவளை வீட்டுக்குள் விட முடியுமா? சொந்த பந்தங்கள் கொத்திப் புடுங்கிவிடும்.

செண்பகத்தின் ஸ்பரிசம் பட்டு முப்பத்தைந்து வருடங்களிருக்கும். ரொம்ப வருஷங்களுக்கு முன் வெளியூர் போய்விட்டு வரும் நாட்களில் சாப்பிடாமல் காத்திருப்பாள். அப்புறம் சர்க்கரைவியாதி வந்த்திலிருந்து தான் சாப்பிட்டுவிட்டுக் காத்திருப்பாள். பிறகு சர்க்கரையுடன் மூச்சிறைப்பும் சேர்ந்து கொண்டது. இப்போது வெளியூர் போனால், சாப்பிட்டு விட்டுத்தான் ஊருக்குப் பஸ் ஏறுவார். ஹோட்டல் சாப்பாடு பிடித்துவிட்ட்து. வேறு வழியில்லை என்றால் தான் உள்ளூர்ச் சாப்பாடு. வாய் ருசி கேட்கிறது. மறந்து போன ருசிகள் மீண்டும் ஞாபகம் வருகின்றன. தொந்தரவு செய்கின்றன.

காமாட்சி எட்டு மணிக்கு வர ஆரம்பித்தாள். பத்துப் பதினொன்று வரை மாடியில் அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனாள். சிவசுவும், மருமகளும் தினமும் பார்த்துப் பார்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்கள்.
இன்றும் வந்திருந்தாள். சிவசு மாடியில் என்ன பேசிக் கிழிக்கிறார்கள் என்பதை மாடிப் படிகளில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“நாற்பது வருஷமாச்சு. தனியாத்தான் போராடிக்கிட்ருக்கேன்” அவள் சொன்னதற்கு பல அர்த்தங்கள். மூவருக்கும் புரிந்தது. அவளுக்குத் துணை தேவைப்படுகிறது என்பதையும், அதற்கு நீங்கள் தகுதியானவர் என்பதையும் அவள் உணர்த்தினாள் என்று சுந்தர்ராமன் அர்த்தப் படுத்திக் கொண்டார். “இந்தப் பொம்பளை அப்பாவை எப்படி வசப்படுத்த முனைகிறாள். அம்மா இறந்து போய் ஒருவருடம் முடிவதற்குள்… ச்ச்ச என்ன மனுஷன்யா’ என்று சிவசு கோபப்பட்டான். காமட்சிக்கு ஏதோ தினமும் நம்முடன் பேசிக் கொண்டிருக்க ஆள் கிடைத்ததே. எதுவரை போகுதென்று பார்க்கலாம். உதவிக்கு இந்த ஊரில் ஆள் வேண்டும். கொஞ்சம் ஆள் அதிகாரம் பலமுள்ள ஆளிருந்தால் தான் சமாளிக்க முடியும். ஒத்தப் பொம்பளை என்ன செய்யமுடியும். அவனவன் போய் நின்னாலே வழியுரானுக. ஒரு ஆள் துணையிருந்தா மத்த கழுதைகளாவது தொந்தரவு செய்யாமலிருக்கும்”
அவர் சொன்னார் “நானே ரொம்ப வருஷமாத் தனியாத்தான்.” பல வேளைகளில் சொற்களுக்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை. சூழ்நிலை அர்த்தம் தந்துவிடுகிறது. முப்பது வருடங்களுக்கு மேல் நோயாளி மனைவி. அவருக்கே மலைப்பாக இருந்தது. “நான் தான் பேசுகிறேனா? எனக்குள் இருக்கும் ஏதாவது பேசுகிறதா”
“எங்க வீட்டுக்கார்ர் போயி இருவது வருஷமாச்சு. என்னாலயே தனியா சமாளிக்க முடியல. ஆம்பள, அதுவும் எல்லாரிடம்மும் பழகிறவங்க இத்தனை வருஷமா எப்படி இருக்கிறீங்க. வாய்க்கு ருசியா சாப்பிட்டுப் பழகியிருப்பீங்க. இப்ப என்ன செய்வீங்க.”
“ஆமா மருமக சாப்பாடு காரசாரமில்ல. பத்தியச் சாப்பாடு மாதிரியிருக்கு. நல்லாச் சாப்பிட்டுப் பல நாள் ஆச்சு.”
