Saturday, February 18, 2017

யாருமே ரசிக்காத
நகரத்து அரைநிலவு போலவே
யாருமே வாசிக்காத
யாரோ எழுதிய கவிதையும்
காத்திருக்கிறது
அதற்கு மணம் உண்டா
என்பதை யாரறிவார்?

பீநாறிப் பூக்களின்
கிறக்கத்தில் உறங்கும்
நாய்களின் குரைப்பு
ரசனையாகிறது

எத்தனை கோடி மனிதர்களோ
நசித்துப் பொடியாகி
மறைந்த பூமியின்
துகள்களில் அவர்களின்
வாழ்க்கை எழுதப்பட்டிருந்தாலும்
அவற்றின் மொழி தெரியாமல்
யார்தான் படிக்க முடியும்?

எழுதப்பட்ட கதைகளை விட
எழுதப்படாத வரலாறுகள்

எத்தனையோ?

1 comment:

  1. நிதர்சன உண்மை... வார்த்தை பிரயாேகம் மிக அருமை...

    ReplyDelete