“நான் நல்லாச் சமைப்பேன் சார். கொண்டு வாரேன். என் சாப்பாடு சாப்பிட்டுப் பாருங்க..இன்னைக்குக் கூடப் பாருங்க சார். சட்டியில இருந்து எண்ணை தெறிச்சி” சொல்லிக் கொண்டே வலக்கையை நீட்டி எண்ணை பட்டுப் புண்ணான கழுத்தையும் கழுத்துக்குகீழேயும் காட்டினாள். நல்ல வேளை சார். சேலையில் பட்டும் இந்த இடத்தில ஜாக்கெட்டில படல.” அவள் காட்டிய இடங்களில் கொப்புளங்கள் தெரிந்தன.
அதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, “களிம்பு வேணுமா” என்றார்
“இருந்தா குடுங்க. தடவிக்கிறேன்”

சிவசுவுக்கு அதற்கு மேல ஒன்றும் கேட்கவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது. என்னென்னவோ அர்த்தப் படுத்திக் கொண்டான். அப்பாவைப் பற்றி அப்படி நினைக்க அவனுக்கே வருத்தமாகத்தான் இருந்த்து. ஆனாலும், இந்த வயசுல இப்படி பண்வாகளா?” என்று வருத்தப் பட்டான். இன்னொரு பயம் வேறு தொத்திக் கொண்டது. ஏதாவது ஏடா கூடமா பண்ணிருவாரோ? கல்யாணம் தொடுப்புன்னு வச்சுக் கிட்டா, சொத்து என்னாவது. இந்தக் காலத்துப் பொம்பளைகள், அதுலயும் இவ… ரொம்ப மோசம்னு எல்லாரும் பேசிக்கிடுராங்க. என்ன செய்ய? அம்மா இன்னுங் கொஞ்ச நாள் கழித்துச் செத்திருக்கக் கூடாதா? பெருமூச்சு விட்டுக் கொண்டே படுக்கப் போனான்.
“அவுக என்ன இப்படிப் பேசிக்கிட்ருக்காக” மனைவி கேட்ட்தும் கோபத்தில் ஜிவ்வென்று முகம் சிவந்தது. “ஊரெல்லாம் வக்கீலய்யா எங்கையிலன்னு பேசிக்கிட்ருக்கா? அந்த தேவடியாள அடிச்சுத்தான் வெரட்டணும். இல்லாட்டி இவுகளை வீட்ல தனியா விட்டுப் பிரித்திரணும் அப்பந்தான் தெரியும்”. திட்டிக் கொண்டே மனைவியுடன் படுக்கையில் சாய்ந்தான். மனைவியில்லாமல் அவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரவில் மணி என்னவென்று தெரியவில்லை. தூக்கம் கலைந்துவிட்ட்து. விலகிக்கிடந்த வேட்டியை கட்டிக்கொண்டே மனைவியைப் பார்த்தான். கையையும் காலையும் எப்படியோ வைத்துக் கொண்டு, அசையாமல் கிடந்தாள். அப்பா ஞாபகம் வந்தது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா தனியாகத்தான் படுத்திருக்கிறார். அவருக்கு தேவையாக்க் கூட இருக்கலாம்.
இன்னொரு நாள் அமுக்கி வைத்த கோபம் வெளிப்பட்டுவிட்டது.
“யார் சொன்னா?”
“யார் சொல்லணும். அவ தான் ஊரெல்லாம் சொல்லிட்டுத் திரியறா. கோர்ட்ல ஒவ்வொருத்தனும் என்னப்பா இதெல்லாம். இவள அடி பின்னிருவமானு கேக்கறான்.’ சட்டென்று நிறுத்திவிட்டான். அப்பாவிடம் இப்படிப் பேசிப் பழக்கமில்லை.
“ஊர்ல இருக்கிறவன் என்னென்னமோ பேசுவான். அதுக்காக….அந்தம்மா ஏதோ பேசிக்கிட்ருக்க வருது. தொழில விட்டுட்டா அது கிட்டப் பேசிக்கிட்ருக்கேன். உன்னமாதிரி. கண்டவங்கிட்டயும் பிரயோசனமில்லாம. புள்ளை குட்டியிருக்கா.. மனுஷன் என்னதான் செய்யணுங்க” வெடித்துச் சீறிவிட்டார். பேசியதில் அவருக்கே பாதி நம்பிக்கையில்லை. அவனுக்கும் தான். நடுவில் குழந்தைகள் இல்லை என்பதை குத்திக் காட்டி விட்டார். “‘குழந்தைகள் இருந்தால் மட்டும் கொஞ்சிக் கிழிச்சிருவாக. எங்களுக்குத் தெரியாது. நாங்களும் இங்கதான இருந்தோம். வயசான காலத்தில இதெல்லாம் தேவையா? கேஸப் பாத்தமா, சாப்டமா தூங்னமான்னு இருக்க வேண்டியது தான“” அவன் முனகியது அடுத்த அறையிலிருக்கும் அவருக்கும் கேட்ட்து.
அவர் பதிலுக்கு அங்கிருந்தபடியே மருமகளுக்கும் கேட்கட்டும் என்று சத்தமாகச் சொன்னார் “எனக்குத் தெரியாததால? எழுவத்தைந்து வயசுல எத்தனை பேரைப் பாத்திருப்பேன். பேசுனாக்கில. என்ன? மனுஷன் யார்ட்டயும் பேசக்கூடாதா? எனக்கு புத்தி சொல்லுதீகளோ?”
அவர் சொல்லிக் கொண்டே இருந்தாலும் மனதில் இன்னொரு விதமாக யோசித்துக் கொண்டிருந்தார். ”மனுஷன் என்ன இன்னும் அஞ்சு வருஷமோ? பத்து வருஷமோ? வயசுக்கொத்த துணை வேண்டாம்னு எப்படிச் சொல்ல முடியும். பொண்டாட்டி செத்ததும் எல்லாத்தையும் உடனே மறந்திரணுமா? மிஷினா? சுட்ச ஆஃப் பண்ண? அதுக்கு முன்னாலயுந்தான் என்ன?”

செவ்வாய்க் கிழமை காலையில் கமட்சியம்மா மகளுடன் வந்து பெஞ்சில் உட்கார்ந்தாள். சிவசுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன புதுசு? என்று கோர்ட்டில் கேஸ் இல்லையே.
அப்பாவிடம் கேட்டான் “எங்க வெளியூர் எங்கயும் போறீகளா?”
“திருநெல்வேலிக்கு. கரிவலங் கேஸ் இருக்கு.”
“அந்தம்மா வந்திருக்கு. பிள்ளையோட.”
“அதுக்குந் திருநெல்வேலி போணுமாம் அதான் என்கூட வாங்கண்ணேன். வண்டியில போயிரலாம்ல”
“நான் தெங்காசி, சிவகிரி போவேண்டியிருக்கு. நீங்க பஸ்ல போகலாம்ல. ஒரு ஆளு தான” அவர் மட்டும் போனால் என்ன என்ற கேள்வி அதிலிருந்தது. ரொம்பத்தான் பெருசாகுது… என்று நினைத்துக் கொண்டான். .
“நான் சொல்லிவிட்ருந்தேன் அவங்களும் வந்துட்டாங்க. முதல்லயே சொல்ல வேண்டியது தான” என்று சிவசுவிடம் சொல்லிவிட்டு. டிரைவரிடம் “வண்டிய எடுங்க” சொல்லிவிட்டு காரில் ஏறினார்.. அவருடன் காமாட்சியும் அவள் மகளும்.

இந்த டிரைவரும் சொல்லியிருக்கலாம்ல. அவனும் கூட்டு” முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போனான். வாடகைக் கார் பிடித்துப் போக வேண்டும். அதைவிட இவர்கள் மூவரும் காரில் போவதை ஊர்க்கார்ர்கள் பார்த்து…” நினைக்கவே கசந்தது. பதில் சொல்லி முடியாது.
sunthar ராமனுக்குத் தெரியும். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். சின்ன வயதிலிருந்தே. தேவையிருந்தால் யாரோ மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் அப்பாவிடம் பேசிப் பழக்கம். செண்பகம் மட்டும் தான் எதிர்த்துக் கேட்பாள். இத்தனை வருஷங்களாக குடும்பத்துக்கு உழைத்துப் போட்டேன். எல்லாச் சுகத்தையும் பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுத்தேன். இப்ப யாரும் பாக்க நாதியில்ல. மருமக ஏதோ வித்தியாசமாப் பாக்கா. அவுக வீட்டுக்கே சொத்தேல்லாம் கொண்டுபோகணும்னு நினைக்கா. இவன் என்னடான்னா அவளுக்காக எங்கிட்ட எதுத்துப் பேசுறான். சும்மா தொணைக்கு ஒர் ஆள்ட்ட பேசினா, உடனே ஓன்னு கூப்பாடு. இத்தனை வருடம் எப்படி இருந்தேன்.. காமாட்சியம்மா பாவம். பிள்ளைய படிக்கவைக்க்க் கஷ்டப்படுது. அவளுக்கு உதவி செய்யலாம்ன்னா?”
காமாட்சியின் குரல் சிந்தனையைக்கலைத்த்து. “என்ன சார் பலமா யோசிக்கிறீங்க”.
“ஒண்ணும் இல்லம்மா”
“ஏதாவது பிரச்சனையா? எங்களாலயா?” அவள் புரிந்து கொண்ட்து ஆச்சரியமாக இருந்த்து.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பிள்ளைகளுக்கு எவ்வளவு செஞ்சிருக்கேன். எதாவது ஞாபகம் வருதா? உங்களைக் திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போறேன்னா கோப பொத்துக்கிட்டு வருது. எல்லாம் பிள்ளைகளையும் செட்டில் பண்ணியாச்சு. இனிமே எனக்கென்ன ? இவகளுக்கு அடிமையா?”
“கோப்ப்படாதீங்க சார். பிள்ளைகள் எவ்வளவு செஞ்சாலும் இப்படித்தான் பேசும். எங்களால உங்களுக்குத்தான் சார் கஷ்டம். இப்படித் தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்” பொய்யாகச் சடைத்துக் கொள்வது போல் அவருக்குப் பட்டாலும், கூட்டி வந்தபின் ஆறுதல் சொல்லவேண்டியிருக்கிறது. இது மாதிரி பெண்களுடன் அவர் ஆறுதலாகப் பேசியதில்லை. வயசானால் பக்குவம் வந்து விடுகிறது போலும். ஆனால் மனைவியிடம் இப்படிப் பேசியதில்லை. அது அவள் கடமை. அவளை, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது அவர் கடமை. செண்பகம் என்னைச் சரியாகத்தான் கவனித்துக் கொண்டாள். நான் அவளை நன்றாகத் தான் வைத்திருந்தேன். சண்டைகள் போடுவது மாதிரி, ஏதோ மூன்றாவது ஆடகள் மாதிரி, மற்றவர்கள் முன்னால் செண்பகமும் நானும் பேசிக் கொண்டாலும் கெடுதல் எதுவும் செய்து கொண்ட்தில்லை. ஆனால் காமாட்சி வேறு. பொழுதுபோகாமல் சினிமா பார்க்கிறது மாதிரி. ஒரே வித்தியாசம். சினிமாவில் வரும் வசனம் நானும் காமாட்சியும் பேசுகிறோம். இது எனக்குப் புதுசு. காமாட்சிக்கும் புதுசாக இருக்கலாம்.
மீண்டும் ஒருமுறை காமாட்சி சொன்னாள் “எங்களால உங்களுக்குக் கஷ்டம்”
“அதெல்லாம் இல்ல. எவன் என்ன கேப்பான்? என் இஷ்டம். நா என்ன கெட்ட்தா செய்யறேன் ஒளிச்சு ஒளிச்சு.. சின்னக் கழுதைகளுக் கென்ன? உங்க மகளைப் படிக்க வக்கது என் பொறுப்பு”
கோபத்தில் கேட்காத உறுதிமொழியை கொடுத்துவிட்டேனோ? என்று அவர் நினைத்தாலும், காமாட்சிக்கு அது ரொம்ப ஆறுதலாக இருந்த்து அவள் முகத்தில் தெரிந்த்து. அவள் மகளும் திருப்தியாக நன்றியுடன் பார்த்தாள்.
“பிள்ளைகளுக்கெல்லாம் நல்லாத்தான செஞ்சிருக்கீங்க. நல்லாப் படிச்சிருக்காங்க. நல்ல இட்த்துல கல்யாணம் முடிச்சிருக்காங்க. ஒரு குறை வக்கல்ல”.அந்தக் கேள்விகளில் வேறு ஏதோ தொனித்தது.
“ஆமா பெறகென்ன யாருக்காவது உதவி செய்யணும்ணாக்கூட பிள்ளைகள்ட்ட் கேட்கணுமா? என்னாலதான் இவுகல்லாம் முன்னுக்கு வந்தாங்க. அவங்களால நான் முன்னேறல இவுகளுக்கு நான் அடிமையா இருக்க.
அன்றிரவு வெளியூரில் சாப்பிட்டுவிட்டு, மூவரும் வந்திரங்கும் போது மணி பன்னீரண்டாகி விட்டது. சிவசு தூங்கவில்லை. அந்தப் பொம்பளை “போய்ட்டு வர்ரேன்”னு சொல்லும் போது அப்பா முகத்தில், குரலில் அமைதி தெரிந்தது.
சிவசு அம்மாவின் படத்தை வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான். எப்போதோ எடுத்த பட்த்தி மீண்டும் ப்ரிண்ட்போட்டு பிரேம் போட்டு சாமி படங்களின் நடுவில் மாட்டியிருந்தது. வரிசை வரிசையாக சுவரில் ஆணியடித்து மாட்டப்பட்ட படங்கள். செந்தூர் முருகன், பழனி முருகன், வில்லிபுத்தூர் ஆண்டாள், கோமதி அம்பாள், அப்பாவின் அப்பா, மதுரை மீனாட்சி, நெல்லை காந்திமதி.. இன்னும் பல.
அம்மாவுக்கு முதல் வருடத் திதி. அப்பாவும் பின்னால் உட்கார்ந்து இருந்தார். முகத்தில் களை இல்லை. அம்மாவின் நினைவில் இருக்க்க்கூடும். சிவசுவுக்கு காமாட்சி ஞாபகம் வந்தது. இவரா அப்படி? அம்மா இறந்த பின்னால் மனம் துணை தேடியிருக்கும். அது ஒன்றும் தப்பில்லை போலத் தோன்றினாலும், மனம் ஒப்பவில்லை. பெயர் கெட்டுவிடும். அப்பாவுக்கென்ன? பெயர் கெட்டால் என்ன குறைந்துவிடும்? ப்ராக்டீஸ இப்பவா தொடங்கிறாங்க? நல்லா சம்பாதிச்சாச்சு. ஆனால், ஊர் ஒன்று இருக்கிறதே. சொத்து போய்விடும் என்று பயம். திதி முடிந்து எல்லோரும் பேச விரும்பியதைப் பேசமுடியவில்லை. அப்பாவிடம் பேசிப் பழக்கமில்லை. அதுவும் இந்த மாதிரி விஷயம். அவர்களுக்குள்ளேயே குசுகுசுத்துக் கொண்டு கலைந்து போய்விட்டனர். போனில் விவாதங்கள் தொடர்ந்தன. அவளை அடித்து விரட்டலாமா? அவரைக் கட்டி வைத்து உதைக்கவா? ஊர் என்ன நினைக்கும்? ரகஸியமா கல்யாணம் முடிச்சுக்கிட்டா? சொத்துக் கேப்பாள்ள?
கொஞ்ச நாளில் அந்தப் பெண் வருவதை நிறுத்திவிட்டாள்.
சுந்தர்ராமன், அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்றுவிட்டு, இரவு வெகுநேரம் கழித்தே வருகிறார். அடிக்கடி இப்போது வெளியூர் செல்கிறார். காமாட்சியைப் பார்க்கப் போவதில்லை, அவளும் வருவதில்லை, என்று பிள்ளைகளும் மருமக்களும் திருப்திப்பட்டுக் கொண்டனர். புதுசு புதுசாய்ப் பெண்களைப் பார்ப்பதில் ஒன்றுமில்லை. அவர்களுக்குத் தெரியும். அவருக்கும் புரியும் யாராவது ஒருத்தியைக் காதலித்தால், அது தான் ஆபத்து. அதுவும் எல்லோருக்கும் தெரியும்படி.